Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'கோயம்புத்தூர் வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைத்ததில் எஸ்.பி.வேலுமணி ஊழல்': தொடரும் திமுக - அதிமுக மோதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக - அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்திற்கான செலவை மாநில அரசும் கோவை மாநகராட்சியும் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. கொரோனா பெருந்தொற…

  2. சோழர் கால வெண்கல சிலைகள்: திருடப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் கிடைத்தது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TAMILNADU IDOL WING CID ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு சோழர் காலச் சிலைகள் அமெரிக்க அருகாட்சியங்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ள தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, இவற்றுக்கு உரிமை கோரும் ஆவணங்களை அந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளது. திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்த மூன்று சிலைகள் காணமல் போய்விட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் நாகராஜன் காவல்துறைய…

  3. மிஸ்டர் கழுகு: கமல் கட்சிக்கு யார் நிர்வாகிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும் சில துண்டுச்சீட்டுகளை டேபிளில் போட்டார். ‘‘ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விஷயம் எழுதியிருக்கும். எடுத்துப் பிரித்து, உள்ளே இருப்பதைப் படித்தால் நான் தகவல் சொல்கிறேன்’’ என்று தயாரானார். முதல் சீட்டை எடுத்து, ‘‘ஆடிட்டர் குருமூர்த்தி?’’ என்றோம். ‘‘சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேசினார். அங்கு நிருபர்களைச் சந்தித்த அவர், ‘ரஜினிக்கு நான் ஆலோசகர் இல்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. அது உண்மையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார். அங்கு அவர் பேசியதற்கும், ரஜினி தன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதற்கும…

  4. தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி சென்னை: தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். தூத்துக்குடியில் 99 நாட்கள…

  5. மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். திருப்பூரில் நேற்று கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத் துவ முகாமை தொடங்கிவைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது. நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திரா…

    • 0 replies
    • 258 views
  6. சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்தரவதைக்கூடமா?வழக்குகளில் விடுதலை பெற்றோர்,பிணையில் விடுதலை பெற்றோர் என 30 ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். பாழடைந்த பழையகாலக் கட்டிடமொன்றில் எவ்வித வசதிகளுமின்றி சட்ட நெறிகளுக்கு முரணாகச் சிறைவைக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவர் தினசரி உணவுக்கான ரூபாய் நூறு வழங்கப்படவில்லையென்றும், அநீதியான சிறைவைப்பென்றும் முழக்கமிட்டு நேற்று (04.02.2019) தற்கொலைக்கு முயன்று உள்ளார்.சிறப்பு முகாம் என்ற அநீதியை அகற்றிடக் குரல் கொடுப்போம்! ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் கவனத்தில் கொள்ளவும் n

  7. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 11:22 AM இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…

  8. தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது! அக். 3 கடைசி நாள். சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக …

  9. வீரப்பன் கூட்டாளிகளுக்கு மேலும் 6 வாரத்திற்கு நிம்மதி: இப்போதைக்கு தூக்கு இல்லை Posted by: Siva Updated: Wednesday, February 20, 2013, 12:22 [iST] டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவேந்திரா ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 12ம் தேதி நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்க…

  10. சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா? நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியத…

  11. ‘தற்காலிகம்தான்...நிரந்தரம் அல்ல!’ - சசிகலாவுக்கு செக் வைக்கிறதா ஆணையம்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 'வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டார். முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தம்பிதுரை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.கவினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-…

  12. சசிகலாவுக்கு எதிராக போயஸ் தோட்டம் எதிரே ராப் பாடல்! (வீடியோ) சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர், சசிகலா முதல்வராக தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டத்திற்கு வெளியே கோவமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார். இதை ஃபேஸ்புக் லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/79910-sofia-ashraf-raps-against-sasikala-infront-of-poes-garden.art

  13. ஹலோ ஆளுநர் அலுவலகமா..! பெண் ஊழியரை பதற வைத்த போன்கால் (ஆடியோ) தமிழக அரசியல் சூழ்நிலையில் அடுத்த பரபரப்பாக ஆளுநர் அலுவலகத்துக்கு சென்ற தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உருவாகிய அதிகாரப்போட்டியால் கட்சித் தொண்டர்களும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இயந்திரம் முழுமையாக செயல்படவில்லை. இந்த களேபரத்தில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அலுவலகத்துக்கு போன் அழை…

  14. காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணி…

  15. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தள…

  16. 'ஸ்டாலின் - டி.டி.வி. தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி' - சுப்பிரமணியன் சுவாமி ஆருடம் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இணைந்து இன்னும் சில நாள்களில் கூட்டணி ஆட்சியமைப்பார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரவித்துள்ளார். அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பிரிந்திருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்தனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். டி.டி.வி. தினரனுக்கு தற்போது 23 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. ஏற்கெனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரி ரிசார்ட்டில்…

  17. மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்! ‘‘அனிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.” ‘‘தினகரனோ…

  18. 2 ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில், கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு! 2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தேதி நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப்போவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் …

  19. வேலூர்: வேலூரில் நேற்று 106 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர். வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி வெயில் 100 டிகிரியை தாண்டியது. பின்பு படிப்படியாக வெயிலின் அளவு 104 டிகிரி உயர்ந்தது. நேற்று காலை முதலே வெயில் கடுமையாக இருந்தது. அனல் காற்று மக்களை திணற வைத்தது. நேற்றைய வெயில் அளவு 106.3 டிகிரி. மாலை வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதற்கிடையில் அங்கு அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக மேலும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் மூடியபடியு…

    • 0 replies
    • 471 views
  20. நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன? ஆர்.அருண்குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அரியலூர் ரயில்வே நிலையம் அருகே நடராஜன், உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கடந்த ஆண்டு நீட் தேர்வ…

  21. "வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு. ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும். மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்…

  22. பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை முன்னர் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வந்தார்கள். அந்தப் பெயர் ஓர் எதிர்ம…

  23. புதைந்துபோன வரலாறு https://www.facebook.com/video/video.php?v=721854244552491 மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார…

    • 0 replies
    • 2.5k views
  24. புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.