Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக மதிமுகவில் கலகக்குரல்: கிருஷ்ணகிரி மா.செ.மாதையன் ராஜினாமா ! கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மாதையன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.சட்டசபை தேர்தலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சந்திப்போம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோ அறிவித்ததார். இந்த அறிவிப்பு அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதிமுகவின் மாநில பொருளாளராக இருந்த மாசிலா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ. தாமரைக் கண்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட மு…

  2. விஜயகாந்த், திருமாவை கடுப்பேற்றிய வைகோ...! -விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின் பிடிவாதத்தால் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததால், கடுப்பில் இருக்கிறார்கள் தலைவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா இணைந்ததையடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக முட்டி மோதி வருகின்றனர் கூட்டணியின் ஆறு தலைவர்களும். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணியைக் கடந்தும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர் கூட்டணிக் க…

  3. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளை தேமுதிக ஒதுக்கியது.வைகோ இந்தப் பட்டியலை வெளியிட…

    • 0 replies
    • 299 views
  4. கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு! சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து தி.மு.க தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை தி.மு.க தலைமை எடுத்…

    • 3 replies
    • 631 views
  5. ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் சிம்லா முத்துசோழன் யார்? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக முதல்வர் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளி வந்ததில் இருந்தே, அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து சிம்லா முத்துசோழன் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்லா முத்துசோழன் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமக…

  6. கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 173 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. கட்சி தலைவ…

  7. கோவை : நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள…

  8. முதல் கட்டமாக 45 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாமக! தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களில், 45 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் இத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியல், அக்கட்சியின். நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக…

  9. ஜெயலலிதா இப்படிதான் நடப்பார்... நடித்து காட்டிய விஜயகாந்த்! சென்னை: ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ''கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்" என்றார். மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். அதன்பின் மீண்டும் தனது பேச்ச…

  10. பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா? 1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையுள்ளவர்களின் வாக்குகள் திமுகவிற்கே வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இடையில் புகுந்திருக்கும் தேமுதிக மக்கள்நலக்கூட்டணி, திமுகவிற்குக் கடும் சவாலாக இருக்கும் . திமுக காங்கிரசுக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைய…

    • 3 replies
    • 440 views
  11. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்- குஷ்பு அதிரடி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு…

  12. விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இருவர் பலி ( ஆவணப் படம்) கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜ…

  13. தமிழகத்தேர்தல் திருவிழாவும், சீமானின் நாம் தமிழர் கூத்தும் : :வி.இ.குகநாதன் மே மாத நடுப்பகுதியில் மக்கள் முள்ளிவாய்க்கல் அவலங்களின் ஏழாவது ஆண்டு நிறைவின் துயரநினைவுகளில் மூழ்கியிருக்கும் அதே காலப்பகுதியில், புலத்தில் அவ் நினைவுதினக்கொண்டாட்ட உரிமைக்கான பாகப்பிரிவினைச் சண்டையில் புலம்பெயர் வியாபார அமைப்புக்கள் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் அதே காலப்பகுதியில், தமிழகத்தில் தொப்புள்கொடி உறவுகள் தம்மை அடுத்த ஐந்து வருடங்களிற்கு யாரிற்கு குத்தகைக்கு விடுவது என்பதனைத் தீர்மானிக்கும் தேர்தல் திருவிழாவில் ஈடுபட்டிக்கொண்டிருக்கப்போகிறார்கள். இத்தேர்தல் திருவிழாவில் அதிமுக, திமுக, மக்கள்நலக்கூட்டணி, பாமக, பாரதிய ஐனதா, நாம் தமிழர் ஆகிய ஆறு பிரதான முகாம்கள் போட்டிபோடுகின்றன. …

    • 1 reply
    • 1.9k views
  14. திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு! சென்னை: தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மக்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து 'மக்கள் தே.மு.தி.க.' என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை நேற்று சந்திரகுமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவதாக கருணாநிதி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தி.ம…

  15. தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா? தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள், அக்கூட்டணியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடந்து வருவதாக மக்கள் நலக் கூட்டணியினர் தெரிவிக்கின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில், கடந்த 50 ஆண்டுகளில் திமுக,அதிமுக அல்லாத மாற்று அணியாக, அதுவும் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது தற்போதுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி. அதை மெய்ப்பிக்கும் வகையில் முதலில் 4 கட்சிகளாக இருந்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவோடு 5 கட்சி அணியானது. …

  16. சென்னை: தமிழக வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் 90 ஆண்டுகள் பழமையான வீணையை ஏர் கனடா நிறுவனம் உடைத்த சம்பவம், வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இசைக் கச்சேரிக்காக கடந்த மார்ச் 31ம் தேதி கனடாவின் டல்லஸ் நகரில் இருந்து எட்மண்டன் நகருக்கு ஏர் கனடா விமானத்தில் சென்றார் வைத்யா. தனது பிரியத்துக்கும் ஆசைக்கும் உரிய அபிமான வீணையை ஒரு பெட்டியில் வைத்து, பத்திரமாக விமானத்தில் எடுத்துச் சென்றார். விமான நிறுவனத்தின் அலட்சியத்தால், வீணையை காணவில்லை. நிறுவனத்தில் புகார் செய்தார் வைத்யா. அந்நிறுவனமும் வீணையை தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்து ஏப்.6ம் தேதி ஒப்படைத்தது. வீணை திரும்ப கிடைத்ததில் ஆனந்தப்பட்ட வைத்யா, ஆசையுடன் பெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், வீணை உடைந்திர…

    • 2 replies
    • 891 views
  17. தமிழக சட்டசபை தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, தே.மு.தி.க., - மக்கள் நல கூட்டணியில் நேற்று, த.மா.கா.,வும் இணைந்தது. இந்த புதிய அணி, 20 சதவீத ஓட்டுக்கள் வரை அள்ளக்கூடும் என்பதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'கிலி' ஏற்பட்டுள்ளது. தமிழக தேர்தல்களில், எப்போதுமே, அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள் இடையே தான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அடைக்கலம் தேடிக் கொள்வது வழக்கம். விஜயகாந்தின் தே.மு.தி.க., வந்த பிறகு, இந்த நிலைமை மாறியது. 2006 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், இக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதன் காரணமாக, அந்த தேர்தலில், மும்முனைப் போட்டி ஏற்பட்டது. அப்போது, தி.மு.க., கூட்…

  18. உதயமானது மக்கள் தேமுதிக. | அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திரகுமார் அறிவிப்பு. | படம்: ம.பிரபு. தேமுதிக-விலிருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் இன்று போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சந்திரகுமார் போட்டிப் பொதுக்குழு கூட்டம் நடத்தினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் சந்திரகுமார் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தேமுதிக-வை உடைக்கும் எண்ணமில்லை என்றார். “தேமுதிக-வை உடைக்கும் எண்ணம் எங…

    • 0 replies
    • 629 views
  19. மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை! - குஸ்பு. சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காரணம், குஷ்பு வீடு இருப்பது மயிலாப்பூரில்தான். தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிதான் பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனைக் குஷ்பு மறுத்துள்ளார்.…

  20. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் | படம்: சிறப்பு ஏற்பாடு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு விவரம்: தேமுதிக - 104 தொகுதிகள் மதிம…

  21. ஒரு திருமண நிகழ்வில் வாசனுடன் வைகோ மற்றும் திருமாவளவன் | படம்: ஃபேஸ்புக். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவு குறித்து இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என பல நாட்களாக வாசன் கூறிவந்த நிலையில், இன்று ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமாகா கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. கூட்டணி தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் ஆலோசனை நடைபெற இருப்பதாகவும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 3 மணியளவில் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் அறிவிப்பார் எனவும்…

    • 0 replies
    • 585 views
  22. அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும்….. தமிழ் நாட்டில் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சு+டு பிடிக்க ஆரம்பித்து விட்டன. திமுக, அண்ணா திமுக, வைக்கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்றெல்லாம் திராவிட மாயையை முன்னிறுத்திப பல்வேறு கட்சிகள் களத்தில் செல்வாக்கோடு நிற்கும்போது, தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட “நாம் தமிழர்” கட்சியும் தன்னால் முடிந்தளவு வெற்றி வாய்ப்பைக் கூட்டிக்கொள்ளப் பாடுபடுகிறது. பாக்கு நீரிணைக்கு இருபுறங்களிலுமுள்ள தமிழர் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு, சோஷலிச சித்தாந்தங்களையும், பாரம்பரிய தமிழர் வாழ்வியலையும் முதன்மைப்படுத்தி ஒரு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை …

    • 0 replies
    • 743 views
  23. மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வைகோ தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் தன் கருத்து குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். I வைகோவின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தே.மு.தி.கவின் கூட்டணி குறித்து அதிருப்தி வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளர் சந்திரகுமார் குறித்து கண்டனங்களை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சந்திரகுமார் இதுபோல செய்வதற்குப் பதிலாக, வேறு தொழிலைச் செய்யலாம் என்று பாலியல் தொழிலைக…

  24. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக கொடுத்ததால் திருப்தியோடு இருக்கிறோம். கருணாநிதியை முதல்வராக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும்'' என்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலா 5, புதிய தம…

  25. மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உடன் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் | படம்: க.ஸ்ரீபரத் யாரிடமும் நான் ரூ.1,500 கோடி வாங்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேர்தல் நடக்கும் மாநிலங்களில் திடீரென பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். இதை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். சிறுதாவூர் பங்களாவில் இருந்து 2 கன்டெய்னர்களும், 10 லாரிகளும் வந்தன. அந்த பங்களாவில் ஏன் சோதனை நடத்தவில்லை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.