தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
'மத்திய அரசின் அனுமதி தேவையில்லை..!'- பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததோடு, உச்ச நீத…
-
- 1 reply
- 580 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில…
-
- 5 replies
- 999 views
-
-
மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனி எந்த காரணத்தை முன்னிட்டும், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது சாத்தியமில்லை, என்று முதல்வர் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹூப்ளியில் நிருபர்களிடம் முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: காவிரி நதிநீர் விஷயத்தில், மாநிலத்தின் உண்மை நிலவரங்களை பிரதமருக்கு விளக்கவும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது, என்று வலியுறுத்தவும், அனைத்து கட்சி குழுவுடன் நாளை (இன்று) டில்லி செல்ல தீர்மானித்துள்ளேன். அனைத்து கட்சிக்குழுவில், மாநிலத்தின் சார்பில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் இருப்பர். என் தலைமையில், டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ள இக்குழு, அவரிடம்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...! 1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது. 44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழு…
-
- 0 replies
- 583 views
-
-
ஜெயலலிதா இறந்த பின் எழுந்துள்ள சர்ச்சை- எரிப்பதா , புதைப்பதா? எரியூட்டுவதா, புதைப்பதா ? இறந்தவர்களின் உடலை அகற்ற இரு வழிகளுமே மனித நாகரீகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகள் தான் என்றாலும் , டிசம்பர் 5ம் தேதி காலமான , தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அடக்கம் செய்யப்பட்டது இந்திய ஊடகங்ளில் ஒரு பேசு பொருளாகிவிட்டது. எரித்தல், புதைத்தல் - இறந்த பின்னும் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பிராமண குலத்தில் பிறந்தவரான ஜெயலலிதாவை அவரது குல வழக்கப்படி தகனம் செய்திருக்கவேண்டும்; அடக்கம் செய்தது அந்த சமூகப் பழக்கத்தை மீறியதாகும் என்று இந்த ஆசாரங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் வாதிடுகின்றனர். ``அவர் பிராமண ஐயங்கார் குடும்பத்தைச் சேர…
-
- 1 reply
- 519 views
-
-
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக கட்சி விதிகள் திருத்தப்படும் என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார். …
-
- 5 replies
- 848 views
-
-
உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா! அரசியல் தலைவர்கள் தங்களுக்கென தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள். அரசியல் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண் அரசியல் தலைவர்கள் என்றால், கண்டிப்பாக குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே தீரும். அதுபோல அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அவரைப்போலவே சசிகலா பின்பற்றும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். உடை: …
-
- 2 replies
- 915 views
-
-
சசிக்கு எதிராக கிளம்பிய கே.பி.முனுசாமிக்கு ஆதரவு ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி உற்சாக வரவேற்பு அ.தி.மு.க.,வில், சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக குரல் கொடுத்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது போஸ்டர்களை, கட்சியினர் கிழித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில், திவாகரன் பேசும் போது, 'அ.தி.மு.க.,வை துவக்கிய…
-
- 0 replies
- 354 views
-
-
எம்.எல்.ஏ.,க்களை கண்காணிக்க சசிகலா உறவினர்கள் ஏற்பாடு சசிகலா முதல்வராவதை விரும்பாத, அ.தி. மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திசை மாறாமல் இருக்க, அவர்களை, சசிகலாவின் உறவினர் கள், ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக முடிவு செய்தார். அதன்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், சட்டசபை குழு தலைவராக, அவரை தேர்வு செய்தனர். பெரும்பாலானோர், விருப்ப மின்றி, சசிகலா உறவினர்களின் நெருக்கடியால் சம்மதித்துள்ளனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர்பன்னீர்செல்வம் உட்பட முக்கிய…
-
- 0 replies
- 256 views
-
-
தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சி மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள, சொகுசு விடு…
-
- 1 reply
- 452 views
-
-
சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம் #VikatanExclusive பெங்களூரு சிறையில் இருந்துகொண்டே தமிழக அரசியல் நிலவரங்களைக் கவனித்துவருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்குவந்துவிடும். அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளை பன்னீர்செல்வம் அணியை நோக்கி இழுக்கும் முயற்சிகளும் வேகம் பெற்றுள்ளன' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பாளர்கள். 'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என்ற அறிவிப்பின் மூலம், கார்டன் வட்டாரத்தை கதிகலங்கவைத்திருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'அப்போலோவில் நடந்த சம்பவங்களுக்கு விசாரணைக் கமிஷன் தேவை' எனக் கூடு…
-
- 0 replies
- 470 views
-
-
சென்னை: அரசியலில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும், நல்ல அரசியல் கட்சியில் சேர விரும்புவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார். நடிகை நமீதா சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். கண்தானம், ரத்ததான முகாம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் கண் தானம் செய்வதை வலியறுத்தி சென்னையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார். நமீதா இது போன்ற சமூக சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நமீதா ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நமீதாவை புகழந்து தள்ளுகிறார்கள். வெளிநாடுகளில் தெருவுக்கு தெரு பெண்கள் கழிப்பிடங்கள் இருப்பது போன்று நம் ஊரிலும் பெண்கள் கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என்று நமீதா ஆசைப்படுகிறார். இதையடுத்து சென்னை ராய…
-
- 0 replies
- 465 views
-
-
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை! ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐயின் விசாரணையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார். அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அரசு நடத்தும் எனத் தெரிவித்த அவர், குற்…
-
- 0 replies
- 321 views
-
-
என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து! மின்னம்பலம்2022-01-02 தலைநகர் சென்னையில் இன்னும் நான்கு நாள்களில் 45ஆவது புத்தகக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளில் புத்தகக்காட்சிகளுக்கு 10ஆம் தேதிவரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள், புத்தகப் பதிப்பாளர்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்றாலும் தாளைக் கைவைத்துப் புரட்டிப் படிக்கும் மனநிலை கொண்ட தீராத புத்தக ஆர்வலர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதிவரை இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று கூறலாம். மொத்தம் 800 புத…
-
- 2 replies
- 519 views
-
-
“பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது இந்திய அரசின் கடனுதவி வசதியைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சீனா உள்ளிட்ட நாடுக…
-
- 0 replies
- 234 views
-
-
சசி சொத்து முடக்கம்: அரசு அடுத்த 'மூவ்' அடுத்த கட்டமாக, நீதிமன்றம் விதித்த, அபராத தொகைக்கு ஈடாக, சசிகலாவின் சொத்துகளை முடக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, வருமானத் திற்கு அதிகமாக, சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ., இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான வழக்கை, உச்ச நீதி மன்றம் கைவிட்டது.மற்ற மூவருக்குமான தண்டனையை உறுதிசெய்தது. அபராத தொகையை வசூலிக்கவும்…
-
- 0 replies
- 496 views
-
-
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையை இன்று (செவ்வாய்கிழமை) திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக…
-
- 0 replies
- 393 views
-
-
’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன?’’ - எ பேட்டி வித் விஜயகாந்த் ‘எதிர்பார்க்கிறது எதிர்பார்க்கிற நேரத்துல கிடைக்காது; எதிர்பார்க்காதது எதிர்பார்க்காத நேரத்துல நடக்கும்’னு சொல்ற மாதிரி... அந்த மெசேஜ் வந்து விழுந்தது! ‘‘கேப்டன் பேட்டி ஓ.கே. மார்னிங் நைன்!’’ என்று விஜயகாந்த் உதவியாளரிடமிருந்து மெசேஜ். 'ஆனந்த விகடன் 4500வது இதழுக்கு விஜயகாந்த் பேட்டி கன்ஃபர்ம். காலைல ஷார்ப் 9’ என ’ஒளி ஓவியர்’ ராஜசேகரன் சார் அண்ட் கோவுக்கு மெசேஜினேன். (ஆனால், எனக்கு முன்னாடி அவர்கள் ஆஜர். நான்தான் லேட்!) விஜயகாந்தின் கோயம்பேடு அலுவலகம். வாசலில் ஏகப்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பூங்கொத்துகளுடன் காத்திருந்தனர். அவர்கள…
-
- 0 replies
- 609 views
-
-
நெல்லை மாவட்டத்தில் காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சு திணறி பலி - முழு விவரங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கபட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற 3 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் நிதிஷ் (7), மகள் நிதிஷா (5) பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் (4) ஆகியோர் சனிக்கிழமை வீட்டின் எதிரே பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் கதவு பூட…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இறுதி வாதம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கில் கூடுதல் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களின் இயக்குநர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, 5 …
-
- 0 replies
- 493 views
-
-
அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அடுத்த மாதம், 15ம் தேதி, திருவள்ளூரில் ம.தி.மு.க.,வின் மாநில மாநாடு நடக்கிறது. ம.தி.மு.க.,வினரைப் பொறுத்த வரையில், இந்த மாநாட்டு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ஏனென்றால், இம்மாநாட்டில் தான், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, வைகோ அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிரான முழக்கம் : தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை, அக்கட்சித் தலைவர் வைகோவின் தொடர் அறிக்கைகள் ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா அன்று துவங்கிய, மத்திய அரசுக்கு எதிரான அவரது முழக்கம், தொடர்ந்து கொண்டே போகிறது. இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: இந்தி மொழிக்கு மு…
-
- 0 replies
- 565 views
-
-
எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம் கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. எச். ராஜா இன்று காலையில் பதிவுசெய்த ஒரு ட்விட்டர் குறிப்பில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், ப…
-
- 2 replies
- 769 views
-
-
‘சூப்பர் ஸ்டார் புகழை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல் ‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார் என்றும் அவரை பாஜக தங்கள் கட்சிக்குள் கொண்டு வர தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் அமைப்புகள் ஏற்கனவே ரஜினி தமிழக அரசியலில் வரக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. தமிழ் நாட்டை தமிழினம் தான் ஆள வேண்டும் , தமிழர் அல்லாத ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராக வரக் கூடாது என்றும் குரல் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் அணு உலைப் போராளி உதயகுமார் அவர்கள் ரஜினி ஏன் தமிழக அரசியலில் வரக் கூடாது என்று ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தி…
-
- 3 replies
- 1.6k views
-
-
மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர். இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச…
-
- 1 reply
- 378 views
-
-
பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டும் நிதி நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கிரெடிட் கார்டு, செக்புக், மாதத் தவணை மற்றும் கடன் வழங்குவதல் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் மறுத்து வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி சக்திவேல் என்பவர், ”வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்று …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-