தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அப்பலோ வைத்தியசாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வுக்கு முன்பு, நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அப்பலோ வைத்தியசாலையில், சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கோருகின்றது. மேலும் சிகிச்சை குறித்த ஆவணங்…
-
- 0 replies
- 504 views
-
-
ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்! அப்போலோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள அறை எண் 2008. ‘எமர்ஜென்சி வார்டு’. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இதயநோய் நிபுணர் டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி பகல் 1.50 மணி அளவில், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியும், அவரது மகள் ப்ரீத்தா ரெட்டியும் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வரும் அறைக்குச் சென்று, அவரது மருத்துவ அறிக்கையைப் படித்துப் பார்த்து நோய்த் தீவிரம் பற்றி சிறப்பு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே முதல்வருக்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை: அப்போலோ பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலு…
-
- 0 replies
- 487 views
-
-
ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சட்டப்படி வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என்பதால் அவரது அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். தகவல் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களையும் வெளியிடுபவர் சமூக ஆர்வலர் பாஸ்கரன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் என எவரையும் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிந்துள்ளார். இதனால் ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழகச் சொத்தாக அறிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். இன்று சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில், இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 398 views
-
-
ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார். குறித்த வீட்டை நினைவில்லமாக்கும் முற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வீட்டில் 4 கிலோ 372 கிராம் எடையுள்ள 14 வகையான தங்க ஆபரணங்கள், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளி பொருட்கள், 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. …
-
- 0 replies
- 570 views
-
-
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஒப்புதல் December 22, 2018 மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர், வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போயஸ் கார்டனை அரசுடைமையாக்கி, அதை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போயஸ் கார்டன் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்ததனையடுத்து போயஸ் கார்டனுக்கு உரிமை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் த…
-
- 0 replies
- 423 views
-
-
இதுதான் ஜெ. சம்பாதிச்ச "பெயர்".. பறிமுதலாகிறது 68 சொத்துக்கள்... 6 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.தமிழக அரசு உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்?: தீபா கேள்வி மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ஆன செலவினை வழங்கிய குடும்பத்தினர் யார் என்று தமக்கு தெரியவில்லை என்று தீபா கூறியுள்ளார். சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த…
-
- 0 replies
- 325 views
-
-
ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாய…
-
- 3 replies
- 597 views
-
-
ஜெயலலிதா ஜெயராம் இன்று இந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுகின்ற அரசியல் கதாபாத்திரமாக திகழ்கின்றார். தமிழக மக்களால் “அம்மா” என்ற அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், பிணையில் விடுதலையாவாரா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் மேலோங்கியுள்ளது. பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு எனினும் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் அவருடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இன்று ஒத்திவைக்கத் தீர்மானித்தது. கர்நாடக மாநிலத்தில் தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறைக்கால விசேட நீதிமன்ற அமர்வி…
-
- 0 replies
- 663 views
-
-
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முன்னிலையாகியிருந்தார். இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் …
-
- 2 replies
- 342 views
-
-
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர். இவர் நேற்று காலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொண்டார். தீ காயங்களுடன் துடித்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட நாகராஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துசெல்வி என்ற மகளும், சேதுரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தான் அவர் தீ …
-
- 0 replies
- 550 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக்குவிப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜெயலலிதாவுக்காகச் சிறையில் இருப்பவர் சசிகலா! கொந்தளித்த தினகரன் பழனிசாமியை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஜெயலலிதாவுக்காகச் சிறைச்சாலையில் இருக்கின்றவரை ஒரு தேச துரோகியைப் போல சித்தரிக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் ஆவேசமாகக் கூறினார். பரோலில் வந்துள்ள சசிகலா தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் முன்பு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: சசிகலாவுக்குக் கடுமையான நிபந்தனை விதிக்கக் காரணம் என்ன? கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா எதற்காக சென்னை வந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். சச…
-
- 0 replies
- 471 views
-
-
ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பதினைந்து கோடி ரூபாயில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்த நிலையில் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இந்தக் கூட்டத்தில், முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலாவதாக நிறைவேற்றப்பட்…
-
- 2 replies
- 542 views
-
-
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது. ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ …
-
- 0 replies
- 406 views
-
-
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…
-
- 0 replies
- 341 views
-
-
Exclusive: ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங் தடாலடி பெங்களூரு: நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார். மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்க…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெவித்துள்ளனர். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிமுக வினரின் போராட்டங்களால் பொதுமக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதற்கெடுத்தாலும் 144 தடை உத்தரவு போடும் அதிமுக அரசு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றும், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத்தா…
-
- 0 replies
- 470 views
-
-
நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். தான் தாக்கல் செய்த வேட்புமனு ஒவ்வொன்றிலும் 2 தொகுதிகளுக்கு மேல் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இனிமேலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உண்மையை மறைத்து உறுதிமொழி அளித்தார். தேர்தல் அதி…
-
- 0 replies
- 490 views
-
-
ஜெயலலிதாவுக்கு எதிராக வி.சிறுத்தைகள் சார்பில் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் , முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் அறிவித்தார். வரலாற்றுத்துறையில் முதுகலைப் பட்டமும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ( பி.எச்.டி) பட்டமும் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு முறை துணைவேந்தராகவும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு திட்டக்…
-
- 1 reply
- 480 views
-
-
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலல…
-
- 1 reply
- 291 views
-
-
ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று? யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெர…
-
- 18 replies
- 2.7k views
-
-
ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. வழக்கறிஞர் ரத்னம் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாற…
-
- 0 replies
- 410 views
-