Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த இந்திய விமானப் படை – இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? ரெஹான் ஃபஸல் பிபிசி நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIRMAL NIBEDAN இது ஜனவரி 21, 1966 அன்று நடந்த நிகழ்வு. இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) தலைவர் லால்டெங்கா, இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தக் கடிதத்தில் மிசோ வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாம் சுதந்திரம் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். …

  2. கொவிட் -19' எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ஆசியா…

    • 4 replies
    • 474 views
  3. சோபன் சாட்டர்ஜி 2 முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான அவர், சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரசில் பணியாற்றி வந்தார். மம்தாவின் வலது கரமாக இருந்து வந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சி இல்லாத மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக 2014 மக்களவை தேர்தலின்போது 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த பாஜக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக…

    • 0 replies
    • 474 views
  4. மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா! இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் கு…

  5. தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது …

    • 4 replies
    • 473 views
  6. அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை! அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இதன்போது அக்னி பிரைம் ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக எட்டியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னி பிரைம் ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து 1000 முதல் 2000 கிலோமீற்றர் தூரம்வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225533

  7. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, காஷ்மீரின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. புதன் கிழமை நள்ளிரவு முதற்கொண்டு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்த கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற…

    • 0 replies
    • 473 views
  8. முத்தலாக்: முஸ்லிம் பெண்களின் நிலை இந்த 5 ஆண்டுகளில் மாறியதா? நியாஸ் ஃபரூக்கி பிபிசி, புது டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முஸ்லிம் பெண்கள் - கோப்புப்படம் 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உடனடி முத்தலாக், அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அஃப்ரீன் ரெஹ்மான்,இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு முத்தலாக் கொடுத்திருந்த கணவர் அவருடன் சமாதானம் செய்ய மறுத்துவிட்டார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. எனி…

  9. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை புதுடெல்லி, இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.…

  10. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது…

  11. எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ! மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் தனக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆபீஸுக்காக தான் வாங்கிக் கொடுத்திருந்த 300 சேர்களை தூக்கிக் கொண்டு போன செயல் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் அப்துல் சத்தார் நபி என்பதாகும். இவர் தற்போது சில்லோட் என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் ஒளரங்காபாத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சியில் சீட் கிடைக்கவில்லை. கடுப்பான அப்துல் சத்தார் தனது ஆதரவாளர்களோடு கட்சி அலுவலகத்திற்குப் போனார். அங்கு போட்டிருந்த 30…

  12. 1.1 டிகிரி குளிர் வாட்டிய டெல்லி புத்தாண்டு நாள்: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பனி-தூசி மூட்டத்தில் டெல்லி இந்தியா கேட் பகுதி. 2021 புத்தாண்டு தினம் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நடுங்கும் குளிர் நாளாக இருந்தது. அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது. சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது. காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின…

  13. பொருளாதாரரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல் Getty Images மோதி இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு பொதுப்பிரிவில் இருந்து அளிக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதற்காக அரசு நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டுகிறது. மிக முக்கியமாக, இதுவரை இட ஒதுக்கீட்டின்…

  14. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சலர் பணியிடம் உள்ளிட்ட நான்கு பணிகளுக்கான அஞ்சல் துறைத் தேர்வுகள் வழக்கத்துக்கு மாறாக, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நாடு முழுவதும் நடந்தன. மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வை நடத்தவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வை நடத்த அனுமதித்த நீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதைக் கண்டித்தனர். இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பினர். இதையடுத்து, நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படும் என்…

    • 0 replies
    • 470 views
  15. விளாடிமிர் புதின் இந்தியா வருகை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதில் இருநாட்டு வெளியுறவு, மற்றும் இராணுவ அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1254680

  16. படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…

  17. வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம் பட மூலாதாரம்,CBI 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்து இந்தியாவில் மருத்துவர் ஆவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேருக்கு எதிராக இந்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று இந்தியா முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 91 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் மதுரை, திருந…

  18. `நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா சிந்து ஆர் Oxygen cylinder ( AP Photo / Rajesh Kumar Singh ) `தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இ…

    • 2 replies
    • 470 views
  19. இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அஜய் குமார் மேலும் கூறியுள்ளதாவது, “விமானப்படை திறனை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது. அந்தவகையில் 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேவேளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறு…

  20. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பினராயி விஜயன் சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப…

  21. தமிழுக்கு இந்திய நாடாளுமன்றில் பா.ஜ.க அவமரியாதை! மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில் தி.மு.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதன்போது ‘தமிழ் வாழ்க’ எனக்கூறி பதவியேற்றமைக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டமையினால், அவைவையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். அவர்கள் பதவியேற்ற பின்னர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர். இந்…

  22. 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம் February 18, 2020 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகின்ற அதேவேளை பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் தற்போது இந்திய பொருளாதாரம…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ - Citizenship Amendment Act)' என்பது நாட்டின் சட்டம். இந்த சட்டத்தை எதிர்க்கட…

  24. உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல…

  25. ஆந்திர பெற்றோர்கள் தங்களது மகள்களை கொலை செய்தார்களா? பின்னணி தகவல்கள் ஆந்திராவில் பெற்றோர்கள் தங்களது மகளை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் வசியம் நடந்ததா? எப்படி கொலை நடந்தது? கொரோனா பரிசோதனை எடுக்க மறுக்கும் தாய் சொல்வது என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.