தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
http://tamilepaper.blogspot.in/2013/11/blog-post_168.html http://tamilepaper.blogspot.in/2013/11/blog-post_12.html http://tamilepaper.blogspot.in/p/maalaimalar.html http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=12112013 ========================================================================
-
- 3 replies
- 545 views
-
-
நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது …
-
- 20 replies
- 2k views
-
-
சென்னை: சென்னையில் கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்கமாட்டோம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தமிழம் முழுவதும் கடையடைப்பு நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. வியாபாரிகளும் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்காக கடைகளை அடைத்தால் ஒவ்வொரு கடைக்காரர்களும் தனிப்பட்ட முறையில் நஷ்டப்படுவார்கள். எனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், பேரணி நடத்துங்கள். அதற்கு ஆதரவு அளிக்கிறோம். அதை விட்டுவிட்டு கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர…
-
- 0 replies
- 401 views
-
-
“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி” உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோய…
-
- 4 replies
- 867 views
-
-
காஞ்சிபுரம்: இலங்கைப் பிரச்னை தீர்ந்தால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய் விடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறினார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசுகையில், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இங்குள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அங்கு தேர்தல் நடத்தி தமிழர் ஒருவரை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இலங்கைப் பிரச்னை தீர்ந்தால் இங்குள்ள சில அரசியல் கட்சி…
-
- 0 replies
- 408 views
-
-
ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்... • அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும். • நிலத்தடி நீர் உப்பானால் அங்கு வி…
-
- 1 reply
- 698 views
-
-
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்வதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்கின்றனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எட…
-
- 1 reply
- 408 views
-
-
முழு அடைப்பு: ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வைகோ வேண்டுகோள்! சென்னை: ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கையை, காமன்வெல்த்திலிருந்து நீக்கக் கோரி வரும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி, ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர…
-
- 1 reply
- 515 views
-
-
கொழும்பு: இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்…
-
- 1 reply
- 351 views
-
-
அமைச்சர்கள் அனைவரும் கரூர் செந்தில் பாலாஜியையும், எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் பின்பற்ற ஆரம்பித்தால்... தமிழ்நாடு என்னாகும்? 'அம்மா’ என்பது ஒரு பொதுச் சொல். ஆனால், பொதுவான சொல்லாகவா அது பயன்படுத்தப்படுகிறது? 'அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டினார்கள். அம்மா படத்தோடு, அந்தத் தண்ணீரில் இரட்டை இலை மலர்ந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சிறிய பேருந்துகளிலும் இரட்டை இலைகள் பூத்துக் குலுங்குகின்றன. 'அரசுப் பணத்தில் கட்சி சின்னமா?’ என்றால், கறிவேப்பிலை, துளசி இலை, வாழை இலை... என்று தோட்டத்தில் பாத்தி கட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்படி ஒரு பசுமைப் புரட்சியை இந்த அரை நூற்றாண்டு காலத்தில் எவரும் நடத்தியது இல்லை என்பதை உணர்ந்த ஜெயலலிதா, மு…
-
- 0 replies
- 730 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில், உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு காவல்துறை அனுமதி கோரி பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, திறப்பு விழாவுக்கு அனுமதி அளிக்குமாறு தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞசை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், விழா நடத்தப்பட உள்ள இடம் தொடர்ப…
-
- 0 replies
- 587 views
-
-
கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள்.விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், செய்தி வாசிப்பாளருமான இசைப்பிரியா சிங்கள் இராணுவத்தினரால் இழுத்து செல்லப்படும் வீடியோ ஆதாரத்தை சானல் 4 வெளியிட்டுள்ளது. நான்கு நிமிடம் ஓடும் இந்த புதிய வீடியோ ஆதாரத்தின் மூலம் இசைப்பிரியா போரில் கொல்லப்பட்டார் என்ற இலங்கை அரசின் கூற்று பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இசைப்பிரியாவின் முகத்தில் உள்ள ஆழமான காயங்கள் அவர் சிங்கள இராணுவத்தால் பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக உள்ளது. இசைப்பிரியா நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் இசைப்பிரியா அரை …
-
- 0 replies
- 826 views
-
-
ராமேஸ்வரம்: சிங்களக் கடற்படையினர் துரத்தி வந்ததால் பயந்து போன ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் கடலில் படகோடு கவிழ்ந்து விழுந்தனர். இதில் 2 பேர் கடலில் மூழ்கி விட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள படையினர் துரத்தியதில் கடலில் விழுந்த 2 ராமேஸ்வரம் மீனவர்கள்- 30 பேர் சிறை பிடிப்பு காயமடைந்த மீனவர்கள் தப்பி வந்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய இரு மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்கள் நடந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், சிங்களக் கடற்…
-
- 0 replies
- 401 views
-
-
4th November 2013 காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். சேலம் காந்தி ரோட்டில் உள்ள மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 சாக்குப்பைகளில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு 4 பேர் கும்பல் தப்பிச்சென்றது. மேலும் அந்த கும்பல், ‘திராவிடர் விடுதலை கழகம்‘ என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற துண்டு பிரசுரங்களையும் வீசிச்சென்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப்பைகளில் தீ வைத்து வீசுவதற்கு தூண்டுதலாக இருந்ததாக …
-
- 0 replies
- 372 views
-
-
சேலம்: இசைப்பிரியா 2008ஆம் ஆண்டே படுகொலை செய்யப்பட்டதற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தாரா? என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, இன்று காலை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும். காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக…
-
- 0 replies
- 436 views
-
-
நெல்லை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் தஞ்சையில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஈழ தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8 ஆம் தேதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று தொடங்கியது. இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்…
-
- 0 replies
- 521 views
-
-
இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ் இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின்செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சிவெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன. சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொலியில், சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்து…
-
- 0 replies
- 569 views
-
-
1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…
-
- 1 reply
- 583 views
-
-
தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன. அன்னாரின் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். பெருந்திரளானோர் அகவணக்கம் செலுத்தினர். நாம் தமிழர் கட்சி (முகநூல்)
-
- 0 replies
- 580 views
-
-
Thirumurugan Gandhi அன்பான தோழர்களே, தொடர்ச்சியான அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறது மே17 இயக்கம். கோரிக்கைகளை காப்பதே நெருக்கடியான வரலாற்று காலத்தில் ஆகப்பெரும் முக்கியப்பணியாக இருக்கிறது. இதில் எம்மால் இயன்றப் பணிகளை செய்து வருகிறோம். தொடர்ச்சியாக புற நகர்வினை புரிந்து செயல்படுவதற்கும் ஏனைய தமிழர் பிரச்சனைகளில் பங்கேற்று கருத்துப்பரப்பல், போராட்டம் ஆகியவற்றினை நட்த்துவதில் அனைவரும் கைகோர்ப்பதும் அவசியம் நம்புகிறோம். இவையெல்லாம் ஏதோ ஒரு சிலர் மட்டுமே செய்வதும், செய்யக்கடமைப்பட்டவர்கள் என்பதும் ஒரு பொழுதும் நமக்கு வெற்றியை அளிக்கப்போவதில்லை. இனிவரும் காலத்தில் சோர்வினை அளிக்கும் நிகழ்வுகளாக நமக்கு இருக்கப் போகும் விடயம் நமது பங்கேற்பு அரசியல் சார்ந்த்தாகவே…
-
- 1 reply
- 738 views
-
-
http://www.youtube.com/watch?v=ae5j3H7BbtY
-
- 0 replies
- 499 views
-
-
காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது: பிரதமரிடம் வாசன் வலியுறுத்தல்! புதுடெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தி்த்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 33க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கனடா இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியுள…
-
- 1 reply
- 394 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு எடுத்துள்ள முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பில் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உயர்மட்ட குழு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதுபெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. …
-
- 0 replies
- 329 views
-
-
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான முக முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று புதுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மு.க. முத்து, திருவாரூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை புதுச்சேரி பத்மாவதி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கருணாநிதி குடும்பத்தினரும் நலம் விசாரித்தனர். விரைவில் மு.க. முத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். http://tamil.oneindia.in/news/tamilnadu/mk-muthu-hosp…
-
- 10 replies
- 6.4k views
-
-
திமுக தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக் கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சா…
-
- 6 replies
- 754 views
-