அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
எல்லைப் பகுதியில்... சீனாவை, எச்சரிக்கும் வகையில் இந்தியா போர் பயிற்சி! சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையினர் போர் ஒத்திகை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த போர் ஒத்திகை கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஒத்திகையில் சி130 ஜே சூப்பர் மற்றும் ஏஎன் 32 ரக விமானங்கள் பங்கேற்றுள்ளன. மேலும் பாராட்ரூப்பர்ஸ் எனப்படும் விமானத்தில் இருந்து குதிக்கும் பாராசூட் வீரர்கள், எதிரிகளின் இலக்குகளை தாக்குவதுபோல் பயிற்சி எடுத்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1247833
-
- 0 replies
- 116 views
-
-
கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அங்கீகாரம்! கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி, சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா அரசாங்கம் தளர்த்தியுள்ள நிலையில், டிஜிஏ-வின் இந்த தீர்மானம் முக்…
-
- 0 replies
- 131 views
-
-
500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாக மோடி அறிவிப்பு! கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதி…
-
- 0 replies
- 122 views
-
-
பாகிஸ்தானின் ரூபாய் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு! அமெரிக்க டொலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது, தற்போது பாகிஸ்தான் ரூபாவின் பெறுமதியானது டொலருக்கு 175 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க டொலருக்கு நிகரான பாக்கிஸ்தான் ரூபாயின் சரிவு, அந்த நாட்டின் அந்நியச் செலாவணி விகிதத்தின் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த அழுத்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ள போதும் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் ரூபாவின் வீழ்ச்சி தொடர்கிறது. பாக்கிஸ்தானில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையா…
-
- 0 replies
- 140 views
-
-
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்? நேயாஸ் ஃபாருக்கி பி பி சி உருது செய்தியாளர் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ஐயாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 என்ற ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்தியா புதன்கிழமை மாலை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. 'நைட் ஆபரேஷன் மோட்' முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது செலுத்தப்பட்ட போது, ஏவுகணையின் திசை மற்றும் வேகம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருந்ததால் பதினைந்து நிமிடங்களில் இலக்கைத் தாக்கியது. குறைந்தது 55…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
“இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு மோடி அழைப்பு ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விடங்களை விவாதிக்கின்றன. இந்நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸ…
-
- 3 replies
- 323 views
-
-
பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - 'தி இந்து' என்.ராம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும் தீர்ப்பு குறித்தும் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். பேட்டியிலிருந்து. கே. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் என்ன கோரியிருந்தீர்கள்? ப. இரண்டு விஷயங்களைக் கோரியிருந்தோம். முதலாவதாக, இ…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு! கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும். அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247151
-
- 0 replies
- 243 views
-
-
இந்தியா - சீனா எல்லை பிரச்னை: 22,000 கி.மீ நில எல்லையைப் பாதுகாக்க சீனா புதிய சட்டம்: இந்தியாவை பாதிக்குமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தனது 22,000 கி.மீ நீளம் கொண்ட நில எல்லையில் பாதுகாப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவரிக்கும் தனது முதல் தேசிய அளவிலான சட்டத்துக்கு சீனாவின் நாடாளுமன்றமாகச் செயல்படும் தேசிய மக்கள் மன்றத்தின் (NPC) நிலைக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. "எல்லையில் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும், வலுப்படுத்தவும், உறுதிப்படுத்தவும்" வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நில எல்லைச் சட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. …
-
- 2 replies
- 295 views
- 1 follower
-
-
ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் – அமித் தேவ் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்திய விமானப் படையும், இராணுவமும் இணைந்து 1947 ஒக்டோபர் 27 இல் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வர…
-
- 0 replies
- 163 views
-
-
இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை! ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொரு…
-
- 0 replies
- 217 views
-
-
பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் 27 அக்டோபர் 2021, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக, சுயாதீனமாக விசாரிக்க மூவர் குழுவை அமைத்துள்ளது. …
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர் : இந்தியாவுக்கு சாதகமாக அதிகார சமநிலையை சாய்த்தது - சிவசங்கர் மேனன் 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர், பங்காளதேசத்தை உருவாக்கியது. துணைக் கண்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்தது. இவ்வாறான புறசூழலுக்கு மத்தியில் இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்து விட்டதாக முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமானம் மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தியதால் பங்களதேசம் இன்று வளர்ச்சி நாடாக உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில், இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தா…
-
- 1 reply
- 311 views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது! இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு இணையான கமாண்டர் பதவியில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா கொள்வனவு செய்திருந்தது. இது குறித்த இரகசிய விவகாரங்கள் கசிந்துள்ளதாக முறைப்பாடு எழுந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://atha…
-
- 0 replies
- 114 views
-
-
இந்த ஆண்டின் இறுதிக்குகள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு! கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை…
-
- 0 replies
- 222 views
-
-
உ.பியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி! பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது குறித்த மாநிலத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவுள்ளார். இதனையடுத்து தற்சார்ப்பு ஆரோக்கிய இந்திய திட்டத்தையும், 5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை தற்சார்ப்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் சுகாதார சேவைக்கான அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகும். https://athavannews.co…
-
- 0 replies
- 135 views
-
-
4 நாட்களுக்கான... நிலக்கரியே, கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு! நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக நீடித்து வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டின் 59 அனல் மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலத் ஜோஷி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 303 views
- 1 follower
-
-
இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீதிகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,300 க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. சுற்றுலாத்தலமான நைனிடால் பகுதி மழையால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 28 பேர் உயிரிழந்துவிட்டனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளம்…
-
- 0 replies
- 208 views
-
-
இந்தியாவில் எண்ணெய், எரிவாயு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு... சர்வதேச நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு! இந்தியாவில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச எண்ணெய், எரிவாயுத் துறை நிபுணர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடல் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவை தற்சார்பு நிலையை அடைய வைக்கும் நோக்கில் இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயு…
-
- 0 replies
- 313 views
-
-
பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
-
- 0 replies
- 323 views
-
-
காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள், வெளியேறி வருவதாக... அறிவிப்பு! காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 0 replies
- 225 views
-
-
காஷ்மீரில் நடைபெற்ற, பயங்கரவாத தாக்குதல்களுக்கு... பொறுப்பேற்றது, புதிய அமைப்பு! ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத மேலும் பல படுகொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இராணு…
-
- 0 replies
- 524 views
-
-
இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே? அக்னி கோஷ் பிபிசி ஃபியூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1961 மற்றும் 1971 க்கு இடையில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து சுமார் 1500 மொழிகள் மறைந்துவிட்டன. முற்றிலுமாகக் காணாமல் போவதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவர் முடிவு செய்தார். அது 2010. இந்தியாவின் மொழிகள் பற்றிய விரிவான தரவு இல்லாதது பற்றி கணேஷ் என் தேவி கவலைப்பட்டார். "1961 [இந்திய] மக்கள் தொகை கணக்கெடுப்பு 1,652 தாய் மொழிகளை அங்கீகரித்தது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 109 மொழிகள் மட்டுமே பட்டிய…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு ! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது. இதேவேளை மூன்று ஆண்டுகளின் ப…
-
- 0 replies
- 165 views
-
-
அருணாச்சல பிரதேசத்தில்... கண்காணிப்பு பணிகளை, தீவிரப்படுத்தியது இந்திய இராணுவம்! அருணாச்சல பிரதேசத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையில் சீன இராணுவ வீரர்கள் அண்மையில் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் இந்திய துருப்புக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 230 views
-