தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு! Feb 4, 2025 பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்…
-
- 0 replies
- 447 views
-
-
பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவு…
-
- 1 reply
- 359 views
-
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழீழ மக்கள் இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய அணுக…
-
-
- 5 replies
- 559 views
- 1 follower
-
-
தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
-
- 0 replies
- 259 views
-
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார் நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.இதற்கிடையே கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவி…
-
-
- 9 replies
- 683 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது. பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் ஜ…
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியான தகவல். ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர். ப…
-
- 0 replies
- 273 views
-
-
நித்தி எங்கே இருக்கிறார்? தமிழக அரசு பதில்! Jan 31, 2025 நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சனையாக தான் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சர்ச்சை சாமியாரான நித்யானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர் இன்றுவரை எங்கிருக்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் யூடியூப் சேனல்களில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கிருந்து வீடியோ வெளியிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதுவும் புரியாத புதிர்தான். க்ரீன் ஸ்கீரின் மூலம் வேறு எங்கேயோ இருந்து வீடியோ வெளியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்…
-
- 0 replies
- 305 views
-
-
குருமூர்த்தி, பாண்டேவை பாராட்டும் சீமான்.. சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட் Rajkumar RUpdated: Friday, January 31, 2025, 16:01 [IST] சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து பல ஆண்டுகளாகவே முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோர் திராவிட கட்சிகளில் இணைந்து இருக்கும் நிலையில், தற்போது மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெகதீச பாண்டியன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து…
-
-
- 8 replies
- 944 views
-
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய் Nantha Kumar RUpdated: Friday, January 31, 2025, 15:43 [IST] சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்…
-
-
- 5 replies
- 388 views
-
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கம்! Jan 31, 2025 சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் மற்றும் பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து, இலங்கை அரசோடு இணைந்த சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிற…
-
-
- 60 replies
- 4.1k views
- 1 follower
-
-
30 JAN, 2025 | 02:19 PM மதுரை: திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் 555 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் 943 ஆண்கள் 800 பெண்கள் 289 குழந்தைகள் என 2000-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது 520-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடந்துள்ளது. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் ம…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
தமிழ் நிலத்தின் தொன்மையும், ஸ்டாலினின் அரசியல் அறைகூவலும்! Jan 29, 2025 பாலசுப்ரமணியம் முத்துசாமி அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறை, தமிழ்நாட்டில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்பு கால நாகரீகம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தய ஒன்று என்னும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சிவகளை, மயிலாடும்பாறை, ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளின் வழியே கிடைத்த பொருட்கள், மூன்று முக்கியமான ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் காலம் அறிவியற்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Antiquity of the Tamil Land திலீப் குமார் சக்ரவர்த்தி இந்த ஆய்வு முடிவுகள் ஒரு புத்தகமாக அண்மையில் தமிழ்நாடு முதல்வர் ஸ…
-
- 0 replies
- 275 views
-
-
29 JAN, 2025 | 11:55 AM சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52) என்பவர் அதிகப்படியான வியர்வை, நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொ…
-
-
- 14 replies
- 1.2k views
-
-
29 JAN, 2025 | 04:28 PM சென்னை: “பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்…
-
-
- 14 replies
- 713 views
- 1 follower
-
-
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலை…
-
-
- 30 replies
- 2.7k views
- 2 followers
-
-
மான உணர்வோடும் இன உணர்வோடும் மனிதன் வாழ வேண்டும் என்று இந்த இனத்திற்கு சூடு சுரணை ஊட்டி சுயமரியாதையுடன் எங்களுக்கு வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். - சீமான் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநரும்
-
-
- 15 replies
- 1.1k views
-
-
இந்திய மீனவர்களின் கைது விவகாரம் - எஸ்.ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே எதிர்வரும் 05ஆம் திகதி வரை…
-
- 1 reply
- 187 views
-
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்? Jan 24, 2025 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அ…
-
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை! Jan 24, 2025 பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரி…
-
-
- 48 replies
- 2.7k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "தங்கள் விளைநிலங்களில் இருந்து வெளியேற மாட்டோம்" எனக் கூறி 50 நாட்களைக் கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள், மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை போல சின்ன உடைப்பு கிராம மக்களும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 2009ஆம் ஆண்டு 633 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியது. நிலத்தை இழந்த மக்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அரசு இழப்பீடு வழங்கிவிட்டது. ஆனாலும், மக்களின் போராட்டம் தொடர்வது ஏன்? அதுகுறித்து விரிவாகத…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின் Jan 24, 2025 நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 பேர் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,”பல்வேறு பொறுப்புகளில் ஒரு இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, நமக்கு மட்டுமல்ல தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து சிறப்பான முடிவெடுத்து தி…
-
-
- 22 replies
- 1.1k views
- 1 follower
-
-
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம் புதுடெல்லி: பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்…
-
- 0 replies
- 127 views
-