தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
ஈழத்தமிழர்களுக்காக சின்னத்திரை தயாரிப்பாளர்களும் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 11:54 ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும் பங்கேற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.ராதிகா சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு நிச்சயமாக ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,…
-
- 0 replies
- 473 views
-
-
வணக்கம் ! லயோலா திரி ஏற்றி தொடங்கி வைத்து, இப்போது தமிழகம் முழுதும் காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் ஈழப் போராட்டத்தைப் பற்றின முன்னுரை எவருக்கும் தேவையில்லை. அதனால் நான் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். தொலைகாட்சியின் வாயிலாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். அந்தப்போரட்டத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்கிறேன். வெள்ளிகிழமை (15/3/13) காலை 11 மணியளவில், அலுவலகம் கிளம்பும் முன்பாக சற்றென்று ஒரு விடயம் எனக்குப்பட்டது. ஞாயிறன்று மே - 17 இயக்கம் ,மற்றும் மாணவர் அமைப்பு மெரினா கடற்கரையில் நடத்தவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கு வலு…
-
- 1 reply
- 623 views
-
-
"இலங்கைக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது!' ""இலங்கைக்கு பொருளாதார தடையெல்லாம் விதிக்க முடியாதுன்னு, மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லிட்டார் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ""யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தான்... பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, தமிழகத்தை சேர்ந்த எம்.பி., க்கள் சிலரோட, ராகுல், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பா ஆலோசனை நடத்தினாரு... அப்ப, "இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை, காங்கிரஸ் ஆட்சி தான் செய்துருக்கு... இலங்கை தமிழர்களுக்கு, நேரு, இந்திரா, ராஜிவ் ஆட்சிக் காலத்துல இத்தனை உதவிகளை செஞ்சிருக்காங்க'ன்னு, எல்லா உதவிகளையும், அப்படியே பட்டியலிட்டு சொன்னாரு... கூடவே, "தனி ஈழம் கோரிக்கையை ஆதரிக்க…
-
- 2 replies
- 696 views
-
-
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?: ஜெயலலிதா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் , இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலிய…
-
- 0 replies
- 699 views
-
-
இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் சிங் சென்னை வந்து இங்கு உண்ணா நிலையில் உள்ள மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் . மாணவர்களை தொடர்ந்து போராட வேண்டும் , நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . முதலில் சென்னை ஐ ஐ டி கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார் . பின்பு அடையார் சட்டப் பல்கலை மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பின்பு அடையார் இசை கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து அவர்களை ஊக்கப் படுத்தினார் . எல்லா ஊடகங்களுக்கும் இலங்கையை இனப் படுகொலை நாடாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசை கல்லூரி மாணவ மாணவிகள் எவ் வித அடிப்படை வசதியும் இன்றி 3 …
-
- 2 replies
- 525 views
-
-
"டிராமா" கருணாநிதியுடன் 3 மத்திய மந்திரிகள்.... இரண்டரை மணிநேரத்திற்கு பின் "புஸ்ஸ்" சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், குலாம்நபிஆசாத் ஆகிய மூவரும் நேற்று மாலை இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர். நீண்ட நேரம் பேசியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடந்த இந்த, "டிராமா' இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோர…
-
- 2 replies
- 735 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள் எம்.டி, முத்துக்குமாரசாமி மாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது http://studentsprotest.blogspot.in ஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட…
-
- 0 replies
- 471 views
-
-
திய வரைபடத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து மணவர்கள் போராட்டம் தற்போது தமிழ் நாடு திருச்சியில் பல ஆயிரம் மாணவர்கள் அணிதிரண்டு நடத்திவரும் மாபெரும் போராட்டத்தின் போது இந்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகையிட்டு அங்கு உள்ள மத்திய அரசுக்கு உரித்தான பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டு அங்கு ஒரு அலுவலகத்தில் இருந்த இந்தியாவின் வரைபடத்திலிருந்து தமிழ் நாட்டை பிரித்தெடுத்துவிட்டு இந்தியாவின் வரைபடத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர் மாணவர்கள். இதே போன்றே இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளும் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு வங்கிகளின் கதவுகளுக்கு பூட்டு போடுவதற்கு மாணவர்கள் முயன்ற போது வங்கியின் காவலர்களே வங்கியின் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே பதுங்கியுள்ளதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் தெ…
-
- 0 replies
- 545 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து மீன்களையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த மீனவர்கள் 3 பேரும் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். http://dinamani.com/latest_news/article1506612.ece
-
- 0 replies
- 590 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். குஷ்பூ வீட்டைத் தாக்கினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது... குஷ்பூவுக்கு எதிராக கருத்துச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நடிகர் சந்திரசேகரை போனிலேயே வறுத்தெடுத்த கருணாநிதி மகளிரணி நிர்வாகிகளையும் 'என் முகத்திலேயே விழிக்காதிங்க' என சத்தம் போட்டார். இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் அம்மணி குஷ்பூ சமாதானம் ஆகவில்லை. இறுதியாக கருணாநிதியின் உத…
-
- 0 replies
- 619 views
-
-
பரதேசி படம் மிக அற்புதம் நான் அந்த படத்தை சிலாகித்து எழுதும் இரண்டாவது பதிவு இது . ஒட்டுபொறுக்கி யின் பாட்டி திரையில் வரும் வரை , ஏதோ மிதமிஞ்சிய கற்பனை என்ற எண்ண ஓட்டமே என் மனதில் இருந்தது , அந்த கிழவிக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அந்த கிழவியை திரைக்கு தேர்ந்து எடுத்த இயக்குனர் என்று அவர்களின் பணி மிக அற்புதம். அந்த கிழவி , திரையில் வந்த மறு நிமிடம் படத்தோடு அனைவரும் ஒன்றி விட்டார்கள் . நான் பாலாவை , ஒரு மன நலம் பாதித்த இயக்குனர் என்றே அவரது அனைத்து முந்தைய படங்களை பார்த்த பின்பு ஒரு பிம்பத்தை மனதில் வைத்து இருந்தேன் .(இந்த மனுஷனுக்கு சுத்தமே பிடிக்காது போல , எல்லா பயலையும் அழுக்காவே காட்டுறான் என்று ) அது இல்லை !, பாலா அனைவரது மனத்தையும் பாதிக்கும் திரை பதிப்ப…
-
- 0 replies
- 446 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று கலைஞர் அறிக்கை விடுத்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலைஞரிடம்…
-
- 0 replies
- 430 views
-
-
Harvard University has cancelled Janata Party leader Subramanian Swamy's summer courses over his controversial article in a Mumbai newspaper advocating destruction of hundreds of Indian mosques and disenfranchisement of non-Hindus in India. After a heated debate, a meeting of the Faculty of Arts and Sciences Tuesday voted to remove two Summer School courses - Economics S-110 and Economics S-1316 - taught by Swamy, according to The Harvard Crimson, the campus newspaper. Swamy received significant criticism for his op-ed last summer in Daily News and Analysis calling for the destruction of mosques, the disenfranchisement of non-Hindus in India who do not acknowledge…
-
- 2 replies
- 766 views
-
-
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இம்மாதம் 11-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த போராட்டத்திற்கு ஆதராவாக தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்களிடம் தூண்டுதலாக அமைந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு சட்டக்கல…
-
- 2 replies
- 706 views
-
-
இலங்கைத் தமிழரும் மாணவர்களும் கேள்வி பதில், சமூகம் March 17, 2013 அன்புள்ள ஜெ இன்று ஈழப்பிரச்சினைக்காகப் போராடும் மாணவர் கிளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதையும் சற்று கவனித்த பிறகே கருத்துச் சொல்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன் இப்போது போராடும் இந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினையின் உள்விவகாரங்கள் தெரியுமா? அங்கே உள்ள சகோதரச்சண்டைகளும் சாதியரசியலும் புரியுமா? இங்குள்ள அரசியல்வாதிகள் உருவாக்கும் ஒற்றைவரிகளை நம்பி இவர்கள் போராடுகிறார்கள் என்று தோன்றுகிறது ஸ்ரீனிவாசன் -------------------------------------------------------------------------- அன்புள்ள சீனிவாசன், எந்த மக்கள் போராட்டத்த…
-
- 2 replies
- 579 views
-
-
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். எங்களுடைய இந்த அமைப்பின் உடனடி செயல்திட்டமாக சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக் குறைவான எதையும் ஏற்க மறுப்போம்! ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக …
-
- 0 replies
- 848 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் உண்ணா விரதப் போலாட்டத்தை கைவிடவில்லை, கைவிடுவதற்காக நிர்பந்திக்கப்பட்னர் என்று தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் சுகிர் லஷ்மன் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் போராட்டம் எப்படி நிறுத்தப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்க இன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். சுகிர் லஷ்மன் மேலும் குறிப்பிடுகையில்: ஒரு சில தீயசக்திகளும் பங்கரவாதச் சக்திகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி மாணவர்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர். இதைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் இய…
-
- 59 replies
- 4.8k views
-
-
சென்னை: இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? ஆதரிக்காதா? என்ற கேள்விகள் ஒருபக்கம்.. இலங்கை நட்பு நாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விளக்கம் இன்னொரு பக்கம்.. உச்ச கட்டமாக தமிழக மாணவர்கள் போராட்டம்.. இந்நிலையில் 22-ந் தேதி நல்ல செய்தி வரும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ப.சிதம்பரத்தின் 'சைலன்ட்' ரோல் 'லாபி' ரோல் எப்போதுமே உண்டு. இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுப. வீரபாண்டியன், கனிமொழி வழியே ப.சிதம்பரத்தின் மூலமாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுவது உண்டு. தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் குக்கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் மார்ச் 23-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. அத்தீர்மானத்துக்கு இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்ப வேண்டும். அதன்…
-
- 0 replies
- 400 views
-
-
போராட்டத்தை ஒருங்கிணைக்க, "பேஸ்புக்" மாணவர்கள் இயக்கம் தொடக்கம். நெல்லை: தமிழகத்தில் நடந்துவரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வண்ணம் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை தொடக்கியுள்ளனர். சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த பேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டுள்ளது. இந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 8ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 7ஆயிரம் பேர் இத்தளத்தை பார்வையிட்டுள்ளனர். நாலுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட மாணவர்களுக்கு இந்த பேஸ்புக் களமாக அமைந்துள்ளது. நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 3 replies
- 555 views
-
-
தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு உறவுகளுக்கும் இன்று உலகப்பரப்பைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் தமிழீழமே தமிழருக்கான தீர்வாக அமையும் என்று கூறிக் களம் இறங்கியுள்ள எம் தமிழக மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் கனடாவாழ் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்து நிற்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்த போராட்ட உணர்வுகளும் ஆதரவுகளும் இன்றும் தமிழக மாணவர்களாகிய உங்களிடம் காணப்படுவதானது இன்று புலம்பெயர் நாடுகளில் வாழக்கூடிய பத்து லட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்களையும் போராட உத்வேகமளிக்கிறது. இன்று தமிழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள போராட்டம் புலம்பெயர் தமிழர்கள் மனதில் நிறைவைத் தந்த…
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சில நாள்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் தமிழக காவல் துறையினர் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் முக்க…
-
- 46 replies
- 3k views
-
-
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழக மீனவர்கள் கைதுகளுக்கு எதிராக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அவசரமாக நடத்திய சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 53 தமிழக மீனவர்களில் 34 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். எனினும் மேலும் 19 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவிருப்பதாக மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/55379
-
- 0 replies
- 536 views
-
-
கூட்டணியில் திமுக நீடிக்காது! சோனியாவுக்கு கலைஞர் கடிதம்! ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக நீடிக்காது என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய அநீதியை போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் இந்தியா பிரகடனப்படுத்த வேண்டும்…
-
- 3 replies
- 797 views
-
-
தமிழக மாணவர்களுக்கு, ஆதரவு வழங்கும் பாடல். இதனை உங்கள் முகநூலிலும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 528 views
-