தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதனைத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய சத்ய பிரதா சாகு, ‘நாங்குநேரி தொகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்கு பயன்படுத்துபவை. மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்…
-
- 0 replies
- 393 views
-
-
ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும் ஆர். அபிலாஷ் சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”. ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவானநோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னை ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட சீமான் பேச்சு பயன்படும் என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார். விடுதலைப் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொ…
-
- 3 replies
- 976 views
-
-
சென்னையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி ``ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீது ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், விடுதலைப்புலிகளே இந்த விவகாரத்தில் அமைதிகாக்கும்போது, எதற்காக சீமான் இப்படி கருத்து சொன்னார் என்று தமிழீழ ஆதரவாளர்களும் கொந்தளித்து வருகிறார்கள். சீமான் தேர்தல் ந…
-
- 2 replies
- 688 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கு; சீமானையும் விசாரணையில் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் மனு ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்கூறப்பட்டுள்ளதாவது. “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது. ஏராளமானோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சீமான் கடந்த 11-ம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கூட்டத்தில் பேசும்போது பகிரங்…
-
- 2 replies
- 556 views
-
-
தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்துப் பேச, விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் இருதரப்புத் தலைவர்களும், வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கருப்பண்ணன், கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக பறை இசைக் கலைஞர்கள் பறையை இசைத்துக்கொண்டிருந்தனர். அந்த இசையின் பின்னணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின…
-
- 0 replies
- 410 views
-
-
சென்னையில் போலியாக கால் சென்டர் நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 12 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை சித்தாலபாக்கத்தில், ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற நிறுவனம் ஆறு மாத காலமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த கால்சென்டர் மூலம், பொதுமக்களின் செல்போன்களுக்கு அழைத்து குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். வங்கிக்கு நேரடியாக சென்றாலும் கிடைக்காத வட்டி விகிதத்தில் தங்கள் நிறுவனத்தால் கடன் பெற்று தர முடியும் என ஆசையைத் தூண்டியுள்ளனர். பணத் தேவை உள்ள பலரும் அவர்களை நம்பி, மோசடி கும்பல் கேட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை கொடுத்…
-
- 0 replies
- 443 views
-
-
பங்களாதேசை சேர்ந்த பயங்கரவாத அமைப்பொன்று தமிழ்நாட்டின் கிருஸ்கிரியில் ஆயுதபயிற்சி மற்றும் தாக்குதல் ஒத்திகைகளில் ஈடுபட்டது என இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விசாரணை பணியகத்தின் தலைவர் வைசிமோடி இதனை தெரிவித்துள்ளார். ஜமாத் உல் முஜாஹீடின் பங்களாதேஸ் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தே அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியேற்றவாசிகள் என்ற போர்வையில் இந்த அமைப்பினர் இந்தியாவின் தென்மாநிலங்கள் வரை ஊடுருவியுள்ளனர் என அவர் எச்சரித்துள்ளார். 2014 முதல் 2018 வரை இந்த அமைப்பு பெங்களுரில் பல மறைவிடங்களை உருவாக்க முயன்றதுடன் தென்னிந்தியாவில் கால்பதிக்க முயன்றது என வைசிமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கிருஸ்ணகி…
-
- 0 replies
- 381 views
-
-
2019 ஒக்டோபர் 14 , பி.ப. 09:52 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய விசாரணை முகவரகத்தின் தலைவர் அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத்துக்கெதிரான முகவரகங்களின் மாநாடொன்றிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த அலோக் மிட்டல் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் என மொத்தம் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ…
-
- 0 replies
- 523 views
-
-
எழுவரின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்குமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக சிறைகளில் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மட்டும் விடுதலை செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது தவறான முன்னுதாரணமாகி விடும். அது தமி…
-
- 1 reply
- 715 views
-
-
தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்.! சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோரின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து, ட்வீட் வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதை பாருங்கள்:இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர்#ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணமாகியுள்ளார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 745 views
-
-
தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்களில் கடும் சோதனை – 30 கோடி பறிமுதல் தமிழகத்தில் செயற்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், வீடு மற்றும் நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் …
-
- 0 replies
- 333 views
-
-
சென்னை: சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்று பேசினார். இரு நாட்டுத் தலைவர்களும் வெண்ணெய் உருண்டை கல் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கண்டு ரசித்தனர். இதையடுத்து சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இருவரும் சுமார் இரண்டு மணி நேரத்திற்க…
-
- 0 replies
- 264 views
-
-
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழகர் குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களுடன் மேலும் 2 பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர், மற்றோருவர் மதுசூதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. ஒரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வரும் மதுசூதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஆவார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி- ஜின்பிங் சந்திப்பில் மொழியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்…
-
- 0 replies
- 465 views
-
-
* பெங்களூருவில் இருந்து விமானத்தில் வந்தவர்களும் கைது * கிண்டி நட்சத்திர ஓட்டல் முன்பு பரபரப்பு சீன அதிபர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீன அதிபர் வரும் நேரத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த அவர்கள் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் அருகே தங்கியிருந்த 8 திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அறை எடுத்து தங்க உதவிய தனியார் கல்லூரி பேராசிரியரும் கைது செய்யப…
-
- 2 replies
- 498 views
-
-
படத்தின் காப்புரிமை ANI மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி. இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடவிருக்கிறார் சீன அதிபர். இந்தத் தருணத்தில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்றுத் தூரத்திலேயே இருப்பார்கள். இது இந்தாண்டில் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாவது முறையாக சந்தித்து கொள்கிறார்கள். முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில…
-
- 11 replies
- 1.4k views
-
-
மோடி, சீன ஜனாதிபதி இன்று மாமல்லபுரத்திற்கு வருகை பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை ஆளுநர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்கவுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து பிரதமர் ஹெலிகொப்டர் மூலம் கோவளம் செல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தனி விமானத்தில் வரும் சீன ஜனாதிபதி ஜின் பிங், நண்பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்…
-
- 0 replies
- 427 views
-
-
சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்.. ஓ இதுதான் ரியல் பின்னணியா! சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார். இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகள் கூடி கடந்த இரண்டு மாதம் முன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். டெல்லியில் இந்த ஆலோசனை நடந்துள…
-
- 0 replies
- 1.3k views
-
-
கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் க…
-
- 0 replies
- 710 views
-
-
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்து வரவேற்றுள்ளனர். சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இருதலைவர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரத நாட்டிய…
-
- 0 replies
- 498 views
-
-
சென்னைக்கு கொண்டுவரப்பட்டது சீன ஜனாதிபதியின் கார் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் கார், தனி விமானம் ஊடாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்ட குறித்த காரினூடாகவே இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சீன ஜனாதிபதி செல்லவுள்ளார். இந்த கார், சீன ஜனாதிபதிக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்.ஏ.டபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். சீன ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ஆடம்பரமான காரான இது 6 தானியங்கி வசதிகளைக் கொண்டது. இதில் 110 லீட்டர் வரை பெற்றோல…
-
- 0 replies
- 678 views
-
-
சிறையின் விதிமுறைகளை சசிகலா மீறியுள்ளார்- விசாரணைக்குழு பெங்களூர்- பரப்பன அக்ரஹாரா சிறையின் விதிமுறைகளை அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மீறியது உண்மையென விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு சிறையின் விதிமுறைகளை மீறி சசிகலா வெளியே சென்றதாகவும் அவருக்கு சிறையில் பிரத்தியேக வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரியாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. குறித்த விசாரணைக்குழு இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. …
-
- 0 replies
- 381 views
-
-
சுபஸ்ரீ உயிரிழப்பு: 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தந்தை மனுதாக்கல் சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழக்குகளை மாற்ற வேண்டும் என்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பனர் காரணமாக தனது மகள் உயிரிழந்தார் என்றும் இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்படும் பனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று…
-
- 0 replies
- 492 views
-