தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
27 MAY, 2024 | 11:51 AM சென்னை: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில்,சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல் துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போ…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7 ஆம் திகதியன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர். ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த …
-
- 0 replies
- 445 views
-
-
29 ஏப்ரல் 2013 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையை எதிர்நோக்கி உண்ணாவிரதம் இருந்து வந்துள்ள நிலையில் சசிதரன் என்ற 21 வயது தமிழ் அகதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சசிதரன் கடிதம் எழுதிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சசிதரன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் சிலரை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ப…
-
- 0 replies
- 445 views
-
-
தமிழகத்தை நோக்கி விரையும் 'சாகர் புயல்!' ஒகி புயலின் ருத்ரதாண்டவம் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி நேற்று (30-11-2017) 'ஒகி' புயலாக வலுவடைந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமு…
-
- 0 replies
- 445 views
-
-
திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண் பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 24 ஜனவரி 2024, 02:50 GMT எச்சரிக்கை: இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். “ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” இப்படித்தான் தான் அனுபவித்த சித்திரவதையை விவரிக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண். இந்தப்…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள் நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது. செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோ…
-
- 0 replies
- 445 views
-
-
ஜெ மரணம்! விடை தெரியாத சில கேள்விகள்!!! | Socio Talk |
-
- 0 replies
- 445 views
-
-
சென்னை : சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. வாய்மொழியாக...: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். நிராகரிப்பு: ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.…
-
- 4 replies
- 445 views
-
-
ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன் "நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்? "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும…
-
- 0 replies
- 445 views
-
-
சிறீலங்கா தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் – இந்திய பிரதமர் கருத்து 18 Views சிறீலங்கா தமிழர்கள் மீது என் அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான்.”என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் சிறீலங்கா அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். அவர்கள் சமத்துவம் நீதி அமைதி கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனவும் அவர் தெரி…
-
- 1 reply
- 445 views
-
-
'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, திவாகரன் #VikatanExclusive ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். சசிகலா Vs ஓபிஎஸ் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்விளைவு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த எம்எல்…
-
- 0 replies
- 445 views
-
-
சென்னை : பாமக சார்பில் 117 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 3ம் கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தற்போது தர்மபுரி எம்.பி.,யாக இருந்து வருகிறார். அன்புமணி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விபரம் : 1. பென்னாகரம் - அன்புமணி 2. மேட்டூர் - ஜி.கே.மணி 3. சீர்காழி - பொன்.முத்துக்குமார் 4. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம் 5. பாபநாசம் - ஆலயமணி 6. பேராவூரமணி - கலைவே…
-
- 0 replies
- 445 views
-
-
'கவர்னருக்கு சபை மட்டும்தான் கணக்கு!' -ஓ.பி.எஸ் மௌனமும் மன்னார்குடி வியூகமும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர் நிர்வாகிகள். ' தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து அரசியலையும் கவனித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். சட்டமன்றத் தேர்தலின்போது, 'போடி நாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவாரா? தலைமை சீட் கொடுக்குமா' என்ற கேள்வி தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் மத்தியில் வலம் வந்தது. அவரது விசுவாசத்தின் மீது ஜெயலலிதாவுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாததால், சீட் கொ…
-
- 0 replies
- 445 views
-
-
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை படகு உடன் சிறைப்பிடித்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 11 பேரும் ஆஜர்ப்படுத்தபட உள்ளனர். https://www.polimernews.com/dnews/98422/தமிழக-மீனவர்கள்-11-பேர்-கைது..!இலங்கை-கடற்படை-அட்டூழியம…
-
- 0 replies
- 445 views
-
-
02 MAR, 2024 | 05:03 PM சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம். தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள்…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
தினகரனுக்கு எதிராக பழனிசாமி சதி? தி.மு.க., பரபரப்பு புகார் சென்னை:'முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர், தினகரனிடம் தற்காலிகமாக அடகு வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., தலைமையை நிரந்தரமாக மீட்பது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு, ஏற்கனவே வந்து விட்டனர்' என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக, ஸ்டாலின் சார்பில், மன்னார்குடி எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ராஜா வெளியிட்ட அறிக்கை: 28 கோடி ரூபாய்: குடியுரிமையில் பொய் சொல்லி, 'பெரா' என்ற, அன்னிய செலாவணி மோசட…
-
- 0 replies
- 445 views
-
-
தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து, அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் கலப்பு திருமண பிரச்சினைகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, சாலை மறியல்களோ, சாதி சங்க கூட்டங்களோ நடத்தக்கூடாது, சாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் இயக்குனர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று வந்தார். விழாவிற்கு புறப்பட்ட அவரை போலீச…
-
- 0 replies
- 445 views
-
-
பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா? 1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையுள்ளவர்களின் வாக்குகள் திமுகவிற்கே வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இடையில் புகுந்திருக்கும் தேமுதிக மக்கள்நலக்கூட்டணி, திமுகவிற்குக் கடும் சவாலாக இருக்கும் . திமுக காங்கிரசுக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைய…
-
- 3 replies
- 444 views
-
-
அம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபா அபராதம்! தமிழகத்தில் உள்ள வீதிகளில் அம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே பொருட்கள், கம்பிகள் இர…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நி…
-
- 0 replies
- 444 views
-
-
தனுஷ்கோடியில்... 58 ஆண்டுகளுக்கு முன்னர், கடலில் மூழ்கிய தரைப்பாலம்... வெளியே தெரிந்தது! ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மேலும் பாடசாலை, தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. புயல் ஏற்…
-
- 0 replies
- 444 views
-
-
அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 12 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNANAM படக்குறிப்பு, சட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், மு. கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
தமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்? தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்துதான் அவர் பாஜகவின் தேசிய தலைவரானார் என்பது நம்பிக்கை.தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதே கோவிலில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் யாருக்கு அப்பதவி கிடைக்கும் என நாள்தோறும் விவா…
-
- 0 replies
- 444 views
-
-
தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசா…
-
- 3 replies
- 444 views
- 1 follower
-