Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு மீது அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் - நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்ச…

  2. "பொய்களால் தொடரும் துயரம்" - மனைவியின் குற்றச்சாட்டை மறுத்து ஸ்ரீதர் வேம்பு விளக்கம் படக்குறிப்பு, ஸ்ரீதர் வேம்பு, ஸோஹா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த தனது நிறுவன பங்குகளை தனது உறவினர்களுக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார். தன்னுடைய மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த ஸோஹோ நிறுவனப் பங்குகளை தனது உறவினர்களுக்கு அந்த நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓவுமான ஸ்ரீதர் வேம்பு விற்றுவிட்டதாக அவருடைய மனைவி பிரமிளா ஸ்ரீநிவாஸன் கூறியிருந்த குற…

  3. இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பட மூலாதாரம்,PERUMAL MURUGAN படக்குறிப்பு, பெருமாள் முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 மார்ச் 2023, 13:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. …

  4. இருட்டறைக்குள் தொடரும் சித்திரவதை; சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உணவுதவிர்ப்புப் போராட்டம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் தற்போது வரை திருச்சி சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் விடுவித்தும் முழுமையாக விடுதலையை அனுபவிக்க முடியாதவாறு சூரிய வெளிச்சத்தை கூட பாரக்கவிடாது இருட்டறைக்குள் கொடுமைகளை அனுபவித்து வருவது குறித்து ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்…

  5. நெல் கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி - அரிசி விலை உயருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சன்ன ரகம் நெல்லுக்கு கடந்த ஆண்டை விட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் ஆலைகள் அதிக விலை கொடுத்து வாங்குவதால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் நெல் விளைச்சல் குறைவாக இருப்பதா…

  6. பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை ! Published By: T. SARANYA 14 MAR, 2023 | 10:16 AM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகளும் செய்துள்ளார்கள். …

  7. குறவன் - குறத்தி ஆட்டத்திற்குத் தடை - தமிழக அரசு உத்தரவு Published By: RAJEEBAN 13 MAR, 2023 | 02:24 PM தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், "ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகமும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்படும் விதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சி குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ந…

  8. "என் உயரம் எனக்கு தெரியும்" - தந்தையை பின்பற்றி தேசிய அரசியலில் பயணிக்கிறாரா மு.க.ஸ்டாலின்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாம் வெல்வதற்கு பணி செய்ய வேண்டும்" என்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து தொடர்ச்சியாக தேசிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக ஒரணியில் த…

  9. வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு - இலங்கை தமிழர் தொடர்பான சர்ச்சை பேட்டி குறித்து நேரில் விளக்கம் Published By: RAJEEBAN 12 MAR, 2023 | 12:44 PM மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்தனர் என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக மதிமுக, விசிகவினரிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. மேலும், திருமாவளவன் மீது வருத்தம் தெரிவித்து மதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நில…

  10. பாஜக, பாமக, போலீஸ்: நான் ஏன் அப்படிப் பேசினேன்? திமுக அரசு எப்படி செயல்படுகிறது? திருமாவளவன் பேட்டி பட மூலாதாரம்,FACEBOOK/THOL.THIRUMAVALAVAN கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரு வாரங்கள் முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு நிகழ்வில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் தாங்கள் இருக்கப்போவதில்லை என்று புதிய அழுத்தத்தோடு பேசினார், மேலும் தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார். …

  11. புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: சீமான் மீது வழக்கு! Mar 12, 2023 11:04AM IST புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் இன்று (மார்ச் 12 ) வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வெளி மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சித்தரித்து தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பாஜக வினர் வதந்தி பரப்பினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில். ”வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிகார்…

  12. தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை ! இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !! Published By: RAJEEBAN 11 MAR, 2023 | 01:02 PM தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான சட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாக இந்திய உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப…

  13. அரசு வழங்கிய சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் போட்டி: கல்லீரல் பாதித்து அரசுப்பள்ளி மாணவி உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகளில், ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு , மேற் சிகிச்சைக்கு சென்னை செல்லும் வழியில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி கவலைக்கிடமாக உள்ளார். நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான உருது நடுநிலைப்…

  14. மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்! மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாசுதன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாசுதன் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இர…

  15. கீழடி அருங்காட்சியகத்தில் இவ்வளவு பொருட்களா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்த பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தம…

  16. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் - 3 முக்கிய காரணங்கள் இவைதான் 42 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. …

  17. தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA கோவில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது தொடர்பாக திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாதியிலேயே அக்கூட்டம் முடிந்தது. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பான கருத்துகளை அறிவதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடி, கன்னியா…

  18. அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா? "எதிர்விளைவு இருக்கும்" - எச்சரிக்கும் அண்ணாமலை படக்குறிப்பு, கே. அண்ணாமலை, மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 52 நிமிடங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி? பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொ…

  19. H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விரிவான விளக்கம் அளித்துள்ளது. …

  20. சென்னையில் 6 வருடமாக கஞ்சா சாக்லேட் விற்பனை பீகார் இளைஞர் சிக்கியது எப்படி சென்னை அண்ணா சாலையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகள் விற்பனை செய்த பீகார் மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அண்ணாசாலை காவல்நிலைய போலீசார் தாராப்பூர் டவர் அருகே உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, அண்ணா சாலையில் அமைந்துள்ள தலப்பாகட்டி ஹோட்டல் அருகே உள்ள சாய் என்ற பான் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் உருண்டை என சொல்லக்கூடிய கஞ்சா …

  21. ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் சிறைபிடிப்பு நடந்தது என்ன ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யச் சென்ற தமிழ்நாடு போலீசார் 12 பேரை லஞ்சம் பெற முயன்றதாக பொய்ப் புகாரில் சிறைபிடித்த ராஜஸ்தான் போலீசார், தமிழ்நாடு காவல்துறை வழங்கிய ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அவர்களை விடுவித்தனர். சென்னை: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி நேற்று அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்று 25 லட்சம் ரூபாய் லஞ்சம் …

  22. "சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கிறார்கள்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக அரசு செய்யும் பணிகளைப் பல்வேறு மாநில மக்களும் தலைவர்களும் பாராட்டுவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, "நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நம…

  23. பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES “லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“ “ஸாலா மதாராஸி ஹட்டாவ்“ 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புல…

  24. நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! KaviMar 06, 2023 13:58PM போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது இன்று (மார்ச் 6) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்துப் பேசியது சர்ச்சையானது. அப்போதே ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அருந்ததியர் மக்களின் வரலாற்றை அடிப்படை ஆதாரம் இல்லாமல் சீமான் பேசியதாக கூறி அவரது பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இட…

  25. ஆட்டிசம் குறைப்பாட்டை களைய உதவும் செயலி - மகனுக்கு உதவ உருவாக்கிய தாய் 30 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையை சேர்ந்த எழுந்தாளரான லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன், தனது குழந்தை மட்டுமல்லாது பிற குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர்களில் பேசக்கூடிய குழந்தைகள், பேச இயலாத குழந்தைகள் என இருவகை உண்டு. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இந்த செயலியின் மூலம் தங்களின் தேவைகளை அருகில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க முடியும். இந்த செயலியின் உதவியுடன் அவர்களின் கற்றல் திறன், பேசுவதற்கான உந்துதல் ஏற்படும் என்று கூறுகிறார்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.