Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala முதல்வர் பன்னீர்செல்வம், மெரினாவில்... நேற்று (7-2-17) ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு, 40 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது மன உந்துதலால்தான் சில உண்மைகளைச் சொல்ல வெளிவந்ததாகக் கூறினார். சசிகலா கட்டாயப்படுத்தியதன் பேரிலேயேதான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந…

  2. கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற அமர்த்தியா சென்னின் கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நோபல்'' பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்'' என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72-ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் ப…

  3. தமிழகத்தில்... 800க்கும் மேற்பட்டவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை தொற்று! இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து தற்போதுவரை 2 ஆயிரத்துத்து 470 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கூடுதலாக 30 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்…

  4. அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் கடிதம் சிக்கியது! அதிர்ச்சித் தகவல் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ள கடிதம் சிக்கியுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த …

  5. சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் உஸ்மான் சாலை. | படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விதிமீறல் கட்டிடங்கள் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை…

    • 0 replies
    • 439 views
  6. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் …

  7. டார்கெட் தி.மு.க..! - கருப்புசிவப்புக்கும் காவிக்குமான பனிப்போர் "அ.தி.மு.க, தி.மு.க எனும் இரண்டு மிகப்பெரிய திராவிடக் கட்சிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்து, 'கழகம் இல்லாத ஆட்சி; களங்கமில்லாத ஆட்சி” என்ற தங்களின் கோஷத்தை தமிழகத்தில் நிலைநாட்டத் துடிக்கிறது பி.ஜே.பி" என்ற புகைச்சல் திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2014-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தவுடன், அந்தக் கட்சியின் அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டது அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி என்பதுதான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவருகிறது அக்கட்சி. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் …

  8. கோட்டையை உடைக்கும் தினகரன்! ஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்... மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் ம…

  9. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக்குவிப்…

  10. 20 AUG, 2023 | 10:06 AM சென்னை: வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகுச் சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சி…

  11. ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7ம் திகதி செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்களும் நேற்று அடையாளம் காணப்பட்டது. அதில் 12 பேர் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள். 5 பேர் தர்மபுரி, 3 பேர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து சென்ற அவசரஊர்தியின் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய ஆணையம் நோட்டீஸ் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும், 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 9 பேர் பிணமாக கிடந்த …

  12. சென்னை பாரிமுனையில் பணத் தகராறில் இலங்கை வியாபாரியை கடத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனா். இலங்கையைச் சோ்ந்தவா் வியாபாரியான முகம்மது ஷியாம் என்பவர், தொழில் நிமித்தமாக அண்மையில் சென்னை சென்றிருந்தார். பாரிமுனையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, ஒரு கும்பல் கடத்தியது. மேலும், அந்தக் கும்பல் இலங்கையில் இருக்கும் அவரது மகளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு முகம்மது ஷியாமை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளது. இது குறித்து அவா், வடக்கு கடற்கரை பொலிஸ் நிலையத்தில் இணையம் மூலமாக முறைப்பாடளித்தாா். அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணா நகா் 10-ஆவது பிரதான சாலை பகு…

  13. பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ மீது செருப்பு வீச்சு: பெரும் பரபரப்பு பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பாஜக மகளிர் அணியை சேர்ந்த சிலர் செருப்புகளை வீசினர் மதுரை பாண்டி பஜார் அருகில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தயாராக தனது தொண்டர்களுடன் நின்றிருந்தார். அப்ப்போது அந்த வழியாக பேருந்தில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பாஜக மகளிர் அணியினர் வைகோ மீது சரமாரியாக பத்துக்கு மேற்பட்ட செருப்பை வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த மதிமுகவினர் அந்த பேருந்தின் மீது செருப்புகளை வீச அந்த இடமே ரணகளமானது இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட…

  14. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்ப…

  15. நயன்தாரா வருகையால் சேலத்தில் தள்ளு முள்ளு; ஆம்புலன்ஸும் நிறுத்தம்! சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல துணிக்கடை ஒன்றின் 21-வது கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக இளைஞர்கள், ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரளாக வந்திருந்தனர். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு சுமார் 3 மணி நேரம் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியின் 3 சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் பொதுமக்கள் மீதும், பத்திரிக்க…

  16. மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 04 SEP, 2024 | 03:05 PM தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீன…

  17. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவில் உள்ளது கர்நாடகம். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத…

  18. பிணையில் வருகிறார் நளினி? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். …

    • 3 replies
    • 1.5k views
  19. சென்னை: பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் ஏற்கனவே நடிகர் விஜய்க்கு 2007-ம் ஆண்டில் டாக்டர் பட்டமும், 2017-ம் ஆண்டில் நடிகர் விஜயகுமாருக்கும் டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது. அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்க…

  20. அரசியலுக்கு வருவாரா ரஜினி: குழப்பிய தேர்தல் முடிவு! மின்னம்பலம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அதிக ஆர்வத்துடன் காத்திருந்தவர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து ஒன்றே முக்கால் வருடங்கள் கடந்த பிறகும் ரஜினி தனது கட்சியை ஆரம்பிப்பதற்கு இன்னும் பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி ஆட்சி முடிந்த மறு நொடியே ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அவரது தரப்பில் பலரும் இதுவரை சொல்லிவிட்டார்கள். இந்தச் சூழலில் இடைத் தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்தார் ரஜினி. இந்த இடைத் தேர்தலின் மூலம் திமுகவின் வாக்கு வங்கி, அதிம…

  21. படக்குறிப்பு,கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஏப்ரல் 2025, 07:13 GMT மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கினார். அதனை அடுத்து நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பாம்பன் பாலத்தின் வரலாறு இந்திய நாட்ட…

  22. பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X படக்குறிப்பு,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது? மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானம் சென்னை சர்வதேச விமான ந…

  23. யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி

  24. கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை September 3, 2025 5:22 pm கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான், கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.