Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்நாடு நாள்’ விழா போட்டிகளில் கருணாநிதி புராணம் பாடச்சொல்வது ஏன்.. தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளி மாணவ – மாணவியருக்கு அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புராணம் பாடும் வகையில் உள்ளதால் கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நம் மாநிலத்துக்கு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று இருந்த பெயர் 1968 ஜூலை 18ல், ‘தமிழ்நாடு’ என அப்போதைய முதல்வர் அண்ணாதுரையால் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நாளை, தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழ்நாடு நாள் வருவதையொட்டி தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை ஆண்டுதோறும் நடத்துகிறது. இவை தமிழ்நாட்டின…

  2. தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான்! டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான். அவருக்கு அடுத்த பெரிய பணக்காரர் ப.சிதம்பரம். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வாங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகி, ரூ. 10.73 கோடியாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற மத்திய அமைச்சர்களின் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர…

  3. 06 FEB, 2024 | 10:40 AM சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும் எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டத…

  4. கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்துள்ள காட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை முறையற்ற வகையில் தொட்டதாக கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நெகமம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்களது பெற்றோர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் தகாத முறையில் நடந்துகொள்வதாக சென்ற வாரம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை…

  5. 'கடவுளைத் தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது!'- எச்சரித்த தினகரன் டி.டி.வி.தினகரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது அரங்கேறி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இந்நிலையில் இன்று அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், 'கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.…

  6. டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. …

    • 0 replies
    • 424 views
  7. ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக…

  8. 11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…

  9. கோடிக்கணக்கில் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! இராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று (26) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடக…

  10. தமிழகம் வரும் இலங்கை அகதிகளுக்கு உதவ தீர்மானம்! இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு உதவ தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாா், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 16 போ் கடந்த 22 ஆம் திகதி அகதிகளாக தனுஷ்கோடி சென்றனா். அவா்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழா்கள், தமிழகம் வரத் தயாராக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்திருந்தனா். …

  11. சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?! - திடுக் டெல்லி காட்சிகள் 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'பதவியேற்பு நடக்கும் வரையில் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார்' என அறிவித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'கிரிமினல் வழக்கு உள்ளவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என குடியரசுத் தலைவருக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் சசிகலா. இன்னும் சில தினங்களில் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார். 'கட்சியி…

  12. ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ நலம்பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து! Jul 16, 2022 15:01PM IST கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வம் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பன்னீரைக் கட்சியிலிருந்து நீக்க, பன்னீர் செல்வம் எடப்பாடியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை பன்னீர் வகித்து வந்த நிலையில் அந்த பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் …

  13. இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை! இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்…

  14. நளினியைச் சந்திக்க அனுமதி கோரி சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு 14 Views நளினியைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும், தனக்கு சிறையில் விதிக்கப்பட்ட தடைகளை இரத்து செய்ய வேண்டும் எனவும் சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்-நளினி தம்பதி என்பதால் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண…

  15. பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்! உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்புகளுக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார். https://athavannews.com/2021/1227208

  16. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தப…

  17. தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்! தூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக கொலை செய்த போலீசின் வன்மம் தொடர்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே கண்ணில்படுவோர் அனைவரையும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொலை வெறியோடும் தாக்குதல் நடத்தி தனது விசுவாசத்தை வேதாந்தா குழுமத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது காவல்துறை. இதன் ஒரு பகுதியே, ம…

  18. ஜெ. மறைவுக்குப் பின் அதிமுக: மூன்று மாத நிலவர பார்வை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார். மேலும், சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார். பின்னணி தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமி…

  19. இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது. அதே போல, இந்த…

  20. சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது. 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது. மேலும் அதில் கூறுகையில், …

    • 0 replies
    • 423 views
  21. கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN கடந்த புதன்கிழமையன்று, மறைந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு வந்தவுடன், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அருகே இருந்த மு. க. ஸ்டாலின் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட காட்…

  22. சொத்துக்குவிப்பு தீர்ப்பு: சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை? சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த 2015-ம் ஆண்டு விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆ…

  23. அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி! சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை…

  24. மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார் தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. வீரமணி எங்கே? வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர …

  25. சூரப்பாவை பழி வாங்குவதா: அரசு மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே விசாரித்தீர்களா?- கமல் கேள்வி சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.