தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் எம். காசிநாதன் / 2020 ஜூலை 20 தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக, ஆட்சிக்கு வர மாட்டோம்” என்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முடிவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம், அ.தி.மு.க அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு ‘போனஸ்’ ஆகி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை, வேறு வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாகவே, அ.தி.மு.க அரசாங்கம் இன்று வரை நீடித்து வருகிறது; இனியும், 2021 மே வரை நீடிக்கப் போகிறது. …
-
- 0 replies
- 449 views
-
-
ஒரே குடும்ப அட்டை முறைமைக்கு வைகோ கண்டனம் நாடு முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறிய கருத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க தொடர்ந்து முயற்சிகளை…
-
- 0 replies
- 449 views
-
-
சென்னையில் தீனதயாளன் வீட்டில் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த வாரம் பொலிசில் சரணடைந்தார். பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு…
-
- 0 replies
- 448 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Published By: RAJEEBAN 23 MAR, 2023 | 03:36 PM பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தி…
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
கமலுக்குப் பயந்து காணாமல் போன அமைச்சர்களின் இமெயில் முகவரிகள்!! உங்களது அமைச்சர்கள் மீதான புகார்களை அவர்களுக்கே இணையதளங்கள் மூலம் அனுப்புங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் அரசு இணையதளத்தில், அமைச்சர்களின் பக்கங்களில் இணையதள, இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் புரபைல் பக்கத்தில் இடம் பெற்றிருந்த இமெயில், இணையதள முகவரிகள் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இணையதளத்தில் திடீரென அனைத்து இமெயில் ஐடிகளும் நீக்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் எழுந்துள்ளது. அதேசமயம், தமிழக சட்டசபை இணையதளத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கு எம்.எல்.ஏக்களின் இமெயில் ஐடிகள் உள்ளன. க…
-
- 0 replies
- 448 views
-
-
டெல்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து, குங்குமம் அழித்து நூதன போராட்டம் தமிழக விவசாயிகள் தங்கள் கைகளில் அணிந்த வளையல்களை உடைத்தும், நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்தும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தினர். புதுடெல்லி: தமிழக விவசாயிகள் கடந்த 34 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தள…
-
- 0 replies
- 448 views
-
-
அன்று உத்தரப்பிரதேசம்... இன்று தமிழகம்... பி.ஜே.பி. பின்னணியில் என்னவெல்லாம் செய்கிறது? நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 1951-ல் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்திலிருந்து ஒருமுறைகூட பி.ஜே.பி. தனியாக தேர்தலில் நின்று மக்களவைக்கு வெற்றிபெற்றதில்லை. 1998 மற்றும் 1999 காலகட்டத்தில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முறையும் அது கழகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் விஜயகாந்த்-ன் தே.மு..தி.க. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி. சந்தித்த 2014 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்தத் தொகுதியின் எம்.பி. பொன் …
-
- 0 replies
- 448 views
-
-
இன்று ஈரோடு மாவட்டத்தில் அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் தனித் தமிழீழம் அமைக்க கோரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13518:erodu-rain&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 448 views
-
-
3 வழக்குகளிலும் ஜாமீன்: புழல் சிறையில் இருந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அன்புமணி, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டிவனம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த திண்டிவனம் கோர்ட், அன்புமணிக்கு இன்று ஜாமீன் வழங்கியது. சென்னை தி.நகரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதேபோல…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழகத்தில், ஆன்லைனில்... மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி. தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. இதேபோல் திரையர…
-
- 1 reply
- 448 views
-
-
2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மே மாதம் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளார். 2ஜி ஊழல் வழக்கி கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சில வாரங்களாக அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், சி.பி.ஐ தரப்பு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ கடந்த 16ஆம் தேதி அளித்தது. அதில், தயாளுவின் பெயர் இடம்ப…
-
- 2 replies
- 448 views
-
-
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன? தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டங்களால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் திறந்து இயங்கச் செய்யவேண்டுமென்று, போராட்டங்கள் நடத்தியவர்களாலேயே கோரிக்கை விடுக்கும் நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால், தொழிலை இழந்த தொழிலாளர்கள் வருமானம் எதுவுமில்லாமல், உணவுக்கு வழியின்றி தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்டுள்ள தொழிற்சாலையைத் திறந்து மீண்டும் இயங்கச் செய்வதால், தமது வாழ்வாதாரத்துக்கான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கு…
-
- 0 replies
- 448 views
-
-
முதலில் ராஜ்நாத் சிங் அடுத்து ஜனாதிபதி... வித்யாசாகர் ராவின் டெல்லி மூவ்! டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதியை அவர் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தபோதும், அதிகாரத்துக்கான சண்டைகள் ஓயவில்லை. கடந்த மாதம் ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிட…
-
- 1 reply
- 448 views
-
-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமெந்து வீடுகள் November 28, 2018 கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக சீமெந்து வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாகபட்டினம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டத்தின் நிலவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேவேளை, நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மாவட்டத்தின் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். …
-
- 0 replies
- 448 views
-
-
ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.வி- என்பது அதன் பொருள். குறிப்பிடுவார்கள். N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படைய…
-
- 0 replies
- 448 views
-
-
ரஜினி, கமல், வைரமுத்து, விஜயேந்திரர்.... பின்னணி தெரியுமா? Chennai: ஜெயலலிதா மறைவு அதையொட்டிய அரசியல் மாற்றங்கள் மற்றும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் என மக்கள் பிரச்னைகளில் ஆரம்பித்து, தற்போது நடிகர்களின் அரசியல் பிரவேச அறிவிப்புகள் வரை தொடர்ந்து செய்திகளால் பரபரத்துக் கொண்டேயிருக்கிறது தமிழகம். சமீபமாய் தமிழகத்தை தடதடக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தச் செய்தி நிலவரங்கள் குறித்தும் அதன் பின்னணிகள் குறித்தும் கீழே காண்போம்.... ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சர்ச்சைகள் ஜெயலலிதா மறைவையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலானது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரத்…
-
- 0 replies
- 448 views
-
-
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. குறித்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு 1,000கோடி ரூபாய் அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வானது போதும், இடஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக த…
-
- 0 replies
- 448 views
-
-
சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவி…
-
- 3 replies
- 448 views
-
-
மே17 இயக்கம் சார்பில் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் மற்றும் வெளியீடு மே17 இயக்கம் சார்பில் பாலைவனமாகும் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் மற்றும் வெளியீடு நடைபெறும் இடங்கள்-ஜூலை 19 மற்றும் ஜூலை20: வருகின்ற ஜூலை 19 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை வில்லிவாக்கத்தில் காமகோடி திருமண மண்டபத்திலும்(நாதமுனி திரையரங்கம் அருகில்),புதுக்கோட்டையில் வடக்கு ராஜ வீதி நகர் மன்றத்திலும்,திண்டிவனத்தில் தாய்தமிழ் தொடக்கப் பள்ளியிலும் திரையிடல் நடைபெறுகிறது. வருகின்ற ஜூலை 20 ஞாயிறு மாலை 5 மணியளவில் பாண்டிசேரியில்புதிய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் மார்ஸ் எதிர்ல் உள்ள JVR ஹாலிலும் நடைபெறுகிறது அனைவரும் பங்கேற்கவும்.http://www.pathivu.com/news/32545/57/17/d,ar…
-
- 0 replies
- 448 views
-
-
சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன் சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்க…
-
- 1 reply
- 448 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வல…
-
- 0 replies
- 448 views
-
-
ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?! அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Servi…
-
- 0 replies
- 447 views
-
-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு! தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்கான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலா க்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 447 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது…
-
- 0 replies
- 447 views
-
-
'தலைவரே... மீன் செலவு என்னுடையது!' கூவத்தூர் ரிசார்ட் ருசிகரம் #VikatanExclusive ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மீன் செலவு என்னுடையது என்று பொறுப்பேற்றுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அதோடு எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி குடும்பம் சிறப்பாக கவனித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மன்னார்குடி குடும்பத்தினருட…
-
- 0 replies
- 447 views
-