Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேருக்கு சிகிச்சை! கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாடுமுழுவதும் விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 146,704 பயணிகளுக்…

  2. தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமனம் தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாரென அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி காலியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு சிலரின் பெயர்கள் கூறப்பட்டன இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகனை நியமித்து, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். வக்கீலான முருகன் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்படுவேன். தலை…

  3. படத்தின் காப்புரிமை Nicolò Campo கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீநித்தின் ஜெயபால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இத்தாலியில் சிக்கியுள்ளார். இந்தியாவிற்கு திரும்புவதற்கான உதவிகள் வேண்டி பலமுறை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொள்வதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்துள்ளார். "நான் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று வருவேன். பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையிலிருந்து இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு வந்தேன். பயணத்திட்டத்தின்படி மார்ச் 14ஆம் தேதி இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதாக இருந்தது. ஆனால், இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து நான்கு நாட்க…

    • 0 replies
    • 567 views
  4. பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடைகள் மற்றும் நிறுவனங்கள் வைக்கும் பெயர் பலகையில் முதல் எழுத்துக்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலார் ஆணையம் தெரிவித்து உள்ள…

  5. ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினியின் மனு தள்ளுபடியானது! March 11, 2020 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ரொபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் சிறை வைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர…

  6. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்திலிருந்து எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற 17 தமிழர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாகப் அவர்கள் பயணித்த கப்பலிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நைல் நதியில் மிதந்தவாறு எகிப்து நாட்டைச் சுற்றி பார்க்க 'ஏ சாரா' எனும் சொகுசு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாட்களோடு கடந்த வாரம் அஸ்வான் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, லக்சர் நகரத்தை அடைந்தபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன். …

    • 0 replies
    • 327 views
  7. "அமாவாசை" பின்னால் போகாதீங்க ரஜினி.. நாகராஜ சோழனாகி விடுவார்கள்.. தமிழருவி மணியன் வார்னிங் .! சென்னை: ரஜினி எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.. ஒருநாளும் இந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்.. ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.. கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டுள்ளார். விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது... இதில் " ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன ? " என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்…

  8. திருப்பூர்: ''உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவே பேசுவேன்,'' என்று, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் பேசினார். திருப்பூர் அருகே மங்கலத்தில், 'இந்து மக்கள் கூட்டமைப்பு' சார்பில் நடந்த, குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில், இவர் பேசிதாவது:நான் திருப்பூர் வரும் முன் கொலை மிரட்டல் வந்தது; எனது வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடந்தது. தேச ஒற்றுமைக்காக வாழ்வது தான், உண்மையான மத நல்லிணக்கம். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் இருக்க கூடிய, இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இஸ்லாம் மக்களை நேசிக்க கூடிய இந்து சகோதரர்கள் எல்லாம், உங்களை வெறுக்கும் நிலையில் உங்கள் போராட்டம் உள்ளது. குடியுரிமை சட்டத்தால்…

    • 1 reply
    • 345 views
  9. கொரோனா தாக்கம் : சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இரத்து! கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. இதன்படி குவைட், ஹொங்கொங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக குவைத், ஹொங்கொங், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித …

  10. கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்: கச்சதீவு திருவிழா ஒரு பார்வை J.A. George கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்துக்கு மத்தியில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும…

    • 0 replies
    • 389 views
  11. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க! by : Krushnamoorthy Dushanthini நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதன்படி அக்கட்சி சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும் அ.தி.மு.க கூட்டணி சார்பில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்“ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 26.3.2020 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தே…

    • 0 replies
    • 430 views
  12. விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்து விடும்... நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார். வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு தடுப்பூசியை ஆய்வு செய்து வரும் ஸ்டாலின் ராஜ், ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார்.கொரோனோ என்ற ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த நாடுகளையும் அல…

  13. கொரொனா தொற்று – சென்னையில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி சென்னையில் 15 வயது சிறுவன் உட்பட இருவா் கொரொனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இருவரது ரத்த மாதிரிகளும் சென்னை கிங் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவருக்கு அத்தகைய அறிகுறிகள் இருப்பதால், மாநிலம் முழுவதும் தீவிர மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 39 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா…

  14. நூலிழையில் தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜு.. புதிய ரவுண்டானா இடிந்து வாய்க்காலில் விழுந்த அதிமுகவினர் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடந்தத…

  15. சென்னை: மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன், சென்னை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 நாட்கள் திமுக துக்கம் அனுசரிக்கும் எனத் தெரிவித்தார் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி அன்பழகன் 97. இயற்பெயர் ராமையா. 1922 டிச.19ல் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலை.,யில் தமிழ் படித்த இவர், திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார். திருவாரூரில் இளைஞர்கள் நடத்திய மாநாட்டில், கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். அப்போது இருவருக்கும…

  16. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது. வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட தம்பதி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு (உதவி எண் 100) வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெற்றோரை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர் என தெரியவந்தது. ஆனால் அவர…

    • 1 reply
    • 440 views
  17. கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் புதன்கிழமை நள்ளிரவு அடையாளம் அறியப்படாத நபர்களால் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கணபதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பதற்றமான இந்த சூழலில் கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் உக்கடம் பகுதியை அடுத்துள்ள ஆத்துப்பாலத்தில், பிப்ரவரி 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அப்பக…

  18. புதிய கட்சி தொடர்பாக ரஜினி இன்று முக்கிய அறிவிப்பு அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வருவது உறுதி என ஏற்கனவே நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தாா். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில்,…

  19. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி பத்தாம் தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத…

  20. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லோரன்ஸ் பல விதமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு அனைவரின் மனதிலும் நீங்கா நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு வைத்திய  சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் வகையில் புது முயற்சி…

  21. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்! கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அளவில் தமிழகம் மட்டுமே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக நிதியுதவியை வழங்கி வருகின்றது. தமிழக அரசு, சுகாதார சேவையை சிறப்பாக வழங்கி வருவதால் கர்ப்பிணிகள் உயிரிழப்பது குறைவடைந்துள்ளது. இதேவேளை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தமிழக வைத…

  22. நீதிபதிக்கு வந்த சந்தேகம்! 'கைலாசா நாட்டின் ஜனாதிபதி நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது?" என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாகக் கேட்டார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந…

  23. தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வெற்றிடம்! தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி கடந்த 27ஆம் திகதியும், குடியாத்தம் தி.மு.க. உறுப்பினர் ஏ.காத்தவராயன் கடந்த 28ஆம் திகதியும் உடல் நலக்குறைவால் காலமாகிய நிலையில் இந்த 2 தொகுதிகளும் வெற்றிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி வெற்றிடமாக…

  24. தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்.. மத்திய அரசு புது திட்டம்.! சென்னை: தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது வழக்கம். அந்த பகுதிகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இப்படி பல பகுதிகள் உள்ளது .தமிழகத்தில் மொத்தம் தொல்லியல் துறை வசம் 100+ இடங்கள் உள்ளது. நிறைய புராதன கட்டிடங்கள், பழங்கால ஆங்கிலேயர் கால இடங்கள் ஆகியன. நினைவுச் சின்னங்கள் இந்த…

  25. 2 மார்ச் 2020 படத்தின் காப்புரிமை Getty Images விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் முகாமிற்கு அருகே உள்ள முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கின்ற 8வயது சிறுமி ஒருவர் பள்ளியின் அருகே, கடந்த சனிக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருந்தார். …

    • 1 reply
    • 929 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.