Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதையடுத்து ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், 23 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண்.7402 வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடையை சாப்பிட்டார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலதா சற்ற…

  2. மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை …

  3. ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம் சென்னையில் 2013-ல் நடைபெற்ற 'இந்திய சினிமா நூற்றாண்டு விழா' நிகழ்ச்சி. | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழம…

    • 41 replies
    • 3.4k views
  4. ஜெயலலிதா... துக்கத்திலும், வேதனையிலும், அன்பிலும் இதுவரை 14 பேர் மாரடைப்பால் மரணம். சென்னை: தவறுக்கு தண்டனை கிடைத்து ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயுள்ளார். ஆனால் தங்களது அன்புக்கு கிடைத்த தண்டனையாக, அதை அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். கலங்கிப் போய் நிற்கிறார்கள், துடித்துப் போய் மரணத்தை முத்தமிடவும் முயல்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்குப் போன சோகத்தால் இதுவரை தமிழகம் முழுவதும் 14 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது. தங்களைப் பெற்ற தாய் மீது கூட அதிமுக தொண்டர்கள் இவ்வளவு அன்பாக அம்மா என்று உருகியிருக்க மாட்டார்கள். மாறாக ஜெயலலிதாவை அந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்கள், வயது வித்தியாசம் இல்லாமல் அம்மா என்று அழைக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மீது அதிமுக…

  5. கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஜாமீன் மனு தாக்கல். | கோப்புப் படம்: எம்.பிரபு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நாளை (திங்கட் கிழமை) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். ”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர் நீதிமன…

  6. சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி. ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து 'சோ' ராமசாமி கூறியுள்ளதாவது: இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா இல்ல அரசியல் களம் என்பது தமிழ்நாட்டுக்குத்தானே பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல. தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஜெயலலிதா முன்பு இருக்கின்றன. இவ்வாறு சோ ராமசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்…

  7. சென்னை, கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி ராயப்பேட்டையில் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது இந்த தாக்குதல் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் 5 பி…

  8. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப…

  9. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர். இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது. முதல் அமைச்சர்தான் …

  10. ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்! சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 க…

  11. விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க கோரியும். தமிழக தமிழர்களை “Tamil Chauvinist groups” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி இன உணர்வுடன் செயல்படும் தமிழர்களை “தமிழின வெறியர்கள்” என்ற பொருள்படும்படி இந்த அரசாணை கண்டித்தும். நீதிபதி திரு.மிட்டல் அவர்களே திரும்பிப்போ என முழங்கும் உரிமை எழுச்சி போராட்டம் ஒன்று நேற்று நடை பெற்றது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு தொடர்பான அரசாணை தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் கட்சி செந்தமிழ்க்குமரன் தலைமையிலான தமிழ்த்தேச மக்கள் கட்சியினர் 35 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/34155/57/35/d,article_full.aspx

  12. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன. செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார். பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம…

    • 118 replies
    • 14.6k views
  13. தியாக தீபம்' தீலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் ,ராகவன், மதன் ஆகியோர் கல்லூரி வளாக விடுதியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை இன்று மேற்கொண்டனர். http://www.pathivu.com/news/34137/57//d,article_full.aspx

  14. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்து அருகில் உள்ளவெங்கடேசுவரா திருமண மண்…

  15. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்தனர். கைது செய்து தற்போது சென்னை கோயம…

  16. நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்பி சென்றுள்ள நிலையில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஐநா சபையில் மோடி உரையாற்ற உள்ளார். இன்று ஜெர்மனில் தங்கி அங்கு ஓய்வெடுத்தப் பின்னர் நியூயார்க் புறப்படுகிறார். இந்நிலையில் குஜராத்தில் அவர் முதல்வராக இருந்த போது நடைப்பெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க நீதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுத் தொடர்பாக நடைப்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பலியானார்கள். இது நடைபெற்றபோது குஜராத் முதல்வராக மோடி இருந்தார் என்பதால், கலவரத்துக்கு காரணம் மோடிதான் என்று கு…

  17. அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது. அந்தவைகையில் நாளை (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34094/57//d,article_full.aspx

  18. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நீதிப் பேரணிக்கு மக்கள் திரளாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து கொண்டுள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் தொடரும் .... (facebook)

  19. கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விடுத்துள்ளது. தமிழ்நாடு கள் இயக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாரப்பன் தலைமையில் கரூரில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்ல சாமி முன்னிலை வகித்தார். பின்னர், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது: கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில், கள்ளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வ…

  20. கொட்டும் மழையில், சுழன்றடிக்கும் காற்றில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை பூந்தமல்லியில் நடத்தி அரசியல் சூறாவளியில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் வைகோ! பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தின் ஏதாவது ஓர் ஊரில் மாநாடாக நடத்தும் வழக்கத்தை ம.தி.மு.க வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான விழா திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடக்கும் மாநாடு என்பதால் கட்சிக்காரர்கள் இதனை உன்னிப்பாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதேநேரத்தில், வைகோ உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்…

  21. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. சுந்தரபாண்டியபுரம் பேருராட்சி தலைவர் தேர்தல்அதிமுக வேட்பாளர் பண்டாரம் முன்னிலை ராமநாதபுரம் நகர்மன்றத்தலைவர் தேர்தல் அதிமுக வேட்பாளர் வெற்றி உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம் ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் நகர்மன்ற தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை சென்னை 35 வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி திருச்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் 5269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அதிமுக வேட்பாளர் முன்னிலை - 15,657 பாஜக ஜெயலட்சுமி பெற்ற வாக்குகள் - 6533 தூத்துக்குடி மாநகராட்சி- அதிமுக அந்தோணி கிரேஸி 22,700 வாக்குகள் அதிமுக வேட்பாளர் 12,790 வாக்குகள் முன்னிலை பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற…

  22. சென்னையில் நடைபெறவிருக்கும் தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்கம் மற்றும் உண்ணாநோன்பு காலம்: செப்டெம்பர் 26 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: மெமோரியல் ஹோல், பாரிமுனை சென்னை -01 தொடர்புகளுக்கு: தியாகதீபம் திலீபன் நினைவு உண்ணாநோன்பு நிகழ்வுக்குழு 9003170934, 9092391484 (Facebook: loyolahungerstrike)

  23. துடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியிடம் சி.பி.ஐ,. ரகசிய விசாரணை நடத்தியுள்ளது. சென்னையில் பிரபல வக்கீலான இவர் பலரை ஏமாற்றிய நிதி நிறுவனம் சாரதா சிட்பண்ட் நிறுவன அதிபரிடம் ரூ. ஒரு கோடி வாங்கியதாகவும், மேலும் இவரை காப்பாற்ற தான் துணை இருப்பதாகவும் கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது என்றாலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ.,க்கு கிடைத்த கடிதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கம் கோல்கட்டாவை மையமாக கொண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் கொடி கட்டி பறந்தது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட அப்பாவி மக்களுக்கு முதிர்வு தொகை தராமல் அந்த நிறுவனம் இழுத்து மூடியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுத…

  24. இலங்கையின் வடபகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாக எம்.ஜீ.ஆர். கருதினார் – நட்வர் சிங் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் சதிப்புரட்சி இடம்பெறலாம் என அஞ்சிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன இந்தியாவின் உதவியை நாடினார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் குழப்பங்களை தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்-ஆரம்பத்திலிருந்தே பல தவறுகள் இடம்பெற்றுள்ளன, புதுடில்லிக்கென ஒரு கொள்கை காணப்பட்டது அதேவேளை முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் வடஇலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்ற கொள்கையை பின்பற்றினார். …

  25. தமிழக எதிர்ப்பு எதிரொலி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்கும், யுஜிசி அறிவிப்பு வாபஸ். டெல்லி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அனுப்பிய சுற்றறிக்கையில், இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தும் படியும், சட்டம் மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.