தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தூர் எனும் கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் சாதி இந்துப் பெண் ஒருவரை, திருமணம் செய்து கொண்டதால், அவர் வசித்து வந்த தலித் குடியிருப்பில் 30 வீடுகள், நான்கு வாகனங்கள் மற்றும் பிற சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு, ஊரைவிட்டு வெளியேறியது. புதன்கிழமை காலை சாதி இந்து ஆண்கள் சுமார் 300 பேர், ஒன்பது மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கியதாகவும், அது 10.30 மணி வரை தொடர்ந்ததாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிர…
-
- 0 replies
- 686 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Contributor நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 2 replies
- 541 views
-
-
எழுவர் விடுதலை: மனித சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள்! 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ,நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 27ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைத்தும் அதுதொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. எனவே அவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வல…
-
- 1 reply
- 455 views
-
-
ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலை குறித்து கடிதம் எழுதிய பழனிசாமி! ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை விடுக்கவேண்டுமென வலியுறுத்தி குறித்த மீனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். …
-
- 1 reply
- 456 views
-
-
தாமரை கோலம் போட்டு ஏமாந்த பெண்கள் …. 1000 ரூபாய் வதந்தியால் பரபரப்பு !! தமிழகத்தில் வீட்டு வாசலில் தாமரைக்கோலம் போட்டு, அகல் விளக்கு ஏற்றினால் 1000 ரூபாய் வழங்கப்படும் என யாரோ கிளப்பிவிட்ட வதந்தியை நம்பி ஏராளமான பெண்கள் தாமரை கோலம்போட்டு காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்றும் தமிழ் மண்ணில் பாஜக மலர்ந்தே தீரும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எங்கெங்கு போகிறாரோ அங்கெல்லாம் கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் பாஜக காலையும் ஊன்ற முடியாது, கையவும் ஊன்றவும் முடியாது என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன.. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும், மாலை 6 ம…
-
- 2 replies
- 1.6k views
-
-
கடலில் வந்த மிதவை - விசாரணைகளில் கடலோர காவல் படை தமிழகத்தின் வேளாங்கண்ணி அருகே, கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என்று கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில், துறைமுகம் உள்ளே கப்பல் சென்றுவர வழிகாட்டும் விதமாக ‘போயா’ எனும் மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். அத்துடன், தங்கம் மற்றும் போதை பொருட்களை கடல் வழியாக கடத்திச் செல்லும் கடத்தல்காரர்களும், திசையை அறிவதற்காக இதுபோன்ற மிதவைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழக்திதின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று (24ம் திகதி) மிதவை ஒன்று மிதந்து வந்துகொண்டிரு…
-
- 1 reply
- 867 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலனின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்…. February 26, 2019 சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர். கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இந்த சம்பவம் குறித்த ஆவணப்படமொன்றை சென்னையில் வெளியிட்ட சமூக ஆர்வலரான முகிலனை அன்றுமுதல் காணவில்லை. இதுகுறித்து, முதலில் புகையிரத காவல்துறையினரும், பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கை நேற்று தி…
-
- 0 replies
- 289 views
-
-
ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் - பட்டப்பகலில் பண விநியோகம்
-
- 1 reply
- 644 views
-
-
பாம்பன் ரயில் பாலத்திலிருந்து முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பம் பாம்பன் ரயில் பாலத்திலிருந்து முதல் ரயில் போக்குவரத்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதையடுத்த கருத்து தெரிவித்த அதிகாரிகள், பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ரயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பூச்சு அடிக்கப்…
-
- 0 replies
- 537 views
-
-
7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலுள்ள நளினி கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய அரசியல் சூழல் 7 பேரின் விடுதலைக்கு சாதகமாக அமைந்துள்ளமையால் தங்களை விடுதலை செய்வதற்கு உதவ வேண்டுமென அவர் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையிலுள்ள பெண் நான் தான். நாங்கள் 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டோம். அரசிடம் இருந்து உத்தரவு வரும் என ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற செய்தியால் தினமும் ஏமாற்றமே மிஞ்…
-
- 0 replies
- 437 views
-
-
அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன. February 19, 2019 இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையில் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளன. இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக முதலிய கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருந்தன. முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்ற…
-
- 1 reply
- 646 views
-
-
இலவசமும் சுயமரியாதையும் “ பெரியாரின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிப்பது சுலபம்”, இலவசம் நாளொன்றுக்கு 27 ரூபாய் விவசாயிகளுக்கு; 2018-ல் விவசாயிகளின் தற்கொலைக்கான காரணம் இன்னும் போகவில்லை. புயலாலும், மழை பொய்த்ததாலும் விவசாயம் விவசாயிகளின் குடியை கெடுத்து விட்டது. விவசாய கடன் தள்ளுபடி இல்லை. விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் மூடி 6 வழிச் சாலை, 8 வழிச் சலை, மீத்தேன் வாயு, உயர் அழுத்த மின் கோபுரங்கள் என்று, கான்ட்ராக்டர்களுக்கும், மோட்டார் உற்பத்தி முதலாளிகளுக்கும், துணைபோகும் மந்திரிகள், அரசு ஊழிய உடம்புகள் அனைவரும் பெருக்க , வாழ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரோடு போடுவதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுக…
-
- 0 replies
- 1k views
-
-
அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தமிழகம் முழுக்க பரவலாக உள்ள ஆதரவு, பிற கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அடங்கியது ஒரு கூட்டணி என்றால், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கியது மற்றொரு கூட்டணி. தேமுதிகவை இவ்விரு கூட்டணிகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கப்போகிறது.இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், தேர்தலில் சிறப்பாக செயல்படும் டிராக…
-
- 0 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை DMK வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள …
-
- 0 replies
- 1.1k views
-
-
"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.…
-
- 0 replies
- 634 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Im…
-
- 0 replies
- 464 views
-
-
Published : 15 Feb 2019 18:48 IST Updated : 15 Feb 2019 18:49 IST ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 45 பேர் பலியானதையடுத்து உலகம் முழுதும் கண்டனங்களும் இரங்கல்களும் குவிந்து வருகின்றன. தவறவிடாதீர் இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்: காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போதும்.. நடந்தவரை போதும்..! இத்தகைய காட்டுமிராண்டித்தன…
-
- 5 replies
- 944 views
-
-
ஆளுநர் மாளிகையில்... காகம்கூட யோகாசனம் செய்கிறது – கிரண்பேடி காக்கை யோகா என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் காகம், பூனைகூட யோகாசனம் செய்கிறது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று 6ஆவது நாளாகவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கிரண் பேடி இன்று (திங்கட்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் ஒளிப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். ஆளுநர் மாளிகை வளாகத்திலுள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கின்றது. இதேபோன்று மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த ஒளிப்படங்களுடன் தன…
-
- 0 replies
- 471 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை… February 18, 2019 ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதனையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட்…
-
- 1 reply
- 522 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images "ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட…
-
- 0 replies
- 417 views
-
-
ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,600 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து வீதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் …
-
- 1 reply
- 273 views
-
-
சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன் – கமல்ஹாசன் சாடல் சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தி.மு.க.வை விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க.வை நான் கடுமையாக விமர்சிக்க தி.மு.க.வே காரணம் என்று நடிகரும் கட்சியும் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழன் என்பது தகுதியல்ல. அது விலாசம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது…
-
- 0 replies
- 486 views
-
-
வலையில் சிக்கிய சிலைகள்..! ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள காவிரி ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் பெரிதாக ஏதோ ஒன்று சிக்கியதுபோல இருந்ததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று வலையை பார்த்த போது வலையில், 2 சிலைகள் சிக்கியிருந்தமை தெரிய வந்தது. இதையடுத்து, மற்ற மீனவர்களின் உதவியுடன் அந்த சிலைகளை கரைக்கு எடுத்துவந்து பார்த்தபோது, அவை, விநாயகர் மற்றும் நடராஜர் சிலைகள் என தெரிய வந்தது. இது குறித்து வாத்தலை பொலிஸாருக்கும், கரியமாணிக்கம் கிராம நிர்வாக அலு…
-
- 0 replies
- 890 views
-
-
25-க்கு 15 என்கிற பார்முலாவில் அதிமுக பாஜக இடையே கூட்டணி உடன்பாடு |
-
- 0 replies
- 506 views
-
-
வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார் ரஜினி. மேலும் ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்றும் அப்போது அறிவித்தார். நடுநடுவே, சில விஷயங்கள் குறித்து, அறிக்கைகள் வெளியிட்டார். இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை ந…
-
- 5 replies
- 900 views
-