தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நடக்கும் மர்மக் காட்சிகளால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் அ.தி.மு.கவினர். ‘பங்களாவுக்கு ஆடி காரில் பலர் வந்து செல்கிறார்கள். சசிகலா, இளவரசி பெயரில் இருந்த நிலங்களை ரகசியமாக வேறு பெயர்களுக்கு மாற்றி வருகின்றனர். ‘எங்களுக்கு எதாவது நடந்துவிடுமோ?’ என தினம் தினம் அச்சத்தில் வேலை பார்த்து வருகிறோம்’ என்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சர்ச்சையில் அடிபட்டது. ‘வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணத்தைக் கண்டெய்னரில் எடுத்துச் செ…
-
- 1 reply
- 501 views
-
-
ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி ரெய்டு! முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 9 பேர் கொண்ட சி.பி.ஐ குழு அதிரடி ரெய்டு நடத்திவருகிறது. இதேபோல டெல்லியிலும், நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்று வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது…
-
- 1 reply
- 564 views
-
-
தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது. தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண…
-
- 3 replies
- 919 views
-
-
விபரீதம் ஏற்படும்! பெங்களூரில் பழனிசாமி அணியைக் கலங்கடித்த வெற்றிவேல் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அருகதை இல்லை என்று எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் ச…
-
- 0 replies
- 296 views
-
-
ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்- மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted on December 14, 2021 by தென்னவள் 13 0 ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 0 replies
- 255 views
-
-
இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்! இந்திய அளிவில் உள்ள மாநில கட்சிகளின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. Association of Democratic Reforms (ADR) என்ற அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை விவரம் பின்வருமாறு: இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை மொத்தம் 47-ஆக உள்ளது. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே 2015-16 நிதியாண்டில் முறையான கணக்கு வழக்கை தாக்கல் செய்துள்ளது. மீதமுள்ள 15 மாநில கட்சிகளும் இந்த நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல்…
-
- 0 replies
- 668 views
-
-
http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-campaigns-admk-naam-tamilar-party-dissolved-tanjore-lse-198112.html
-
- 9 replies
- 1.2k views
-
-
வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்த 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆன்லைன் மூலம் சில புரோக்கர்கள் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணையில் இறங்கினர். நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி…
-
- 0 replies
- 898 views
-
-
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ம…
-
- 0 replies
- 778 views
-
-
தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கர்நாடகாவில் மைசூரு, மண்டியா, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங…
-
- 15 replies
- 3.5k views
-
-
காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது. Image captionஉயர்நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி…
-
- 0 replies
- 507 views
-
-
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஞானதேசிகன் ராஜினாமாவை வரவேற்ற ஜி.கே. வாசன், லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையை அவர…
-
- 0 replies
- 360 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தி…
-
- 0 replies
- 424 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி- கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் 100 அடிக்கு மேல் இருந்தால், ஜூன் 12ஆம் தேதியன்று அணை விவசாயத்திற்காகத் திறக்கப்படும். அதன்படி இந்…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு! கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர் நல மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்…
-
- 0 replies
- 590 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுவிவகாரம் – சி.பி.ஐ அதிகாரி மீது குற்றச்சாட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் வழங்குமாறு சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 369 views
-
-
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்…
-
- 1 reply
- 503 views
-
-
3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ? சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வார…
-
- 2 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னைக்கு தனி வானிலை மாடலை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா? இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவ…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு March 15, 2024 அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர். இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள்…
-
-
- 16 replies
- 1.4k views
-
-
சின்னம் தெளிவாக இல்லை.. நாம் தமிழர் காளியம்மாள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் சின்னம் தெளிவாக இல்லையென வடசென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நான் வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் மாதிரி வாக்குச்சீட்டை வெளியிட்டார்.அதில் எங்கள் கட்சியின் சின்னம் மங்கலாகவும், தெளிவு இல்லாமலும் இருந்தது. இதனால் எங்கள் கட்சிக்கு வயதானாவ…
-
- 0 replies
- 767 views
-
-
மீண்டும் மோடி?: தமிழர்கள் மறக்க வேண்டிய விஷயங்கள்! சரா சுப்ரமணியம் எவ்வித அலையும் வீசாத 2019 மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கப் போவோருக்கு உறுதுணை புரியக்கூடிய ‘நம்பர்’ தமிழகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறை தமிழக வாக்காளர்களும் தேச அளவில் முன் எப்போதையும்விட கூடுதலாகவே கவனிக்கப்படுகின்றனர். 2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய உத்தரப் பிரதேசத்தின் முடிவுகள் பேருதவி புரிந்தன. நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. இம்முறை அம்மாநிலத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. தேச அளவில் நிலவும் பொதுவான அதிரு…
-
- 0 replies
- 800 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் பயிற்சி நிறுவனங்களில் சேர பணம் இல்லாததால் இந்த ஆண்டு தங்களின் மருத்துவ கனவுகள் பறிபோகியுள்ளன என்கிறார்கள் தமிழ்நாட்டின் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள். நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கான பிரத்யேகப் பயிற்சிப் பெற்றுள்ளனர் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. 12ஆம் வகுப்பு படித்த பிறகு ஓராண்டு பயிற்சிக்காக செல…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு இன்று! வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மழைவருவதற்கான வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் துணை…
-
- 17 replies
- 1.5k views
-
-
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும…
-
- 0 replies
- 502 views
-