தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: டெல்லி ஹைகோர்ட் அதிரடி.ஆடிட்டர் குருமூர்த்து மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் கவுதம் நவாஸ்கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை விமர்சித்து ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி ட்விட்டரில் கருத்துப்பதிவு செய்திருந்தார்.அதில் நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கம் புகுத்தி கருத்து கூறினார். இதை அறிந்த டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்து மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கிரிம…
-
- 0 replies
- 402 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன் இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியு…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லும் காலம் போலும்! மீ டூ விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக போய்க் கொண்டிருகிறது. தமிழகத்தில் சின்மயி வைரமுத்து மேல் பாலியல் குற்றச்சாட்டை சொல்லி இதனை ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராக களம் இறங்கி புகார்களை பதிய ஆரம்பித்து விட்டார்கள்.மீடூதான் இப்படி காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகிறது என்றால் அதிமுக அமைச்சரின் பாலியல் சம்பந்தமான புகாரை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கொளுத்தி போட அ…
-
- 0 replies
- 441 views
-
-
சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன் சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்க…
-
- 1 reply
- 451 views
-
-
ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் – வைகோ அறிக்கை nilavanOctober 27, 2018 in: இந்தியா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இன…
-
- 1 reply
- 610 views
-
-
இலங்கையில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின் இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழ தமிழர் விடுதலை தள்ளிப் போவதும், இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா எனக் கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின், தமிழ…
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ் இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டு…
-
- 0 replies
- 534 views
-
-
என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது : நடிகர் ரஜினிகாந்த் என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அதன் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை வாழவைத்த அன்புத்தெய்வங்களான ரசிகர்களுக்கு என்று குறிப்பிட்டு “நான் கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்…
-
- 0 replies
- 399 views
-
-
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்: பன்னீர்செல்வம் 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சபாநாயகர் உறுதி செய்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் நீதி வழங்கி இருக்கிறது. இதனால் தர்மம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிடமாகவுள்ள 2 தொகுதிகளைச் சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது. இந்த தொகுதிகளில் இடைத்த…
-
- 0 replies
- 495 views
-
-
பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்: தமிழிசை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார். அதேபோன்று இன்று காங்கி…
-
- 1 reply
- 686 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image caption தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையும் புதிதாக கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடமும் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநில எல…
-
- 0 replies
- 400 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலும் சிறையில் அளிக்கப்பட்ட உணவு ஏற்படுத்திய ஒவ்வாமையால் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னணி, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஆகியவை குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து: கேள்வி. பெங்களூர் விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்ட தினத்தன்று என்ன நடந்தது? பதில். அந்த வாரக் கடைசியில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதனால், வெளிநாட்டில் இருந்து நேரடியாக பெ…
-
- 0 replies
- 507 views
-
-
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு!(2ஆம் இணைப்பு) சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவே சரி என்றும், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் தவறில்லை என்றும், நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் குறித்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, “சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் சட்டவிரோதமானதல்ல, சபாநாயகரின் முடிவில் தவறில்லை” எனக் கூறியுள்ளார். குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இ…
-
- 2 replies
- 507 views
-
-
முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை: பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் -துரைமுருகன் முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்ட கேரளா அரசு முதல் அனுமதி பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என, தி.மு.க.வின் பொருளாயர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். அண்மையில் கேரளாவில் மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சபரிமலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை விவகாரங்களையும் கடந்து கேரளா அரசு புதிய அணை கட்டும் விடயத்தை சாதித்துள்ளது. மற்றொரு அணை முல்லைப் பெரியாற்றின் கீழ் வருமாயின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை பொருட்படுத்தாமல் நடவட…
-
- 0 replies
- 458 views
-
-
இன்று தகுதி நீக்க தீர்ப்பு... தினகரனின் ஆரூடம் பலிக்குமா? தகுதிநீக்க தீர்ப்பு வெளியானால் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா இல்லாவிட்டால் ஆட்களை இழுக்கும் வேலைகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனிடையே கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் 18 பேரும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணா இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.தகுதி நீக்க வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றால…
-
- 0 replies
- 367 views
-
-
சி.பி.ஐ. மூலம் மத்திய அரசிற்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சி.பி.ஐ. மூலம் தி.மு.க. எவ்வற்றையாவது செய்ய வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய சி.பி.ஐ.யின் நிலைமை இப்படி மாறிக்கொண்டிருக்கிறது. முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் என்ன சொன்னார்கள், சி.பி.ஐ. என்பது Congress Bureau of Investigation என்றார்கள். இப்போது Centre for Bjp Investication என்று ஆகிவிட்டது. சி.பி.ஐ. எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்பதைக் குறிப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை The India Today Group பட்டாசு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுற்றுச்சூழல் நலன் கருதி பலரும் வரவேற்றுனர். இந்நிலையில் இது பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை விளக்குகிறார் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ராதாகிருஷ்ணன். இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன…
-
- 0 replies
- 339 views
-
-
காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு October 24, 2018 காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வரும் மத்தின்பாய் என்பவர் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அவற்றினை சில்லறை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துள்ளார். அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என தெரிவிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் தாஹிராபானு என்பவரும் அவரது மகனும் பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைத்துக் கொண்டிருக…
-
- 0 replies
- 246 views
-
-
ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்! ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்றுவரை முடிவெடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காததை பாமக கண்டிக்கிறது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்…
-
- 0 replies
- 380 views
-
-
தீபாவளியன்று இரவு 8-10 மணிக்குள்தான் பட்டாசு வெடிக்கலாம்.. ஆன்லைன் விற்பனைக்கு தடை: உச்சநீதிமன்றம். தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நாடு முழுக்க புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நவம்பர் 6, 7ஆம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 214 views
-
-
சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்! தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை இராணுவ விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததற்காக 15 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த பின்பே மத்திய அரசு கட்டணம் கேட்டுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கடந்த ஜூலை மாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நன்றி தெரிவிக்க ஜூலை 24 டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் ந…
-
- 3 replies
- 697 views
-
-
அரசியல் புயலுக்கு ரெடியாகவும்.. நாளை மறுநாள் வெளியாகிறது தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி…
-
- 0 replies
- 406 views
-
-
உயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி! October 19, 2018 தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து சுகவீனம் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. இவர்மீது திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி காணொளி ஒன்றையும் வெளியிட்டார். இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்…
-
- 3 replies
- 907 views
-
-
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு 1கோடி ரூபாய் செலவு: வெளியானது தகவல் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு 1கோடி இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சையது தமீம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அவர் ஜெயலலிதா எப்போது இறந்தார்?, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது?, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய…
-
- 1 reply
- 444 views
-
-
தஞ்சைப் பெரிய கோயிலில் போலி சிலைகள் – தொல்லியல் துறையினர் ஆய்வு October 21, 2018 தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்று மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போன மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போயுள்ளதாகவும் அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும்…
-
- 0 replies
- 686 views
-