Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர். இவர் நேற்று காலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொண்டார். தீ காயங்களுடன் துடித்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட நாகராஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துசெல்வி என்ற மகளும், சேதுரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தான் அவர் தீ …

  2. அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்று தெரிவித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கால வரையறை நீடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காதான் முற்றுமுழுதாக காரணம் என்றும் வலியுறுத்தியே இந்த முற்றுகை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களே இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. http://onlineuthayan.com/News_More.php?id=390603919215147987#

  3. சென்னை : தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வீரமணி என்பவர் அளித்த புகாரின் பேரில் டிராபிக் ராமசாமியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். டிராபிக் ராமசாமி என அழைக்கப்படும் கே.ஆர்.ராமசாமி பிரபலமான பொதுநலச்சேவகர் ஆவார். போக்குவரத்து நெரிசலான சாலைகளில் தானே களமிறங்கி, அவற்றை சீர் செய்ததால் அவருக்கு ‘டிராபிக்' ராமசாமி எனப் பெயர் உண்டாயிற்று. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தன்னைத் தாக்கியதாக வீரமணி என்பவர் சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரில், ‘புரசைவாக்கம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு டிராபிக் …

    • 0 replies
    • 418 views
  4. நான் அகதி நிலையை மாற்றிக் கொள்வதில்லை என்றே உள்ளேன். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அகதி நிலைக்கு ஒரு முக்கிய காரணம் போராட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் எப்படி எனது அகதிநிலையில் மாற்றம் ஏற்படும்? குடியுரிமை என்பது அந்த நாடுகள் தாங்களாக தருபவை அல்ல. நாம் விண்ணப்பிக்க வேண்டும். நான் விண்ணப்பிக்கவில்லை. அவ்வளவுதான். குடியுரிமையை ஏற்கும்போது இந்தப் போராட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கொள்ளலாமல்லவா? இரண்டாவது….. குடியுரிமை பெறும்போது இந்த நாட்டு வரலாற்றினை இரத்தமும் சதையுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாட்டுக் கொடியின் மீதான இரத்தக்கறைகளுக்கும் நான் சாட்சியமாக வேண்டும். இவற்றைவிட ஈழக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போதே எனது அகத…

  5. ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான படகு தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அந்த படகில் இருந்த மீனவர்கள், கடல்நீரை கொண்டு படகில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பயந்துபோன தமிழக மீனவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்பி இன்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். மேலும், இதுகுறித்து படகின் உரிமையாளர் தமிழக மீன் துறையிடம் புகார் அளித்துள்ளார். …

  6. சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, கிண்டி போலீசார் சந்தேகத்துக்கிடமான 4 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் இயங்கி வரும் இந்து இளைஞர் சேனாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்து இளைஞர் சேனா-வைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை சேனல் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களை வைத்து, குண்டுகள் வீசிய சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்தவர்களிடமிருந்து இந்தக் குண்டுவீ…

  7. மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு MAR 12, 2015by அ.எழிலரசன்in செய்திகள் மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இரா.திரவியம் தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, ஓவியர் வீர.சந்தனம் உரையாற்றுவார். நினைவுரையை எழுத்தாளர்கள் பாமரன் மற்றும் ஜெயப்பிரகாசம், கவிஞர் வைகறை, முனைவர் அரணமுறுவல், சி.அறிவுறுவோன், பொன்மாறன், வழக்கறிஞர்கள் ஜெயம்சூலியஸ், ஜெபர…

    • 0 replies
    • 324 views
  8. கோடீஸ்வரர்களிடம் இல்லை, உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்: தொண்டர்களுக்கு, கருணாநிதி கடிதம். சென்னை: தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம…

  9. இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றுவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின் 7வது பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தனி மனிதரோ, உள்ளூர் நிர்வாகமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அபாயகரமான கழிவுகளை அகற்றவும் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. 2013ஆம் ஆண்டின் சட்டப்படி, இம்மாதிரியான பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டன…

  10. சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அமிர்தலட்சுமி என்பதாகும். இவர் எழும்பூர் கெங்குரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமாரின் மனைவியாவார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிகப்பட்டார். இதையடுத்து அமிஞ்சிகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அமிர்தலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அமுதலட்சுமிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கடந்த 4 ஆம…

  11. இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கூட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடவேண்டும். இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்காவிற்குள் செல்லக்கூடாது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு மாதம் தொழிலில் ஈடுபட தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கடற்பகுதிக்கு சென்று மீன்பிடிய…

    • 1 reply
    • 500 views
  12. 'சாந்தி' திரையரங்கம் இடிக்க முடிவு - நடிகர் பிரபு சென்னையில் உள்ள சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இன்று இந்த செய்தியை உறுதிப்படுத்தினார் நடிகர் பிரபு. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியபோது, சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அங்கு அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. அதில் நவீன தரத்துடன் கூடிய சாந்தி தியேட்டர் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். தினமணி Info: சென்னையின் முதல் ஏ.சி தியேட்டர் 'சாந்தி' என பெருமை பெற்றது!

    • 5 replies
    • 3k views
  13. கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்…

  14. சென்னை ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லை http://www.dailythanthi.com/News/State/2015/02/26103939/Flight-tire-exploded-accident-150-passengers-survived.vpf

  15. இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்குரிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது.. மருத்துவ முன்னேற்றங்களும் நவீன கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், புதிய புதிய நோய்களின் தாக்கமும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எத்தகைய நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால்கூட டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் எத்தகைய பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த இயன்முறை மருத்துவத்தைத் தமிழக அரசு பரவலான செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இயன்முறை மருத்துவத்தின் தரத…

  16. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது. இராஜபக்சேவுக்கு ஆதரவாக சிங்களக் கடும் போக்காளர்கள் பேரணியை நடத்தி மீண்டும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர். நடைபெறவிருக்கும் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது என்ற ஒற்றை நோக்கத்தோடு இப்போதைய இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகிறது. தமிழர்களைப் பற்றி அதிபர் மைத்ரிபாலாவும் கவலைப்படவில்லை. இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், தம்…

  17. தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் நீடித்துவரும் தீஸ்தா நதி நீர் பிரச்சனை தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால், மாநில முதலமைச்சரான மமதா ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட முடியாது. ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அண்டை நாடு தொடர்பாக பிரச்சனை இருக்கும்போது பயணம் மேற்கொண்டால், அந்தப் பணயம் பிரச்சனையை தெளிவாகப் புரிந்த…

  18. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபடப்போவதாக பிரபல கராத்தே வீரர் ஹூசைனி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் வேன்டுதலை தொடங்கினார். இதற்காக எட்டு அடி உயரம், ஆறு…

  19. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை - மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு! கேரளா மனு தள்ளுபடி! டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமி…

  20. திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…

  21. ஸ்ரீரங்கம்: ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளி வளர்மதி சாதனை! திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி சுமார் 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வாங்கி வளர்மதி சாதனை படைத்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் இன்ஜினீயர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 25 சுயேச்சைகளுடன், களத்தில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி…

  22. ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி இப்போதும் தனது தலைமையில்தான் செயல்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சமீபத்தில் பிளவு ஏற்பட்டது. அந்த அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலர், சீமானை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு ராமநாதபுர்ம மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் இன்று ராமநாதபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாம் தமிழர் கட்சி இப்போதும் என் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது கட…

  23. மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி இருக்கின்றது. சாதாரண மனிதனும் அதிகார லகான்களைக் கையில் ஏந்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. உங்கள் கட்சியின் சின்னமான துடைப்பம் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத் தாழ்வாரத்தில் நடமாட விடாமல் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்துகின்ற விதத்தில், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியை வரவேற்று ந…

  24. உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள். உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.