Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது. ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ …

  2. உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை. இதனிடையே, பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்…

  3. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு! வெற்றிடமாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இன்று(புதன் கிழமை) தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியபோது, “20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகின்றேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கின்றோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் …

  4. ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் : “ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வ…

  5. எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: நடிகர் கமல் காட்டம் சென்னை: 'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்து…

  6. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. இவர்களின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன் என்கிறார் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர். பொதுவாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மட்டுமே, இவர்களைச் சந்தித்துப் பேசி வருவது வழக்கம். இவர்களின் விடுதலைக்காக மாபெரும் பேரணி ஒன்றும் கடந்த 11-ம் தேதியன்று நடந்தது. இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் முருகனையும் சாந்தனையும் சந்தித்துப் பேசியிரு…

  7. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு November 14, 2018 1 Min Read சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று க…

  8. இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…

  9. போயஸ் கார்டன் பங்களாவில் குடியேறுகிறார் தீபக்? ஜெயலலிதாவின் சொந்த வீடான, சென்னை போயஸ் கார்டன் பங்களாவில், விரைவில் குடியேற திட்டமிட்டுள்ளார் அவரின் அண்ணன் மகன் தீபக். இதுதொடர்பாக, ஜோதிடர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. பங்கேற்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண் ணன், ஜெயகுமாரின் மகன் தீபக். அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சசிகலா உறவு களுடன் நெருக்கமாக இருந்தார். மருத்துவ மனையின் முக்கிய ஆவணங்களில், தீபக் கையெழுத்திட்டதோடு, ஜெ., இறுதி சடங்கிலும், சசிகலாவுடன் பங்கேற்றார். சொத்துக்குவ…

  10. சென்னையில் இந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று காற்றுமாசு குறைவு January 15, 2019 சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டதுடன் சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டினை விட காற்றுமாறு குறைவாக இருந்தத…

  11. ``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர் குருபிரசாத்தி.விஜய் Government & Politics ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர் பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பானமையான வார்டுகளில் வென்று நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி தி.மு.…

  12. பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவினை தற்காலிகமாக நீக்கவேண்டும் என்று கோரி தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் புதுக்கோட்டையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டைதோப்புக்கொள்ளையில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அங்கீகரித்து பெயர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை விருப்பத்திற்கு மாறாக சிறீலங்காவிற்கு அனு…

  13. பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மதிமுக நடத்தும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்படுவதாலும், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளில் ஓரவஞ்சமாக நடந்து கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி காட்டும் மதிமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, தேசிய நீர்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு எதிராக திருமயத்தில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு…

  14. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன். இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி ராமேசுவரத்தில் மீன் ப…

    • 1 reply
    • 408 views
  15. அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். #Kamalhaasan #Rajinikanth ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர். கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாந…

  16. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்க…

  17. போரூர் ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு மரண தண்டனை குற்றவாளி தஷ்வந்த், தூக்குக்கயிறு - கோப்புப் படம் போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியத…

  18. வாட்ஸப்பில் பரவும் முதல்வர் ப்ளஸ் அமைச்சர்கள் செல்போன் எண்! - பன்னீர்செல்வம் அணியின் விஷமமா? சசிகலா குடும்பத்தை விரட்ட ஏன் தயக்கம் என்ற கேள்வியை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேளுங்கள் என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கேள்வியைக் கேட்க அவர்களின் செல்போன் நம்பர்களும் அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளானது. சசிகலா தலைமையிலான அணி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா அணியினருக்குத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வந்தனர். சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து விரட்ட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை …

  19. இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...! தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நே்ற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர். இவர்கள், “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் …

  20. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% முதல்வர் பழனிசாமி அரசை கண்டித்து, அ.தி.மு.க., பன்னீர் அணியினர், சென்னையில், 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.சொந்த கட்சியினரே,எதிர்க் கட்சியாகும் வினோதம் அன்று, அரங்கேற உள் ளது.அன்றைய போராட்டத்திற்கு,மாநிலம் முழுவதும் உள்ள…

  21. அ.தி.மு.க., மீது பா.ஜ., பரிவு காட்டுவது ஏன் அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, ஜனாதிபதி தேர்தல் வரை, அ.தி.மு.க., என்ற, 'தேன் கூடு' கலையாமல் பார்த்துக் கொள்ள, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, எதிர்த்து வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின், தமிழக அரசு நிர்வாகத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலையிட துவங்கினார். அதை தொடர்ந்து, 'உதய்' மின் திட்டம், உணவு மானிய திட்டம் போன்ற, ஜெ., கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசு திட்டங்களுக்கு, தமிழக அரசு திடீரென பச்சைக் கொடி காட்டியது. ஜெ., போன்ற பெரிய ஆளுமை இல்லாமல், பலவீனமாக இருந்த அ.தி.மு.க.,வ…

  22. ஜெ.,க்கு அளித்த சிகிச்சை விபரம்: வெளியிட தீபா வலியுறுத்தல் சென்னை:''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரத்தை முழுமையாக வெளியிட வேண்டும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா தெரிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டி: * ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை என, திடீரென தெரிவித்துள்ளீர்களே? *** முதலில் இருந்து ஒரே கருத்தையே தெரிவிக்கிறேன். அப்பல்லோ மருத்துவமனை உள்ளே, என்னை அனுமதிக்கவில்லை. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்ன நடந்தது என்பது எதுவுமே தெரியவில்லை. எதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவில்லை. சிகிச்சை குறித்த தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்; அதில் மாற்று கருத்து கிடையாது. நான் எதையும் மாற்றி சொல்லவில்லை. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட…

  23. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரா…

  24. கரோனாவை தடுக்க ‘நானோ’ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசம்: காமராசர் பல்கலை பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு மதுரை கரோரனாவைத் தடுக்க, நானோ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசத்தை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரோக்கிய தாஸ், அசோக்குமார் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான ‘நானோ ’ தொழில்நுட்பத்தில் நவீன, புதிய சுவாசக் கருவி(முகக்கவசம்) ஒன்றை தயாரித்துள்ளனர். பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் இக்கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நானோ மெட்டீரியல், மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாச …

  25. அவுஸ்திரேலியா செல்லும் ஆசையில் உள்ள அகதிகளை குறிவைத்து, தமிழக அகதிகள் முகாம்களில் முகவர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவற்றை, “கியூ” பிரிவு பொலிஸார் தீவிரமாக கண்காணித்து, புதியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.இருப்பினும், உள்ளூர் முகவர்களை பிடிப்பதில், தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், பெரும்பாலானோர், அவுஸ்திரேலியா செல்ல விருப்பமாக உள்ளனர். அதற்காக, பல லட்சம் ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளனர். இதை அறிந்த முகவர்கள் முகாம்களில் உள்ள வசதியான அகதிகளை கண்டறிந்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, பணம் பெறுகின்றனர். பின், விசைப்படகில், அவர்களை அழைத்துச் சென்று, ஏதாவது ஒரு கடற்கரை பகுதியில் இறக்கிவிட்டு, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்…

    • 1 reply
    • 407 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.