சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும், ஓராண்டில் இந்த நடவடிக்கை நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசு போன்றவற்றை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் உருவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார். ஆனால் புவியின் வெப்பம் …
-
- 2 replies
- 417 views
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 288 views
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 425 views
-
-
ஜப்பானை நெருங்கி வரும் மேலும் இரண்டு புயல்கள் – மக்களுக்கு எச்சரிக்கை! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி ‘நியோகுரி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் இவ்வாண்டின் 20ஆவது புயலாகும். இந்த புயல் ரோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21ஆவது புயலாக ‘புலாய்’ எனும் புயல் வரும் 26ஆம் திகதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்க…
-
- 0 replies
- 736 views
-
-
உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல. உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை. என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன. பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அள…
-
- 1 reply
- 681 views
-
-
மறு அளவீடு செய்யப்படுகின்றது இமயமலையின் உயரம்! உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரத்தை மறு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை சீனாவும், நேபாளமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுகின்றன. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா ஆகியன இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கமைய சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 571 views
-
-
Image captionஜனனி சிவக்குமார் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான். தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட…
-
- 2 replies
- 781 views
-
-
சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று ம…
-
- 0 replies
- 460 views
-
-
ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…
-
- 0 replies
- 336 views
-
-
பலூன், பாட்டில்மூடி.. கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்.. இப்படியே போனால்..! புளோரிடா: அமெரிக்காவில் இறந்து போன கடல் ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து நூறுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயங்கி வருகிறது கம்போ லிம்போ இயற்கை மையம். இந்த மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்து உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கடல் ஆமை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளங்கை அளவே இருக்கும் அந்த ஆமையின் உயிரை காப்பாற்ற கம்போ லிம்போ இயற்கை மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த ஆமை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த ஆமையின் வயிற்றை அறுத்து பா…
-
- 0 replies
- 376 views
-
-
லண்டனில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாக கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, கார்பன் மோனாக்ஸைட் என்ற நச்சுவாயு வெளியேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கையாக 10 பேரை கைது செய்திருந்தனர். நேற்று செந்நிற உடையணிந்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் அங்குள்ள London's Marble Arch பகுதியில் அமைதி பேரணி நடத்தினர். தொடர்ந்து இன்று காலையும் பாதுகாப்பு அமைச்சகம் முன் பலர் மனிதசங்கிலி போல் வரிசையாக நின்று போ…
-
- 0 replies
- 334 views
-
-
தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நட்டி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, பின்னர் மறந்து விடுகின்ற இன்றைய காலகட்டத்தில், வரட்சியை குறைப்பதற்காக இப் பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை வரவேற்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார். மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் நேற்று (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதி…
-
- 1 reply
- 540 views
-
-
படத்தின் காப்புரிமை COPERNICUS DATA/SENTINEL-1/@STEFLHE அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி' பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 'பிறந்துள்ளது'. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடுவது போல இது கற்பனை அல்ல. இந்த பனியடுக்குப் பாறை குட்டி போட்டிருப்பது உண்மை. ஆங்கிலத்தில் இதனை 'கால்விங்' என்கிறார்கள். பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும்போ…
-
- 0 replies
- 682 views
-
-
காலநிலை மாற்றத்துக்காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் நேற்று உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெ…
-
- 7 replies
- 1.1k views
-
-
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு! கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் வெப்பமான காலநிலை நிலவிய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை கையாள்வதில் உலக மக்கள் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) வரை பல உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும…
-
- 0 replies
- 300 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். என்ன பனிப்பாறை காணாமல் போய்விட்டதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது காணாமல் போகவில்லை பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதல் பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிட்ஸர்லாந்தின் க்ளாரஸ் ஆல்ப்ஸ் உள்ளது .இந்த பனிப்பாறையானது, 2006ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 80% காணாமல் போய்விட்டது…
-
- 0 replies
- 377 views
-
-
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறு…
-
- 4 replies
- 471 views
-
-
பருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை உலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறுத்துவதாக இருக்கின்றது என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் கிங் தெரிவித்துள்ளார். அந்த விளைவுகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே நேர்வதாக அவர் BBC செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரித்தானியா தனது பருவநிலை மாற்றம் குறித்த இலக்குகளைப் பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால், இவ்வளவ…
-
- 0 replies
- 300 views
-
-
பசுமைப் பள்ளிகள் எனும் பெயரில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, இயற்கையை வளர்த்தெடுக்கும் கல்வி அதிகாரி. "என் சின்ன வயதில் நிறைய மரங்கள் இருந்த இடங்களில் எல்லாம், இப்போது ஒரு மரத்தையும் பார்க்க முடியவில்லை" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் விழுப்புரம் மாவட்டக் கல்வி அதிகாரி முனுசாமி. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டும் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், மாவட்டக் கல்வி அதிகாரியே முழு வீச்சோடு இந்தப் பணியை மேற்கொள்கிறார் என்பது ஆச்சர்யமானதுதானே! "எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள பூலாமேடு கிராமம். எங்க ஊரில் நிறைய மரங்கள் இருக்கும். அதோட வளர்ந்தவன் நான். இப்போ ஊருக்குப் போனால், மரங்களே ரொம்ப ரொம்பக் குறைஞ்சிபோயிருந்துச்சு.…
-
- 0 replies
- 368 views
-
-
தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி! திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்ற…
-
- 0 replies
- 508 views
-
-
2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்! பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பிலிப்பைன்சில் ஒரு கிலோ அரிசி இலங்கை மதிப்பில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் நன்மை பயக்கும…
-
- 0 replies
- 426 views
-
-
-
- 0 replies
- 352 views
-
-
சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரிலும் அது தாக்கம் செலுத்தலாம் என்று சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மிதமான புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமத்ரா தீவுகளில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புகைமூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் திரண்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில மணிநேரங்களில் காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினு…
-
- 1 reply
- 376 views
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 432 views
-
-
2036 இல் காட்டப்போகும் உண்மையான வடக்கு திசை..! கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையும் நமக்கு தெரியும். யாரையாவது நம் அருகில் அழைத்து திசையை காண்பிக்க சொன்னால் தத்ரூபமாக சொல்லிவிடுவார்கள்... இந்த திசை கிழக்கு இதற்கு எதிர் திசை மேற்கு என்றும், இந்த திசை வடக்கு இதற்கு எதிர் திசை தெற்கு என .. ஆனால் நாம் சொல்லிக் கொடுத்திருக்கும் திசையும் காம்பஸ் காட்டும் திசையும் மாறுபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் நேரம் மற்றும் அதன் திசைகான அளவீட்டை 1676 ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்படுகிறது. இது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பூமியின் காந்தப்புலத்தின் வடக்கு திசைக்கும் காந்த முள் காட்டும் வடக்கு த…
-
- 2 replies
- 1.5k views
-