சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
Image captionஜனனி சிவக்குமார் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான். தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட…
-
- 2 replies
- 769 views
-
-
சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று ம…
-
- 0 replies
- 446 views
-
-
ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…
-
- 0 replies
- 320 views
-
-
பலூன், பாட்டில்மூடி.. கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்.. இப்படியே போனால்..! புளோரிடா: அமெரிக்காவில் இறந்து போன கடல் ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து நூறுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயங்கி வருகிறது கம்போ லிம்போ இயற்கை மையம். இந்த மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்து உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கடல் ஆமை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளங்கை அளவே இருக்கும் அந்த ஆமையின் உயிரை காப்பாற்ற கம்போ லிம்போ இயற்கை மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த ஆமை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த ஆமையின் வயிற்றை அறுத்து பா…
-
- 0 replies
- 360 views
-
-
லண்டனில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாக கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, கார்பன் மோனாக்ஸைட் என்ற நச்சுவாயு வெளியேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கையாக 10 பேரை கைது செய்திருந்தனர். நேற்று செந்நிற உடையணிந்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் அங்குள்ள London's Marble Arch பகுதியில் அமைதி பேரணி நடத்தினர். தொடர்ந்து இன்று காலையும் பாதுகாப்பு அமைச்சகம் முன் பலர் மனிதசங்கிலி போல் வரிசையாக நின்று போ…
-
- 0 replies
- 319 views
-
-
தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நட்டி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, பின்னர் மறந்து விடுகின்ற இன்றைய காலகட்டத்தில், வரட்சியை குறைப்பதற்காக இப் பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை வரவேற்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார். மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் நேற்று (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதி…
-
- 1 reply
- 526 views
-
-
படத்தின் காப்புரிமை COPERNICUS DATA/SENTINEL-1/@STEFLHE அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி' பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 'பிறந்துள்ளது'. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடுவது போல இது கற்பனை அல்ல. இந்த பனியடுக்குப் பாறை குட்டி போட்டிருப்பது உண்மை. ஆங்கிலத்தில் இதனை 'கால்விங்' என்கிறார்கள். பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும்போ…
-
- 0 replies
- 668 views
-
-
காலநிலை மாற்றத்துக்காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் நேற்று உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெ…
-
- 7 replies
- 1k views
-
-
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு! கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் வெப்பமான காலநிலை நிலவிய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை கையாள்வதில் உலக மக்கள் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) வரை பல உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும…
-
- 0 replies
- 288 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். என்ன பனிப்பாறை காணாமல் போய்விட்டதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது காணாமல் போகவில்லை பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதல் பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிட்ஸர்லாந்தின் க்ளாரஸ் ஆல்ப்ஸ் உள்ளது .இந்த பனிப்பாறையானது, 2006ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 80% காணாமல் போய்விட்டது…
-
- 0 replies
- 359 views
-
-
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறு…
-
- 4 replies
- 468 views
-
-
பருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை உலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறுத்துவதாக இருக்கின்றது என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் கிங் தெரிவித்துள்ளார். அந்த விளைவுகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே நேர்வதாக அவர் BBC செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரித்தானியா தனது பருவநிலை மாற்றம் குறித்த இலக்குகளைப் பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால், இவ்வளவ…
-
- 0 replies
- 297 views
-
-
பசுமைப் பள்ளிகள் எனும் பெயரில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, இயற்கையை வளர்த்தெடுக்கும் கல்வி அதிகாரி. "என் சின்ன வயதில் நிறைய மரங்கள் இருந்த இடங்களில் எல்லாம், இப்போது ஒரு மரத்தையும் பார்க்க முடியவில்லை" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் விழுப்புரம் மாவட்டக் கல்வி அதிகாரி முனுசாமி. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டும் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், மாவட்டக் கல்வி அதிகாரியே முழு வீச்சோடு இந்தப் பணியை மேற்கொள்கிறார் என்பது ஆச்சர்யமானதுதானே! "எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள பூலாமேடு கிராமம். எங்க ஊரில் நிறைய மரங்கள் இருக்கும். அதோட வளர்ந்தவன் நான். இப்போ ஊருக்குப் போனால், மரங்களே ரொம்ப ரொம்பக் குறைஞ்சிபோயிருந்துச்சு.…
-
- 0 replies
- 365 views
-
-
தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி! திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்ற…
-
- 0 replies
- 506 views
-
-
2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்! பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பிலிப்பைன்சில் ஒரு கிலோ அரிசி இலங்கை மதிப்பில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் நன்மை பயக்கும…
-
- 0 replies
- 423 views
-
-
-
- 0 replies
- 344 views
-
-
சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரிலும் அது தாக்கம் செலுத்தலாம் என்று சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மிதமான புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமத்ரா தீவுகளில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புகைமூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் திரண்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில மணிநேரங்களில் காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினு…
-
- 1 reply
- 372 views
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 426 views
-
-
2036 இல் காட்டப்போகும் உண்மையான வடக்கு திசை..! கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையும் நமக்கு தெரியும். யாரையாவது நம் அருகில் அழைத்து திசையை காண்பிக்க சொன்னால் தத்ரூபமாக சொல்லிவிடுவார்கள்... இந்த திசை கிழக்கு இதற்கு எதிர் திசை மேற்கு என்றும், இந்த திசை வடக்கு இதற்கு எதிர் திசை தெற்கு என .. ஆனால் நாம் சொல்லிக் கொடுத்திருக்கும் திசையும் காம்பஸ் காட்டும் திசையும் மாறுபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் நேரம் மற்றும் அதன் திசைகான அளவீட்டை 1676 ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்படுகிறது. இது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பூமியின் காந்தப்புலத்தின் வடக்கு திசைக்கும் காந்த முள் காட்டும் வடக்கு த…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த வெயில் காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை அங்கு இருந்திராத வெப்பநிலை பதிவானது. ஆனால், இதனா…
-
- 1 reply
- 320 views
-
-
அமேசன் காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்து September 8, 2019 அமேசன் காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஏழு நாடுகளும் ஏற்கனவே பழங்குடியின மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வாண்டில் மட்டும் அமேசன் காடுகளில் 80,000 தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
இங்கிலாந்தில் இறந்தபடி கரையொதுங்கும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இங்கிலாந்தின் கடற்கரையோரங்களில் இறந்தபடி கரையொதுங்கும் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் ஆயிரம் கடல் விலங்குகள் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் கடல் பன்றிகள் என நான்காயிரத்து 896 விலங்குகள் இறந்த நிலையில் கரையொதுங்கியதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த எண்ணிக்கையானது 2011 இற்கு முன்பதான 7 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகரிப்பாகும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய்கள…
-
- 0 replies
- 236 views
-
-
படத்தின் காப்புரிமை DAVID SCHNEIDER, HERPETOLOGICAL ASSOCIATES இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன. 'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல…
-
- 0 replies
- 289 views
-
-
அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்! அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமேசன் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் 51 சதவீதத்திற்கும் அதிகமான தீ விபத்து அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அமேசன் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கு பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலக கடல் மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவான மிகப் பெரிய பனிப்பாறை உருகியது! கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், சராசரி உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004…
-
- 0 replies
- 285 views
-