தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
ஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடிக்கிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீது இது…
-
- 1 reply
- 493 views
-
-
தாத்தா ரீ.வி கொடுத்தாரு; அப்பா செற்றாப் பாக்ஸ் கொடுப்பாரு' - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.! தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரம் கடுமையான கேள்விகளையும் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். மதுக்கடைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் இந்தக் கூட்டங்களில் சில சுவாரஸ்ய சம்பவங்களும…
-
- 3 replies
- 939 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 494 views
-
-
பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்..! பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் …
-
- 1 reply
- 914 views
-
-
பாஜக ஆபீசுக்குள் கால் வைக்க கூடாது.. எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்ட தமிழிசை. சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்துக்குள் எஸ்.வி.சேகர் வரக்கூடாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 'தண்டனை' கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஆனால் பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் இவரை அப்பதவியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். அதில் பலரும் பிரதமர் நரேந்திர மோடி வரை பழக்கமானவர்கள் என்றபோதிலும்கூட, இதுவரை அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, பாஜக பொதுக்கூட்…
-
- 1 reply
- 412 views
-
-
உயர் நீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் – அற்புதம்மாள் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தாய் என்ற முறையில் தமது புதல்வன் விடுவிக்கப்பட வேண்டும் என தாம் கோரவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்தநிலை சிறையடைக்கப்பட்டுள்ள எவருக்கும் நேரக்கூடாது எனவும் கோரியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்ப…
-
- 0 replies
- 295 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார். அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்தது. வழக்கமாக அவரை சோதனை செய்யும் போது, அவரது பையிலிருந்து வித்தியாசமான ஒலி வருவதை அதிகாரிகள் கேட்டனர். இதனை அடுத்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடை உள்ள சிறுத்தை குட்டி இருந்தது. இவர் பாங்காக்கிலிரு…
-
- 1 reply
- 581 views
-
-
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக, கே.எஸ். அழகிரி நியமனம் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதா காங்கிரஸ் தலைமை நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எஸ்.ஆழகிரி இரண்டு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்ட …
-
- 0 replies
- 576 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் February 2, 2019 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராடத்தின் கடைசி நாளன்று, கடற்கரையில் வன்முறை வெடித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் வி…
-
- 0 replies
- 273 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் அதிக பிரகாசமுள்ள மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸின் ஏற்பாட்டில், யாழ் சோனகத்தெரு கல்லூரி வீதி, லெயிடன் சந்தி, பொம்மைவெளி, நாவாந்துறை போன்ற இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனை யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன், மாநகர சபை உறுப்பினர் நிலாம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது.நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்லாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது. குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 422 views
-
-
படத்தின் காப்புரிமை FACEBOOK / GOWSI SHANKAR ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், "அம்ப…
-
- 0 replies
- 846 views
-
-
ராஜீவ்காந்தி கொலை விவகாரம்: வாகனப் பேரணி நடத்த பரிசீலனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவென்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிபதி மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டுமென்றும், அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற…
-
- 0 replies
- 605 views
-
-
ஆர்.மணி மூத்த பத்திரிகையாளர் படத்தின் காப்புரிமை Getty Images (இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயற்படுகிறதா? – உயர்நீதிமன்றம் கேள்வி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயற்படுகிறதா? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொலிஸார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருவதாக மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தூத்துக்குடி பொலிஸ் உத்தியோகத்தர் முரளிரம்பா முன்னிலையானார். இதனையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட…
-
- 0 replies
- 341 views
-
-
கண்மாய், ஏரிகளை ஆக்கிரமித்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டிலில் இருந்து நீக்கிவிடுங்கள் !! உயர்நீதிமன்றம் அதிரடி!! தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றற…
-
- 0 replies
- 479 views
-
-
தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை January 30, 2019 தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத:துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 22ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினத்துக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போரா…
-
- 1 reply
- 740 views
-
-
தொலைபேசிகளை பாதுகாத்த கோயிலுக்கு 2 கோடி ரூபாய் வருமானம்! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த 10 மாதங்களில், கையடக்கத் தொலைபேசி பாதுகாப்பு கட்டணம் மூலம் ஒரு கோடியே, 99 இலட்சத்து 10 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன் கோயிலில் இருந்த பெருமளவான புறாக்களும் தீயில் கருகின. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் ஆட்சியாள…
-
- 2 replies
- 829 views
-
-
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு – திருக்காரவாசல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் : January 28, 2019 திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 200 பேர் மீது காவல்துறையி…
-
- 1 reply
- 537 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. "மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஓஎன்ஜி-சியின் காரைக்கால் காவிரிப் படுகை பிரிவு மேலாளர் மிஸ்ரா பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. முழு பூசணி…
-
- 0 replies
- 470 views
-
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்கிறது நீதிமன்றம். தமிழ்நாடு முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர…
-
- 0 replies
- 529 views
-
-
தமிழகத்தில் மோடிக்கு துளியும் இடமில்லை – குஷ்பு தமிழகத்தில் பா.ஜா.க.வுக்கும் மோடிக்கும் துளியும் இடம் கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தாமரை மலராது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில், “எப்போதும் பிரதமர் மோடி தமிழகத்தில் கால்வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் எல்லோரும் சேர்ந்து ‘Go Back Modi’ என கூறுகிறார்கள். இதிலிருந்து ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் துளி கூட இடம்கிடையாது. தமிழகத்தில் தாமரை மலராது” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று மதுரையில் எய்ம்ஸ் மரு…
-
- 0 replies
- 324 views
-
-
பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ மீது செருப்பு வீச்சு: பெரும் பரபரப்பு பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பாஜக மகளிர் அணியை சேர்ந்த சிலர் செருப்புகளை வீசினர் மதுரை பாண்டி பஜார் அருகில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தயாராக தனது தொண்டர்களுடன் நின்றிருந்தார். அப்ப்போது அந்த வழியாக பேருந்தில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பாஜக மகளிர் அணியினர் வைகோ மீது சரமாரியாக பத்துக்கு மேற்பட்ட செருப்பை வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த மதிமுகவினர் அந்த பேருந்தின் மீது செருப்புகளை வீச அந்த இடமே ரணகளமானது இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட…
-
- 0 replies
- 825 views
-
-
அ.தி.மு.க.வின் கோட்டையில் விழுது பெரும் ஓட்டை...! வெடித்துக் கிளம்பும் எதிர்ப்புகள், மூச்சு திணறும் முதல்வர்கள்..!! யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் மிக மிக முக்கியமானது. எல்லாம் இழந்த நிலையில் கடைசி அஸ்திரமாக ஏவப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்து, வெற்றியை நிலைநாட்டிட உதவும் ஆயுதம் இது. அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக இருந்தது ‘கொங்கு மண்டல தொகுதிகள்’தான். தெற்கு, வடக்கு, டெல்டா என மற்ற பகுதிகளில் பல இடங்களை இழந்திருந்தாலும் கூட, கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் கிடைத்த பெரும் வெற்றிதான் அந்த கட்சியை மீண்டும் அரியணையில் உட்கார வைத்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் செலுத்திடவும் வைத்துக் கொண்டிருந்தது. கொங்கு…
-
- 0 replies
- 962 views
-
-
ஏழு தமிழர்களின் விடுதலை கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் பயணம் ... இன்று அற்புதம்மாள் கோவையில் துவக்க இருக்கிறார்
-
- 0 replies
- 392 views
-