Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சட்டமன்ற தேர்தலில்... விடுதலை சிறுத்தைகள், தனிச் சின்னத்தில் போட்டி சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என அரசாணை பிறப்பித்ததற்கு, முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் திருமாவள…

  2. சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி! தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகல…

  3. என்னை பொருத்தவரை ஜெயலலிதா என்பவர்.. சொல்கிறார் சசிகலா

  4. சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமி…

    • 1 reply
    • 446 views
  5. பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம் முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், மனு அளிக்கப்பட்டு உள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் ம…

  6. பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாரதியார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன். பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூல…

  7. தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம் தனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.அ.தி.மு.க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப்படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆலோசனை முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணையும் பட்சத்…

  8. அலை செய்திகளின் புதிய முயற்சியாக மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விவாதக்களம் ! மாணவர்கள் பங்கேற்ற இந்த விவாதக்களத்தில் தொலைக்காட்சியில் பேச முடியாத பல விடயங்கள் இதில் அலசப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்கள் பதிலை முன்வைத்து உள்ளனர். ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் ஆய்வாளருக்கு நிகராக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழக அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் தங்கள் பார்வையை அகலப்படுத்தி உள்ளனர் என்பதற்கு இந்த காணொளியே சான்று . இதில் மாணவர்கள் பேசிய தலைப்புகள் வருமாறு ௧. காங்கிரஸ் வீழ்ச்சி மற்றும் அரசியல…

    • 0 replies
    • 820 views
  9. 'கோயம்புத்தூர் வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைத்ததில் எஸ்.பி.வேலுமணி ஊழல்': தொடரும் திமுக - அதிமுக மோதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக - அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்திற்கான செலவை மாநில அரசும் கோவை மாநகராட்சியும் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. கொரோனா பெருந்தொற…

  10. சோழர் கால வெண்கல சிலைகள்: திருடப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் கிடைத்தது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TAMILNADU IDOL WING CID ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு சோழர் காலச் சிலைகள் அமெரிக்க அருகாட்சியங்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ள தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, இவற்றுக்கு உரிமை கோரும் ஆவணங்களை அந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளது. திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்த மூன்று சிலைகள் காணமல் போய்விட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் நாகராஜன் காவல்துறைய…

  11. மிஸ்டர் கழுகு: கமல் கட்சிக்கு யார் நிர்வாகிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும் சில துண்டுச்சீட்டுகளை டேபிளில் போட்டார். ‘‘ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விஷயம் எழுதியிருக்கும். எடுத்துப் பிரித்து, உள்ளே இருப்பதைப் படித்தால் நான் தகவல் சொல்கிறேன்’’ என்று தயாரானார். முதல் சீட்டை எடுத்து, ‘‘ஆடிட்டர் குருமூர்த்தி?’’ என்றோம். ‘‘சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேசினார். அங்கு நிருபர்களைச் சந்தித்த அவர், ‘ரஜினிக்கு நான் ஆலோசகர் இல்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. அது உண்மையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார். அங்கு அவர் பேசியதற்கும், ரஜினி தன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதற்கும…

  12. பெங்களூரு: எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக மேல்முறையீட்டு மனுவில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது. மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 …

    • 2 replies
    • 608 views
  13. தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி சென்னை: தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். தூத்துக்குடியில் 99 நாட்கள…

  14. அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் படக்குறிப்பு, அந்தமானில் பெயரிடப்படாத 21 தீவுகளில் ஒன்றுக்கு தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது. இந்த தீவுகள் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன? செவ்வாய்க் கிழமையன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பே…

  16. மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். திருப்பூரில் நேற்று கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத் துவ முகாமை தொடங்கிவைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது. நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திரா…

    • 0 replies
    • 264 views
  17. சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்தரவதைக்கூடமா?வழக்குகளில் விடுதலை பெற்றோர்,பிணையில் விடுதலை பெற்றோர் என 30 ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். பாழடைந்த பழையகாலக் கட்டிடமொன்றில் எவ்வித வசதிகளுமின்றி சட்ட நெறிகளுக்கு முரணாகச் சிறைவைக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவர் தினசரி உணவுக்கான ரூபாய் நூறு வழங்கப்படவில்லையென்றும், அநீதியான சிறைவைப்பென்றும் முழக்கமிட்டு நேற்று (04.02.2019) தற்கொலைக்கு முயன்று உள்ளார்.சிறப்பு முகாம் என்ற அநீதியை அகற்றிடக் குரல் கொடுப்போம்! ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் கவனத்தில் கொள்ளவும் n

  18. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 11:22 AM இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…

  19. மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -1 ( புதிய தொடர்) - தமிழ் மகன் சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத வாசனையாக கூவம் ஆறும் நினைவுக்கு வரும். துர்நாற்றம் வீசும் சாக்கடை. மூக்கைப் பிடித்துக்கொண்டுக் கடக்கப்பட வேண்டிய கழிவுக் கால்வாய். கறுப்பு ஆறு. இப்படியாகத்தான் இந்த ஆறு இன்றைய மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆற்றின் வாசம் அது அல்ல; அந்த ஆற்றின் நிறம் அது அல்ல. கங்கை, காவிரி போல அதுவும் ஓர் ஆறு. அதில் மக்கள் நீர் பிடித்தார்கள். நீர் குடித்தார்கள். குளித்தார்கள். இந்த ஆற்றுக்கும் ஓர் அருமையான கடந்த காலம் இருந்தது. அது சாக்கடையாகவே தோன்றி சாக்கடையாகவே கடலில் கலக்கும் ஆறு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நினைவில் தேங்கிவிட…

  20. எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள். P Chidambaram ( Twitter ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலு…

  21. பீப் பாடல் விவகாரம்: காலம் கடத்தும் சிம்பு... அவகாசம் கொடுக்கும் நீதிமன்றம்! பீப் பாடல் விவகாரத்தில், சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் சிம்பு ஆஜராக ஜன.29ம் தேதி வரை அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல்துறையினரும், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பல நீதிமன்றங்களிலும் வழக்கு பதிவாகி உள்ளது. இதனிடையே, சிம்பு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் இன்று, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவலர்கள் முன்பு ஆஜர் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அ…

    • 1 reply
    • 556 views
  22. தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது! அக். 3 கடைசி நாள். சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக …

  23. வீரப்பன் கூட்டாளிகளுக்கு மேலும் 6 வாரத்திற்கு நிம்மதி: இப்போதைக்கு தூக்கு இல்லை Posted by: Siva Updated: Wednesday, February 20, 2013, 12:22 [iST] டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவேந்திரா ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 12ம் தேதி நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்க…

  24. சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா? நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.