தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
DMK யும் BJPயும் நிஜத்தில் நண்பர்கள். MGR - Nambiyar சினிமா சண்டை போல சும்மா போட்டுக் கொள்வார்கள்.
-
- 1 reply
- 378 views
-
-
சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சினை: சமரசம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் KaviDec 22, 2022 16:45PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்களில் எத்தனையோ குடும்ப பிரச்சினைகள், எத்தனையோ சொத்து பிரச்சினைகளை மையமாக வைத்த கதைகள் அமைந்திருக்கின்றன. அவற்றை சிவாஜி கணேசன் தியாகம் செய்தோ, தன் சாமர்த்தியத்தாலோ தீர்த்து வைக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகம் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவர் நடித்த சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இப்போது சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட…
-
- 1 reply
- 866 views
-
-
எம்ஜிஆர் முதல் தேர்தலிலேயே வென்ற ரகசியம் தெரியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,MGR FAN CLUB 1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றி…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை! KalaiDec 24, 2022 11:27AM பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: கசப்பை உணரும் விவசாயிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் போனதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளைந்த கரும்புகளை இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 அளிப்பதால், தனியாகக் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது…
-
- 0 replies
- 619 views
- 1 follower
-
-
``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர் குருபிரசாத்தி.விஜய் Government & Politics ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர் பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பானமையான வார்டுகளில் வென்று நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி தி.மு.…
-
- 0 replies
- 397 views
-
-
தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் “தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு” என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மதுரையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற தொடக்க அமர்வில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியனிடம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க வெளியீடான சங்கப் பேழை என்ற இதழ் வழங்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நான்கு ஆய்வு அரங்குகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து க…
-
- 0 replies
- 737 views
-
-
கலைஞர் வரலாறு – திராவிடமும் சமூக மாற்றமும் புத்தக வெளியீட்டு விழா! KaviDec 23, 2022 12:06PM தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 24) கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, திராவிடமும் சமூக மாற்றமும் ஆகிய இரு நூல்களை வெளியிடுகிறார். தி இந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன். ஆசிய இதழியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் இயங்கி வருகிறார். பன்னாட்டு மற்றும் தேசிய இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து, “கலைஞர் மு.கருணாநிதி வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். அதுபோன்று, தமிழக அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவரும், பொருளாதார அறிஞரு…
-
- 0 replies
- 452 views
-
-
சாகித்ய அகாதெமி விருது பெறும் காலாபாணி நாவலின் கதை என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மு. ராஜேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய காலாபாணி நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கன்னடத்திலிருந்து யாத்வேஷம் நாவலை மொழிபெயர்த்த கே. நல்லதம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது. "இதற்கு முன்பாக 1801 என ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலுக்காக வரலாற்றாசிரியர் ராஜய்யனைப் பார்க்கும்போது, 1801ல் சிவகங்கையில் நடந்ததுதான் விடுதலைக்கான முதல் புரட்ச…
-
- 0 replies
- 741 views
- 1 follower
-
-
வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா? - சாவித்திரி கண்ணன் வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர்! நடிகர்! வசீகரமான இளைஞர்! பழகுவதற்கு இனிமையானவர்! ஆனால், அவரது அரசியலின் நோக்கம் என்ன? இது வரையிலான அவரது செயற்பாடுகள் உணர்த்துவது என்ன? கடந்த கால அரசியல் காட்டும் தோற்றம் என்ன..? தமிழக மக்கள் உதயநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன? வாரிசு அரசியலாகத் தான் உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு நடந்துள்ளது என்றாலும், இது அதிர்ச்சி தரவில்லை. அதிரடியாக நிகழ்ந்ததாகக் கருத இடமுமில்லை. எதிர்பார்த்த ஒன்றே! எனினும், வாய்ப்புக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறாரா? இல்லை, தந்தையைப் போல தடுமாறப் போகிறாரா? என்பதைத் தான் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளாக கலை…
-
- 2 replies
- 832 views
-
-
இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ? அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில்…
-
- 1 reply
- 229 views
-
-
தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு By RAJEEBAN 20 DEC, 2022 | 01:18 PM தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த மனு மதுரை ஐகோர்ட் கி…
-
- 7 replies
- 689 views
- 1 follower
-
-
ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 46 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் …
-
- 0 replies
- 741 views
- 1 follower
-
-
(என்.வீ.ஏ) தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 2021 இலிருந்து டிசம்பர் 2022 வரை 25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்…
-
- 0 replies
- 591 views
-
-
புதுவையில் திமுகவின் தொய்வு எப்படித் தொடங்கியது? மீண்டும் அது முன்னிலை பெறுமா ? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / V. NARAYANASAMY FACEBOOK புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? …
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கமைய , உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமை இலங்கைக்குரியதாகும். தவறான தகவலால் எ…
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழ்நாடு எல்லைக்குள் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: தீர்வு என்ன ? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து, சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில், இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள 17 மாவட்டங்களில் கழிவுகள் எப்படி கையாளுப்படுகின்றன என்பது பற்றிய விரிவாவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கவேண்டும் என உ…
-
- 3 replies
- 871 views
- 1 follower
-
-
உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்? AaraDec 16, 2022 09:47AM தமிழ்நாட்டு அரசியல் களம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் மிக வெளிச்சமாக தெரிகின்றன. டிசம்பர் 14ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே அவர் கட்சி அடிப்படையில் ஸ்டாலினுக்கு அடுத்த முகம் என்று முன்னிறுத்தப்பட்டு விட்ட நிலையில், ஆட்சி ரீதியான நிர்வாகத்திலும் ஸ்டாலினுக்கு அடுத்தது உதயநிதி தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது அமைச்சர் பதவி ஏற்பும், அதற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளும் அமைந்துள்ளன. உதயநிதிக்கு கிடைத்த உயரம் இந்த அமைச்சரவையில் மிக இளையவன் என்று …
-
- 8 replies
- 673 views
- 1 follower
-
-
மு.க. ஸ்டாலின் அரசில் அமைச்சராகிறார் உதயநிதி - டிசம்பர் 14இல் பதவியேற்பு - அடுத்த திட்டம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DMK தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவை டிசம்பர் 14ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையொட்டி பதவியேற்பு விழாவுக்கான பணிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்பார்…
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
கோவில்பட்டி பள்ளிக்குள் புகுந்து சாதியைச் சொல்லி திட்டி, தலித் மாணவனைத் தாக்கியதாக இரு பெண்கள் மீது வழக்கு படக்குறிப்பு, சிதம்பரம்பட்டி பள்ளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவில்பட்டி அருகே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சாதியை கூறி சக மாணவியின் பெற்றோர் திட்டி அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டியை சேர்ந்த பேச்சுப் பாண்டி மனைவி மாரியம்மாள் (30). இவரது மகள் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7-…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
"ஆ. ராசாவின் வாக்குறுதி நம்பிக்கை தரவில்லை" - போராட்டத்தை தொடரும் அன்னூர் விவசாயிகள் - என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை அன்னூர் தொழிற்பூங்காவுக்காக விவசாயிகள் நிலங்கள் பலவந்தமாக கையகப்படுத்தப்படாது என்று திமுக எம்.பி ஆ. ராசா அளித்த வாக்குறுதி நம்பிக்கை அளிக்கவில்லை என்றும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் கூறியிருக்கிறார்கள், இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகள். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3,864 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிப்பதால் தற்கொலைகள் தடுக்கப்படுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதால், கடைகளில் எளிதில் கிடைக்கும் ஆறு வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மாநில அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. அந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சாணி பவுடரை தடை செய்வதற்கான முயற்சியிலும் தமிழக அரசு தீர்க்கமாக இருப…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
கடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் பட மூலாதாரம்,IDOL WING, TN POLICE 3 மணி நேரங்களுக்கு முன்னர் உளுந்தூர்ப்பேட்டையில் 2011ஆம் ஆண்டில் திருடப்பட்ட சென்னையில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பிரபல சிலை கடத்தல்காரரான தீனதயாளனால் இந்தச் சிலைகள் விற்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி இரவு ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில் கோவிலைச் சேர்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் திருடுபோய…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில் கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIYARAJAN DMK / FACEBOOK படக்குறிப்பு, சென்னை மேயர் பிரியா ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசி…
-
- 3 replies
- 482 views
- 1 follower
-
-
இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் Play video, "இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபஜா என்ற மாற்றுத்திறனாளி ஒரு விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது வாழ்வாதாரத்திற்காக சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகத்துக்கு வெளியே அரசு நலத்திட்ட விண்ணப்பங்கள், கோரிக்கை மனு, கடிதங்கள் உள்ளி…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-