சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
கார்காலம் கார்காலம் குறித்து பாமயன் அவர்களின் உரை முன்பனிக் காலம் குறித்து நக்கீரன்அவர்களின் உரை
-
- 0 replies
- 1.6k views
-
-
காலநிலை மாற்றத்தால் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருகுகின்றனவா? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்குத்தொடர்ச்சி மலையில் நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பரப்பு குறைய ஆக்கிரமிப்புத் தாவரங்களும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன உலகளவில் காடுகள் அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடந்த ஐ.நாவின் 26வது காலநிலை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பூமியின் காடுகளைப் பா…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! தேவிபாரதி புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடல…
-
- 0 replies
- 502 views
-
-
பட மூலாதாரம், Courtesy of Tel Aviv University படக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை 'ஸ்குல் I' (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல் இசபெல் காரோ பிபிசி முண்டோ 22 நவம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது. 140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள் ஒன்றில் கண்டறியப்பட்டது. மிகப் பழமையான கல்லறையாக அறியப்படும் இந்தக் குகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஓர் பகுதியாக இந்த மண்ட…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவது பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRESS EYE பட்டாம்பூச்சிகளை பொறுத்தவரை, அவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதையும் தாண்டி அவற்றால் சூழலுக்கு நன்மைகள் பல விளைகின்றன. அத்தகைய நன்மைகளைப் பயக்கும் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது பூமியின் சுற்றுச்சூழலில் என்ன விளைவை ஏற்படுத்தும்? பட்டாம்பூச்சி, தேனீ, குளவி போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் எண்ணிக்கையில் குறைவது உணவு உற்பத்தியை பாதிக்குமா? இன்றைய சூழலில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை "கவலைக்குரிய வகையில் குறைவாக உள்ளதாகவும…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
பூமியின் காந்த வடதுருவம் ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிப்பு! பூமியின் காந்த வடதுருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விஸ்கன்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அண்மைக் காலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில் இது நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இரு…
-
- 0 replies
- 322 views
-
-
50 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியக்கூடும் என எச்சரிக்கை! எதிர்வரும் 50 வருடங்களில் உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு அழியக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இது தொடர்பான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. உலகெங்கிலும் 19 பருவ நிலைகள் உள்ள இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, குறித்த இடங்களில் பருவ நிலைகளில் ஏற்படும் மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழ…
-
- 0 replies
- 242 views
-
-
ஆச்சர்யமூட்டும் அமெரிக்க கிராமம்!! | No Electricity, No mobile | Kaipulla in america
-
- 0 replies
- 708 views
-
-
சுற்றுச்சூழல் ,பருவநிலை மாற்றம் குறித்து ஐநா,சபை நடத்திய மிக நீளமான பேச்சுவார்த்தைகள் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நீண்ட நேரம் நீடித்த பேச்சுகளால் சலிப்படைந்து கார்பன் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா.சபையின் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெறும்.அதற்குள் அனைத்து நாடுகளும் கார்பன் அமிலத்தை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐநா.சபை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93002/ஐநா.சபையின்-பருவநிலைகுறித்தபேச்சுவார்த்தையில்எந்தவித-உடன்பாடும்எட்டப்படாமல்-நிற…
-
- 0 replies
- 269 views
-
-
பட மூலாதாரம்,ESA கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 22 மே 2024, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலில் உள்ள பைட்டோ பிளாங்டன் (phytoplankton) என்னும் உயிரிகளின் பரவலில் சம நிலை குலைந்து, கடல்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் கடலை சித்தரித்து வரையும் போது, ஒளிரும் பசும் நீல நிறத்தில் கடல் நீரை கற்பனை செய்து வண்ணம் தீட்டி இருக்கிறீர்களா? நினைத்து பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் நமது பிரபஞ்சத்தின் பெருங்கடல்களில் சில பகுதிகள் உண்மையில் பசுமை நிறமாக மாறும் சாத்தியங்கள் இருப்பதாக சமீபத்திய…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களை அடுத்து வருகிறது எலன் புயல் சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களைத் தொடர்ந்து எலன் புயல் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பிரித்தானியா முழுவதும் பேரழிவு ஏற்பட்ட நிலையில் புதிய புயலான எலன் இங்கிலாந்தைத் தாக்கவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் தீவிரமான வானிலை நிலவிவருகின்றது. முதலில் வீசிய சியாரா புயல் காரணமாக லண்டன் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வலையமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து டென்னிஸ் புயல் லண்டனில் 50 மைல் வேகத்தில் வீசியது. அத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்கள் முழுவதும் கடுமையான மழை பெய்தத…
-
- 0 replies
- 294 views
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 279 views
-
-
-
கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக்கை உண்பதை கேள்விப்படுகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகட்டுப்படுத்தாவிட்டால், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அடுத்த பத்தாண்டுகளில் மும்மடங்காகும். அதற்குக் காரணம்…
-
- 0 replies
- 492 views
-
-
ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா (UK) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது. இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எ…
-
- 0 replies
- 343 views
-
-
காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு 'நோபல்' பரிசு ஏன்? ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN RADCLIFFE காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் நாட்டில் இருக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு, நடைபாதையில் வீசப்பட்ட சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியா மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் வியக்கும் வகையில் ஒரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரின் அருகில், பிரேசம்ஸ்காட் நதியில் சுமார் 91 மீட்டர் அகலமுள்ள, மாபெரும் வட்ட வடிவப் பனித் தகடு உருவாகியுள்ளது. இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வு, வேற்றுகிரக விண்கலம் அல்லது நிலா போல காட்சியளிக்கிறது. படத்தின் காப்புரிமை City of Westbrook/ FB தண்ணீரின் வெப்பநிலையில் மாறும் போது, அதன் அடியில் ஒரு சுழல் போல உருவாகி, வட்ட வட…
-
- 0 replies
- 579 views
-
-
கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை. கனடாவில் சஸ்கட்சிவான் (Saskatchewan) , மனிடோபா(Manitoba) , பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அல்பிரட்டா(Alberta) மற்றும் ஒன்டாரியோ ( Ontario) மாகாணங்களில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மு…
-
- 0 replies
- 183 views
-
-
அறிவியல் அதிசயம்: உலகின் மிக நீளமான தாவரம் - ஒரே விதையிலிருந்து உருவானது டிஃப்பேனி டர்ன்புல் பிபிசி செய்திகள், சிட்னி 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RACHEL AUSTIN அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
கடந்த 70 ஆண்டுகளில்... இல்லாத அளவுக்கு, இத்தாலியில் கடுமையான வறட்சி! கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக 36.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, வறட்சி இத்தாலியின் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை அச்சுறுத்துகிறது. பல நகராட்சிகள் ஏற்கனவே குடிநீர் வி…
-
- 0 replies
- 336 views
-
-
இங்கிலாந்தில்.... தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை! இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘தேசிய அவசரநிலை’ எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவ…
-
- 0 replies
- 316 views
-
-
பருவநிலை மாற்றம்: 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து மற்றும் பிற செய்திகள் Getty Images முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் "தாங்கிக் கொள்ள முடியாத" வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6000 ஆண்டுகாலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதையே இது காட்டுகிறது. இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 519 views
-
-
சிட்னியை... தடம்புரட்டிய வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்! அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
-
- 0 replies
- 361 views
-
-
காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM LAMONT படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் ஒலிப்பதிவு கருவியை பவளப்பாறைகளில் பொருத்தி வைத்தார்கள் இந்தோனீசியாவில் மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுக்கேட்டனர். அந்த ஒலிப்பதிவுகளில், "கூக்குரல், கரகரப்பொலி, உறுமல்" போன்ற ஓசைகளைக் கேட்டதாகவும் பவளப்பாறைகள் மீண்டு வருவதன் அடையாளமாக இது இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு புதிய பவளப்பாறைகள் மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் தரைத்தளத்தில் பதிவு செய்யக்கூடிய ஒ…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை உலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறுத்துவதாக இருக்கின்றது என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் கிங் தெரிவித்துள்ளார். அந்த விளைவுகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே நேர்வதாக அவர் BBC செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரித்தானியா தனது பருவநிலை மாற்றம் குறித்த இலக்குகளைப் பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால், இவ்வளவ…
-
- 0 replies
- 297 views
-