Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…

  2. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங…

  3. செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரண…

  4. நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…

  5. சல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்! பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார். நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பெற முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மா…

  6. ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை வெளியிடத் தடை! ‘நாட்டையே உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிடப்படவிருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தக வளியீடுக்காக பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை புத்தக கடைக்கு கொண்டுசெல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட…

  7. இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ் நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜூன் 2024 டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்த…

  9. ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் In இந்தியா August 3, 2019 7:08 am GMT 0 Comments 1128 by : Yuganthini ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியு…

  10. காஷ்மீர் விவகாரம் ; பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என போர்க் கப்பல்கள் ஆயத்தபடுத்திய இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர். அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காஷ்மீர் வி…

  11. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வ…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்க…

  13. ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை! ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 539 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 125 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகா…

  14. ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:25 AM புதுடெல்லி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த…

  15. 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி கே. விஜயராகவனுடன் இணைந்து செயல்படும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு, ஒரு தனி விமானத்தில் இந்…

  16. நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ் மற்றும் மோதி: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை 5 ஆகஸ்ட் 2020 KEYSTONE-FRANCE 1933ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு வயதாக வயதாக, மதத்துடனான எனது நெருக்கம் குறைந்துவிட்டது" என்று எழுதினார். 1936 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையில், "ஒழுங்கமைக்கப்பட்ட மதம் எனக்கு எப்போதுமே அச்ச உணர்வையே கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இது எப்போதும் மூடநம்பிக்கை, பழமைவாதம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது.அதில் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் இடமில்லை" என்று எழுதுகிறார். சோம்நாத் கோயில் குஜராத்தில் உள்ள…

  17. உத்தரப்பிரதேசத்தில்... கங்கையில், மிதக்கும் உடல்கள் : தொடரும் அவலம்! உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் மிதந்த வந்த ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கங்கை நதியில் எறியும் கொடூரம் தொடர்ச்சியாக வட மாநிலங்களில் நடத்து வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் மேலும் 6 உடல்கள் கங்கையில் மிதந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாவட்ட ஆட்சியருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறான சம்பவங்கள் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காரணத்தினால் சூழல் மாசடையும் தன்மை காணப்படுவதுடன், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என ந…

  18. கேரளாவில் கனமழை – 18 போ் பலி 22 பேரை காணவில்லை October 17, 2021 தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழையினால் 18 போ் உயிாிழந்துள்ளதுடன் 22 போ் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 22 பேரை காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. . அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்…

  19. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில் அனாமிகா என்று குறிப்பிடப்பட்ட இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இர…

  20. ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம் ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1317019

  21. அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளரும், முஸ்லிம் மத குருவுமான மவுலானா கலீல்-உர்-ரஹ்மான் சாஜித் நொமானி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ’பெண்களை கல்லூரிக்கு துணையில்லாமல் அனுப்பாதீர்கள். பர்தா அணிந்தும் கூட தனியாக அனுப்பாதீர்கள். மாதிரிப்படம் அப்படி அனுப்புவது பாவமான செயல். பெண்களை கல்லூரி மற்றும் கோச்சிங் சென்டருக்கு துணையில்லாமல் அனுப்பும் பெற்றோரை அல்லா நகரகத்திற்கு அனுப்புவார்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து, இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற முஸ்லிம் அமைப்பாளர் ஜாவேத் ஆனந்த் அளித்த பேட்டியில், `நோமானியின் கற்பனையான ஆல…

  22. புட்டின் இன்று இந்தியா செல்கின்றார் October 4, 2018 1 Min Read ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா மற்றும் ரஸ்யா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புட்டின் இன்று இந்தியா செல்கின்றார். புட்டினின் இந்தப் பயணத்தின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புட்டின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில் நாளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…

  23. கோவில் பிரசாதத்தில்... பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 12 பேர் பலி. பின்னணியில்... 2 பேர் கைதுகர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்திலுள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜைகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்று பிரசாதம்…

  24. படத்தின் காப்புரிமை Getty Images இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு காணொளி மூலமாக செய்தி அனுப்பியுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ''இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல'' என்றார். …

  25. பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிமீது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த வழக்கில், அவரின் சகோதரன் மற்றும் உறவினர் கொல்லப்பட்டதையடுத்து, தற்போது அவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் 5Comments Share பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியின் பிரமுகர் உட்பட நான்கு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.