தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
'மாஸ்' காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம் சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்க…
-
- 0 replies
- 488 views
-
-
பீப் பாடல் விவகாரம்: கோவை போலீஸ் முன் ஜன.11ல் ஆஜராக சிம்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! பீப் பாடல் விவகாரத்தில், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நாளை ஆஜராவதற்கு பதிலாக, வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் சிம்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் கோவைய…
-
- 1 reply
- 632 views
-
-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்? 'செம்பரம்பாக்கம் தண்ணீரை தாறுமாறாகத் திறந்துவிட்டதுதான், பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மூழ்கிபோகக் காரணம். இது அரசாங்கத்தின் தோல்வி' என்று சொல்லி தி.மு.க சார்பில் ஜனவரி 5-ம் தேதி மாபெரும் போராட்டத்துக்கு தீவிரமாகிவிட்டார் தமிழினத் தலைவர் கருணாநிதி. இவரை முந்திக்கொண்டு கறுப்பு எம்.ஜி.ஆர். போராட்டங்களை நடத்தி முடித்தேவிட்டார். இதேபோல... சிவப்பு காந்தி, பச்சை மண்டேலா, மஞ்சள் சே குவேரா, காவி படேல் என்று மற்ற மற்ற கட்சி தலைகளும் தங்களின் சக்திக்கேற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு, களத்தில் வீராவேசம் காட்டி வருகிறார்கள். ஆளுங்கட்சிக்கு வேறு வழியே இல்லை... இவர்களுக்கு எதிராக கண்டனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பு! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்திலில் தி.மு.க முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம்…
-
- 1 reply
- 946 views
-
-
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன? சென்னை: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். பதவி பறிப்பு ஏன்? நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது…
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களியுங்கள் http://www.poll-maker.com/poll526689xb0134918-22
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. சமீப காலமாக மக்கள் மத்தியில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எண்ணமும் வலுத்து வருகிறது. இதை வைத்து சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி நடந்தது. இந்த நிலையில் மதுரையில் நேற்று சகாயம் 2016 என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சகாயம் 20161/8 சகாயம் 2016 சகாயம் 2016 என்ற தலைப்பில் மதுரையில் நேற்று மாலை இந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நாகப்பட்டினம் ஜெகசண்முகம், காரைக்குடி சாமி ராஜ்குமார், திருச்சி சையது உமர் முக்தர், மதுரை ஜெயக்குமார், சுரேந்தர், தொழில் அதிபர் திருமுர…
-
- 0 replies
- 570 views
-
-
மும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் தோன்றி அசத்தல் ! தமிழகத்தில் செய்தியாளர்களிடம் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி.யில் தோன்றி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி அசத்தினார். மும்பையில் 6 அணிகள் பங்கேற்கும் பிரிமீயர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் நேற்றுத் தொடங்கின. ஒர்லி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி…
-
- 0 replies
- 611 views
-
-
"அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்" தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவும் இந்தியப் பிரதமர் மோடியும் (ஆவணப்படம்) இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார். இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் மட்டும் உறுதியாக இருப்பார்கள் என்று கூறும் முத்துக்குமார், வைகோவின் மதிமுகவும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த க…
-
- 0 replies
- 812 views
-
-
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு! [Friday 2016-01-01 09:00] கோவில்களில் நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அதில், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைக…
-
- 0 replies
- 700 views
-
-
மீனவ சமுதாயத்திற்கு தொடரும் துயரம்... விடிவு தருமா 2016? இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்கள் அடைந்து வரும் இன்னல்கள் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதி நாளான் இன்றுடன் இந்த இன்னல்கள் தீருமா? பிறக்க போகும் புதிய ஆண்டில் தங்கள் வாழ்வில் புதுவசந்தம் வீசுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மீனவர்கள் புத்தாண்டின் விடியலை நோக்கியிருந்த நிலையில், இன்று (31-ம் தேதி) காலை நாகை மாவட்டம் அக்கரை பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்தினர் இடையேயான மோதல் கடந்த 1983-ம் ஆண்டில் தீவிரமடைந…
-
- 1 reply
- 586 views
-
-
ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை தேமுதிக தலைவர் விஜயகாந்த் | படம்: பி.ஜோதிராமலிங்கம் அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூரில் நிவாரணம் வழங்கவேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றபின் அதிமுகவை சார்ந்தவர்கள் மேடை, ஒலிப்பெருக்கிகள், ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம்…
-
- 1 reply
- 787 views
-
-
2015-ல் தமிழகம் பேசியது! 2015-க்கு விடைகொடுக்கும் நாள் நெருங்கிவிட்டது. எப்போதும் ஓராண்டின் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த தருணங்களையும் தேசிய அளவில் அதிகம் கவனம் ஈர்த்த முகங்களையும் தரும் ‘தி இந்து’இந்த ஆண்டு முதல் தமிழகம் அதிகம் பேசிய விஷயங்களையும் தர ஆரம்பிக்கிறது. தமிழகம் அதிகம் விவாதித்த உள்ளூர் விஷயங்கள் தனியாகவும் தேசிய, சர்வதேச விஷயங்கள் தனியாகவும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கூடவே, இன்றைக்கு நம்முடைய உரையாடல் வெளியில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெற்ற நையாண்டிப் படங்களும் இடம்பெறுகின்றன. எனினும், இந்தப் பட்டியல் ஏதோ ஒரு முத்திரைபோல “இவைதான் முக்கியமானவை அல்லது கவனிக்கப்பட்டவை” எனும் தொனியில் வெளிய…
-
- 0 replies
- 910 views
-
-
விஜயகாந்த் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர் மீது தீ பற்றிய பரபரப்பு வீடியோ! விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டித்து அவரின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்ற போது அவர்களின் மீது தீ பற்றிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. vikadan.com
-
- 0 replies
- 640 views
-
-
பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, …
-
- 2 replies
- 767 views
-
-
திரு.விஜயகாந்த் அவர்களே... நீங்க எப்பவுமே இப்படித்தானா...? அது என்னவோ தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செய்தியாளர் சந்திப்பென்றாலே எட்டிக்காயாக கசக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடம் நியாயமாக கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டால்கூட, சிடுசிடு கடுகடுவென கடுப்படிக்கிறார். அந்த கடுகடுப்பில் நேற்றைய ‘தூ’ சம்பவம் அடுத்தகட்ட அத்தியாயத்தை எட்டியிருக்கிறது. இதற்கு முன் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை இப்படி கடுப்படித்த சம்பவங்களில் சில இங்கே... 1) கடந்த 2013-ம் ஆண்டு 3ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்…
-
- 0 replies
- 795 views
-
-
எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம்!' - சிம்பு தாயார் பீப் சாங் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சிம்புவுக்கு ஆதரவாகவும், அவர் தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி தவறாக பேசுவது தவறு என்றும், இதற்காக அவர் சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என்றும் கூறியுள்ளார். உஷா ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியின் வீடியோ இங்கே.... http://www.vikatan.com/news/tamilnadu/56774-we-dont-want-to-live-in-tamilnadu-simbus-mother.art
-
- 30 replies
- 2.8k views
-
-
2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! இந்தியாவை உலகப்புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி வாதத்தை முடித்துவிட்டது. இனி குற்றவாளிகள் தரப்பு தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதற்கான இறுதி-பதில் வாதம் நடைபெறும். பிப்ரவரி 1-ம் தேதியை அதற்கான ஆரம்பக் கெடுவாக குறித்துள்ளார் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. இந்த நேரத்தில் 2ஜி வழக்கின் ஒரு பிளாஷ்பேக்... 2ஜி அலைக்கற்றைக் கதைக்குள் ஒரு முன்கதை... என்ன நடந்தது? நாம் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஏறத்தாழ எல்லோரிடமும் 3ஜி வசதி இருக்கிறது. ஆனால், மொத்தமாக வழக்கொழிந்துவிட்ட 2ஜி வசதிதான், அப்போது இந்தியாவின் பேசு பொருள். நாடாளுமன்…
-
- 0 replies
- 1k views
-
-
2015-ல் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்தின் தர்மசங்கட தருணங்கள்! மக்கள் நலனுக்காகத்தான் அரசியல் தலைவர்கள் சேவை செய்கிறார்கள். ஆனாலும், அதில் சமயங்களில் விவகாரப் பஞ்சாயத்து கிளம்பிவிடுகிறது. அப்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா 2015-ல் விமர்சனங்களை எதிர்கொண்ட தருணங்கள் இது...! சட்டமன்ற வளாகத்தில் ஜெயலலிதா இருக்கும் படங்கள் ’போட்டோ ஷாப்’ மூலம் ஒப்பனை செய்யப்பட்டதாகக் கிளம்பிய விமர்சனங்கள்! சென்னை மழையில் ஆர்.கே நகர் பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஜெயலலிதா, ‘அன்பார்ந்த ஆர்.கே.நகர் தொகுதிவாழ் வாக்காளப் பெருமக்களே...’ என்று கூறி பேச்சைத் துவக்கினார். ’வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட வந்தபோதும் மக்களை…
-
- 0 replies
- 2.5k views
-
-
விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?! முன்குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் சம்பவங்களும் வர்ணனைகளும் முழுக்க கற்பனையே. ஆனால், அவை எதிர்காலத்தில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை! ஒரு பக்கம் விஜயகாந்தை கூட்டணிக்காக மக்கள் நலக் கூட்டணி கையைப் பிடித்து இழுக்க, மறுபக்கம் கருணாநிதி வாய்விட்டே வரவேற்பு கொடுக்கிறார். வழக்கம்போல விஜயகாந்த் முறுக்கிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் கலகல அத்தியாயங்களை எட்டும். அதை நமது கற்பனையில் இப்போதே ஓட்டிப் பார்த்தோம். நீங்களும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்..! தே.மு.தி.க. அலுவலகத்தில் காலை 9 மணிக்கு உள்ளூர் பா.ஜ.க. தலைவர…
-
- 0 replies
- 966 views
-
-
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர். இதனால் பட…
-
- 0 replies
- 681 views
-
-
வெள்ள நிவாரணம்: கருணாநிதியுடன் சேர்த்து 30000 பேர் வாங்க மறுப்பு சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத்திற்கான கணக்கெடுப்பு, ஓரளவு முடிந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 30 ஆயிரம் பேர், தங்களுக்கு நிவாரணம் வேண்டாம் என்று மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் தீவிரமடைந்தது. நவம்பர் 23ம் தேதி பெய்த கனமழையாலும், நவம்பர் 30முதல் டிசம்பர் 2ம் தேதி காலைவரை விடாமல் பெய்த பேய் மழையாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆற்றங்கரையோர குடிசைகள் மட்டுமல்லாது சென்னையில், நகர் பகுதிகளிலும் அடுக்கு மாடி க…
-
- 0 replies
- 769 views
-
-
ஒரு பஸ் டிரைவரின் தூக்கத்தின் விலை ரூ. 400 கோடி! கொல்கத்தா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது பஸ் மோதியதில் ரூ. 400 கோடி மதிப்புள்ள விமானம் சேதம் அடைந்தது. இன்று காலை 5.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை விமானத்தில் ஏற்றி இறக்க அழைத்து செல்லப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தை ஓட்டி வந்த, மொயின் அலி என்ற ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் அசாம் மாநிலம் சில்ச்சாருக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் இடதுபுற இறக்கை மீது மோதி விட்டதாக தெரிகிறது. இதில் விமானத்தின் என்ஜின் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மொயின் அலி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெர…
-
- 0 replies
- 924 views
-
-
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு; 1000 டன்களை இறக்குமதி செய்கிறது இந்தியா மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST புதுடெல்லி, தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 2-வது நாடாக இந்திய உள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் 900 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்க இறக்குமதி 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என அகில இந்திய நகை வியாபார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு:- …
-
- 0 replies
- 520 views
-
-
” என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “ இந்து ஆங்கில நாளிதழ் தெரிவிக்கும் செய்தி திகைக்கச் செய்கிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடல் வழிப்பாலம் ஒன்றினை இந்தியா உருவாக்கப்போகிறது. 23,000 கோடி வரை செலவழியக்கூடும் என்று சொல்லப்படும் இந்த திட்டத்திற்கு முழுவதுமாக கடன் தர ஆசிய வளர்ச்சி ( ADB ) வங்கி ஒப்புக்கொண்டிருக்கிறது….!!! மத்திய போக்குவரத்து அமைச்சர் திருவாளர் நிதின் கட்காரிஜி அவர்கள் தெரிவித்துள்ள இந்த செய்திக்கு … பதிலாக – இந்த செய்தி குறித்து, இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய ஆளும் கட்சித்தலைவர், அமைச்சர், Lakshman Kiriella கூறுகிறார் – ” இந்த திட்டத்தைப் பற்றி எங்கள் அரசுக்கு ஒன்றும் தெரியாது…
-
- 0 replies
- 794 views
-