Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மஹாகவியின் கிராமம் ஜூன் 27, 2021 –எம்.ஏ.நுஃமான் இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ…

  2. நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன் மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…

  3. நான் அவனல்ல . பாடியவர்: மாற்பித்தியார் புறநானூறு 252 SANGAM POEM PURANANURU 252 WITH ENGLISH TRANSLATION by M.L. Thangappa . (பொறுப்பு விலகல்: இது என்னைப்பற்றிய கவிதை அல்ல, DISCLAIMER: THIS IS NOT A POEM ABOUT ME.) . கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. 5 . ஒலித்துக்கொண்டு வீழும் வெள்ளைநிற அருவிநீர் தலையில் தங்கி ஈரம் புலராமல் இருப்பதால் நிறம் மாறித் தில்லைக்காய் போன்ற திரி சடையுடன் காணப்படும் இவன் இன்று அப்பாவிபோல செறிந்த இலையினை உடைய தாளி இலையைப் பறித்து கொண்டிருக்கிறான். இவன் முன்னொரு நாளில் இல்லங்களில் நடமா…

    • 1 reply
    • 880 views
  4. இனப்படுகொலையைச் சந்தித்த இனத்தைச் சார்ந்த ஒருவனின் கண்களிற்கு குருதிச் சிவப்புநிற மாலைச் சூரியனை பார்க்க நேர்கையில் எத்தகையை காட்சிகளை அது தோற்றுவிக்கும்? என்பதனை வரிகளில் நான் எழுதி இருக்கிறேன், மகாகலைஞன் சித்தன் ஜெயமூர்த்தி இசையமைத்து பாடியிருக்கிறார், நந்திக்கடற்கரையில் மெளனித்துப் போன வீரயுகவரலாற்றை மாலைச் சூரியனின் சிவப்பு நிறத்திற்குள்ளால் பார்க்கிறேன்..

  5. ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து – அனோஜன் பாலகிருஷ்ணன் July 12, 2019 நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில் அவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு. ஒருவர்…

  6. 🎧 விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! காதோடு உறவாடும்,புல்லாங்குழல்! தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்! மௌனமாக இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல்! உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல்! காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல்! இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல்! எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப் விழிகள் …

  7. நெருங்கின பொருள் : வெற்றிராஜா ‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்…

  8. பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம் by ம.நவீன் • January 1, 2021 http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/06/peychi-10015359-550x550h.jpeg 19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன். அப்போது நான் ஈப்போவில் உள்ள என் மாமா வீட்டில் இருந்தேன். உடன் போப்பியும் இருந்தான். என்னை விட்டுப் பிரிந்திருப…

  9. பழைய நேரலைக் காட்சி என்றுமே எனக்கு பிடித்ததால் சிலர் பகிர்ந்ததால் நான் பகிர்ந்திட்டேன்...

  10. புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.…

  11. விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம் - நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் காலம் செல்வம் அருளானந்தம் அவர்களுடனான இந்த நேர்காணல் தொலைபேசி வழியாக உரையாடிப் பெறப்பட்டது. செல்வம் அருளானந்தம் பகிடி உங்களது எழுத்துகளில் மட்டுமல்ல உங்களது பேச்சிலும் உள்ளது. துயரம் நிறைந்த அகதிவாழ்க்கை இதனைக் கற்றுத் தந்ததா? அல்லது இளம் பருவத்திலிருந்து உங்களோடு வருவதா? இதிலிருந்து நேர்காணலை ஆரம்பிப்போம். அது இயல்பானது என்று தான் நான் நினைக்கின்றேன். நான் ஒரு இடத்திலும் கற்றுக்கொள்ளவில்லை. அப்படி கதைக்கிற ஆட்களும் மிகக் குறைவு. எவ்வளவு பிரச்சினையான விடயத்தையும், எவ்வளவு துயரமான விடயத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாகச் சொன்னால் நல்லது என்று த…

  12. நேர்காணல்: கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன் May 10, 2020 கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். பல ஆவணப்படங்களை இயக்கிய இவர் இப்போது திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். ஈழத்தில் கவிஞர்கள் அதிகம், எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. ஆனால் உங்கள் துறையான ஆவணப்பட இயக்கம் சார்ந்து செயற்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் பெரியளவில் முன் வருவதில்லை. எப்படி ஆவணப்படங்களை உருவாக்க வேண்டுமென …

  13. புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா பதாகைOctober 6, 2020 (புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி) எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரத…

  14. இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன் உரையாடல் அனோஜன் பாலகிருஷ்ணன் லெயிட்டஸ்டோனில் அமைத்திருக்கும் Alfred Hitchcock பப்பில் என்னை மாலை சந்திப்பதாக சேனன் சொல்லியிருந்தார். போய்ச் சேர்ந்தபோது கறுத்த குளிரங்கியை அணிந்தவாறு கடும் களைப்புடன் அவருடைய வேலைத் தளத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தார். Alfred Hitchcock இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு சென்று திரைப்படங்களை இயக்கியவர். அவர் எடுத்த சைக்கோ திரைப்படம் பெரும் புகழ்பெற்றது. அவர் சிறுவயதில் வளர்ந்த வீட்டைத்தான் விடுதியாக மாற்றியிருந்தார்கள். அந்த விடுதியில் இரண்டு கின்னஸ் ஸ்டவுட் பியரை ஓடர் செய்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தோம். வெளியே குளிர் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ச…

  15. இளையராஜாவும் சினிமாவுக்குப் போன சித்தாளும் "எனது எழுத்துக்கள் எல்லாமே எவர் எவர் மனத்தையோ உறுத்தும். அந்த உறுத்தல் நல்லது. அதற்கு நானா பொறுப்பு? 'பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்' என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் 'பொழுதுபோக்கும்' 'கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும்' ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும் இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா?" தமிழகமே எம்ஜியார் எனும் மந்திரத்தால் கட்டுண்டு கிடந்த போது சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட கலைஞனாக ஞானாவேசத்தோடு, ஆனால் மிகக் குன்றிய இலக்கியத் தரத்தோடு, ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' கத…

  16. மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/

  17. https://youtu.be/Hs77KPdoSWk மாதாந்தம் நடைபெறும் இந்த நேரலை நிகழச்சியை உலகெங்கும் உள்ள தமிழர்களின் நிகழ்வுகளை எடுத்து லண்டனில் இருந்து தொகுத்து வழங்குகிறார்கள்.

  18. மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் [கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ…

  19. வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு June 12, 2019 என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன் அமெரிக்காவின் வடக்கு வெர்ஜீனியா (Northern Verginia) மாநிலத்தில் ஒரு அமைதியான கிராமம் ஆஷ்பேர்ண். இங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கான சிறிய பள்ளியொன்றின் சுவர்களில் செப்டெம்பர் 2016இல், சில விஷமிகளால் இனவாத சுலோகங்கள் இரவோடிரவாக எழுதப்பட்டிருந்தன. இச்செயலானது அங்கு தலைதூக்கியிருந்த கறுப்பினத்தவருக்கு எதிரான KKK இனவாத இயக்கத்தின் கைவரிசையெனவே ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பினர். ஆனால் அந்தக் கிறுக்கல்களுக்கிடையே டைனோசர்களினதும் வேறு சில்லறைத்தனமான அடையாளங்களையும் கூர்ந்து அவதானித்த பாதுகாப்புத்துறையினர், இலகுவில் உண்மைக் குற்றவாளி…

  20. கவிஞர், எழுத்தாளர், கலை - இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான ஓர் இலக்கிய நேர்காணல். ====================== 01) கேள்வி :- இலங்கை மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் விருது இம்முறை அதாவது "இரா.உதயணன் இலக்கிய விருது - 2018" தங்களது 'விளைச்சல்' எனும் குறுங்காவிய நூலுக்கு வழங்கப்பட்டுள்ளதே. இந்த "விளைச்சல்" குறுங்காவியம் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா ? பதில் :- "விளைச்சல்" குறுங்காவியம் கவிஞர் நீலாவணன் எழுதிய 'வேளாண்மை'க் காவியத்தின் தொடர்ச்சியாகும். கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னா…

    • 0 replies
    • 759 views
  21. நேர்காணல்-லறீனா, நேர்கண்டவர் - கோமகன் “அடுத்தவர் நமக்கான களங்களை, வெளிகளை உருவாக்கித் தரும்வரை காத்துக்கொண்டு இருக்காமல், பெண்கள் தமது அறிவையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொண்டு, அவற்றைச் சமூகமயப்படுத்துவதற்கான வெளியைத் தாமே கட்டமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்”. லறீனா 000000000000000000000000 வணக்கம் வாசகர்களே , இந்த வருட ஆரம்பத்தில் தாயகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் தமிழ் முஸ்லிம் உறவுகள் முறுகல் நிலையையும் இரு சமூகங்களுக்கு இடையே பாரிய இடைவெளியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் கண்டு ஒரு இலக்கியனாக மிகவும் கவலையும் அயர்ச்சியும் கொண்டிருந்தேன். இருபக்கத்திற்கும் பொதுவான விடயங்கள் கலந்துரையாடல்கள் மூலம் பொதுவெளிக்கு கொண்டுவ…

  22. கல்வலைக்கோடுகள் July 19, 2021 எனக்கு மூன்று வயதிருக்கும், அன்றெல்லாம் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றை வாங்குவார்கள். அனேகமாக தினமும் ஒரு வார இதழ். அன்று வந்தது விகடன் தீபாவளி மலர். பேப்பர்போடும் மாமாவிடமிருந்து இதழை வாங்கி கொண்டுவந்து ஒட்டுத்திண்ணையில் வைத்து பிரித்து படம்பார்க்கலானேன். நடுப்பக்கத்தில் நான் கண்ட ஒரு கோட்டோவியம் இன்றும் மூச்சடைக்கவைக்கும் துல்லியத்துடன் நினைவிருக்கிறது. சில்பி வரைந்த அகோரவீரபத்ரன். அதன்பின் பலமுறை நான் மதுரை சென்று அகோரவீரபத்ரரின் முன் நின்றிருக்கிறேன். உக்கிரமும் குழைவும், கொடூரமும் அருளும் ஒன்றே என முயங்கும் அச்சிற்ப அற்புதம் ஒரு கனவு அழியாமல் அசைவிலாமல் நிலைகொண்டிருப்பதுப…

  23. படம் : மீனவ நண்பன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : முத்துலிங்கம் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலை மானும் நானல்லவோ அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள்…

    • 0 replies
    • 738 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.