Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்! நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாண…

  2. தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம் அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு, அடக்குமுறையின் இடையில் இருந்து ஈழத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் வரையும் அன்பு மடல். உங்களை கட்டித்தழுவி வாழ்த்தத் துடிக்கும் எமக்கு அவ்வாறே செய்ய இயலாது, சிங்கள பேரினவாதத்தின் இரும்புக் கரங்களுக்குள் எங்கள் நாட்கள் கழிகின்றன. நவீன அடிமை யுகம் ஒன்றை உருவாக்கும் சிங்கள பேரினவாதத்தின் சிந்தனைக்குள் இருந்து இதை கண்ணீரோடு வரைகின்றோம், ஒரு நாள் விடியும் அன்று உங்களை நேரில் வாழ்த்தி வணங்குவோம் என்னும் நம்பிக்கையுடன்! ஈழ விடுதலைக்கும் ஈழத்து மக்களாகிய எங்களின் உரிமைக்குமாய் தமிழகம் மற்றும் பாரதத்த…

    • 0 replies
    • 796 views
  3. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் : இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

    • 0 replies
    • 619 views
  4. ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…

  5. நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி…

  6. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாக்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது மாமல்லபுரம் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸை திருக்கழுக்கு…

  7. சசிகலா முகாம் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாடகை எவ்வளவு தெரியுமா...? #OPSVsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் கொடுத்த பேட்டியானது தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுநாள் வரை தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யமாக இருந்த அ.தி.மு.க இரண்டு பிரிவாக உடைந்து நிற்கிறது. ''மக்கள் விரும்பினால் முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்பேன்'' என்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இதற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படி இல்லையென்றால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மட்டும் சசிகலாவை விட்டு வெளியே வந்து, அதனால் அ.தி.மு.க ப…

  8. தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்! சிங்கப்பூர் சிட்டிசன் துணைப் பொதுச்செயலாளர் ஆன கதை “பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையமாக சசிகலா குடும்பம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான தினகரனை 1999 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் வென்று எம்.பி ஆன தினகரனுக்கு அதன்பிறகு அசுர வளர்ச்சிதான். ஜெயலலிதா…

  9. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி யிடம் சிக்கிய, 'டைரி'யில், 300 கோடி ரூபாயை அவர், லஞ்சமாக வாரி இறைத்தது அம்பலமாகி உள்ளது. அவரிடம் விலை போன, அமைச்சர் கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள கடிதம், கோட்டையை கலங்க வைத்துள்ளது. மத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட பின், பிரபல மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக, 34 கோடி ரூபாய் உட்பட, 132 கோடி ரூபாய் ரொக்கம், …

  10. கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில் இந்தியாவின் சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்றில் பிறந்த கார்த்தி ப. சிதம்பரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளவர். விளையாட்டிலும் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குபவர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா. …

  11. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.…

  12. திருச்சி ஆதி திராவிடர் நல அலுவலர் கார் பயணத்தில் கைது: ரூ.38 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கைப்பற்றப்பட்ட பணம் திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த திருச்சி ஆதி திராவிடர் நலத் துணை ஆட்சியர் சரவணகுமார் விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் காரில் இருந்து ரூ.38.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதி திராவிட நலத்துறையில் சமையலர் உட்பட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக பெற்ற லஞ்சப் பணத்தை விழுப்புரம…

  13. "...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை. காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி. இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழ…

    • 0 replies
    • 540 views
  14. டும்டும்டும்டும்.... இந்தி[/size] Posted Date : 19:34 (10/07/2014)Last updated : 19:38 (10/07/2014) 'பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு... ரயில்வே துறையில் அந்நிய முதலீடு... காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு...' என்று புதிய பி.ஜே.பி அரசு ஒரேயடியாக அந்நிய மோகத்தில் திளைப்பதைப் பார்க்கும்போது... ஒரு படத்தில் கவுண்டமணி அடிக்கும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது. வாசலில் நிற்கும் பிச்சைக்காரரைப் பார்த்து, 'சோறு இல்லை போ' என்று சொல்வார் மனைவி. உடனே சீறிக்கொண்டு கிளம்பும் கணவன் கவுண்டமணி, 'அதெப்படி சோறு இல்லைனு நீ சொல்லலாம். இந்த வீட்டுல நான் பெரியவனா... நீ பெரியவனா' என்கிற ரேஞ்சில் குதியாட்டம் போட்டபடியே அந்தப் பிச்சைக்காரரை அழைத்து, 'இப்ப நான் சொல்றேன்... உனக்கு…

  15. "பாமக, பாஜக உள்ள அணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம்" - திருமாவளவனின் பேச்சு திமுகவுக்கு எச்சரிக்கையா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத…

  16. மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்! திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார். ‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம். ‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட…

  17. கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார், நீதிபதி கிருபாகரன். இதயத்தை பிழியும் தீர்ப்பை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியுமா என்ன? பரிதாபமும், கவலையும், சோகமும் பின்னிப் பிணைந்த நிலையில் இந்த வழக்கில் கண்ணீரை தவிர வேறெதுவும் நீதிபதி கிருபாகரனால் உதிர்க்க முடியவில்லை!! கடலூரை சேர்ந்தவர் திருமேனி. இவர் ஒரு டெய்லர். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த போதிருந்தே பேசும் திறன் கிடையாது. மற்றவர்களை அடையாளம் காணவும் முடியாது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வலிப்பும் சேர்ந்து கொண்டது. திருமேனி போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை... டாக்டர்களிடம் மகனை அழைத்து சென்றும் எந்த பிரயோஜனமும் இல்லை.பெத்த மகன் கண் எதிரே வலிப்பு வந்து துடிக்கும்போது இவரால் அதனை…

  18. தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்திரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவற்துறையினர். எனினும், மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்" என்றும் "அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... " இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார். தமத…

  19. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images …

  20. 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! சென்னை: திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேல…

  21. ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியும்- விஜயதாரணி ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்துவரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாமென, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் நேற்றைய (திங்கட்கிழமை) அமர்வில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பான வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் உயிரிழந்த ரா…

  22. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 – 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து ‘ராமர் பெட்ரோல்’ என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு …

  23. தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், தாக சாந்தி செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புக…

    • 0 replies
    • 633 views
  24. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து இன்று வரையிலும் பல்வேறு மர்மங்கள் நீடித்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவே காரணம் எனவும், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதற்கு வைத்தியசாலை உள்ளிட்ட தரப்புகள் மறுப்பு வெளியிட்டு வந்தமையும…

  25. 'மோடியை எதிர்த்தால் மட்டுமே கட்சி நீடிக்கும்!' -எஸ்.ஆர்.பி, ராமமோகன ராவ் கொந்தளிப்பின் பின்னணி பொதுக்குழுவை நல்லபடியாக நடத்தி முடிக்கும் முடிவில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். ' மத்திய அரசுக்கு எதிராக வலுவாகப் போராட இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். அதையொட்டியே எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்றைக்கு ராம மோகன ராவ் கொதித்திருக்கிறார். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ஓ.பி.எஸ் மௌனமாக இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்க இருக்கிறது. இதில், பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.