Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "லவ் ஜிகாதிற்கு" எதிராக புதிய சட்டம் : மத்திய பிரதேச அரசு அறிவிப்பு! கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. ஒரு பெண்ணை காதலித்து அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து மணம் புரிவது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. மதம் மாறாத பெண்களை கொலை செய்வது, ‘ஆசிட்’ வீசுவது போன்ற கொடூர சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசு புதிய சட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா , விரை…

  2. "விடுதலைப் புலிகளுக்கு" புத்துயிர் அளிக்க... ஆயுதங்கள், போதைப் பொருள் மூலம் நிதி திரட்டியதாக... என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. 2021 மார…

  3. "ஸ்புட்னிக் லைட்" தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை! ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டொக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226127

  4. “PM Modi இதை சொல்லியிருக்கலாம்ல..?” - காஷ்மீர் பற்றி China-வின் கருத்துக்கு Congress பதிலடி! Modi - Jinping meet: இந்திய அரசுத் தரப்பு, ‘காஷ்மீர் (Kashmir) எங்கள் உள்நாட்டு விவகாரம். அதில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளது. China அரசிடம் நாம் கேட்க நிறைய இருக்கிறது என்றும் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி Manish Tewari. New Delhi: சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் சீன…

    • 0 replies
    • 415 views
  5. “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்க…

  6. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது” என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இளையராஜா, “இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடி…

    • 2 replies
    • 356 views
  7. “இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி! 44 Views “இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம்“ என கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முக நுாலில் பதிவிட்ட இந்திய பெண் மருத்துவர் மறுநாள் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும். மேலும் இ…

  8. “இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு மோடி அழைப்பு ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விடங்களை விவாதிக்கின்றன. இந்நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸ…

  9. “ஓகஸ்ட் 23” இந்தியாவின் தேசிய விண்வெளி தினம் என பிரகடனம்! August 27, 2023 “ஓகஸ்ட் 23” இந்தியாவின் “தேசிய விண்வெளி தினம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ அறிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்திற்கு சென்று உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார். BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கிரேக்கத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, இன்று இந்தியா திரும்பியுள்ளார். சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான குழுவினரை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். இதேவேளை, நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு Shiv Shakti Point என பெயர் சூட்டப்படுவதா…

  10. சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார். "எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முதலாக கொண்டே நாங்கள் செயல்பட முடியும். இதுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என…

    • 0 replies
    • 291 views
  11. 31 AUG, 2024 | 08:16 AM புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 'மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்' என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர் "பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரைஇ சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட…

  12. ”ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ” – ட்ரெண்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி. இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார். அதன்படி, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவரது எக்ஸ் தளத்தில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனும் பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதன் தொடக்கமான எனது எக்ஸ் தளத்தின் முகப்பில் தேசியக்கொடியை வைத்துள்ளேன். நீங்களும் அவ்வாறு செய்வதொடு தேசியக் கொடியு…

  13. 1.1 டிகிரி குளிர் வாட்டிய டெல்லி புத்தாண்டு நாள்: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பனி-தூசி மூட்டத்தில் டெல்லி இந்தியா கேட் பகுதி. 2021 புத்தாண்டு தினம் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நடுங்கும் குளிர் நாளாக இருந்தது. அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது. சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில் இந்த வெப்ப நிலை பதிவானது. காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின…

  14. 10 ஆயிரம் கோடி இந்திய ரூபா செலவில் 3 ரயில் நிலையங்கள் By VISHNU 30 SEP, 2022 | 01:48 PM நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புது டில்லி, அகமதாபாத் மற்றும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) ரயில் நிலையங்களை ரூ.10,000 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே துறைக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த ரயில் நிலையங்கள் எதிர்கால வடிவமைப்பு மற்றும் பயனீட்டாளர் வசதிக்காக மேம்படுத்தப்படும் என்றும், இந்த திட்டங்களுக்கான விலைமனுக்கோரல் அடுத்த பத்து நாட்களில் வெளியிடப்பட்டும் என்றும் கூறினார். இந்த நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கு 2-3.5 ஆண்டுகள் ஆகும். போக்குவர…

  15. 10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து! இந்திய இராணுவத்திற்கு சுமார் 10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சுமார் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தற்காப்பு மற்றும் தாக்குதல் என பலவித பயன்பாட்டுக்கு ஏற்ற விதமாக கையெறி குண்டுகள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/10-இ…

  16. 10,000 வீரர்கள்.. பல போர் விமானங்கள்.. இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்! இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. 12 விமானங்களோடு உள்ளே புகுந்த இந்திய விமானப்படை சரமாரி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத…

  17. 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …

  18. 09 JUL, 2025 | 12:41 PM போபால்: ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏ…

  19. 100% இந்தி மொழியறிவு பெற்ற கேரள கிராமம் கேரளாவின் சேலனூர் கிராமத்தில் இந்தி கற்கும் மக்கள் | கோப்புப்படம் திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சேலனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக சேலனூர் விளங்குகிறது. கிராமத்தின் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் இந்துக்கள். 23 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தற்போது சேலனூர் பஞ்சாயத்து தலைவராக பி.பி.நவுசீர் உள்ளார். கடந்த ஆண்டில் பஞ்சாயத்து சார்பில் கிராம மக்களின் இந்தி மொழி அறிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 700-க்கும் மேற்பட்டோருக்கு இந்தி தெரியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…

    • 0 replies
    • 600 views
  20. 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் இராமர் கோவில் நிர்மாணிக்கப்படுவதாக தகவல்! அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் கட்டப்பட்டு வருவதாக கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் “சென்னை ஐ.ஐ.டி மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்கள் இராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் அயோத்தி கோவில் நிலத்தின் மண்வளம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை போன்றவற்றை சென்னை ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள…

  21. 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. …

  22. 11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை .! டெல்லி: லடாக் பகுதிக்கு இன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் குளிருக்கு அணியும் ஜாக்கெட்டுடன், ராணுவ முகாமில் நடுநாயகமாக மோடி அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு நேரில் சென்று ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. முன்னறிவிப்பு ஏதும் இல்லை…

  23. 12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் April 18, 2019 பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. அதேபோனறு , கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேச…

  24. 13 இந்திய மாலுமிகள், இந்தோனேஷியாவில் சிறைப்பிடிப்பு! கச்சா எண்ணெய்யை பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் தமிழகத்தை சேர்ந்த மாலுமி உள்ளிட்ட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு தங்களை காக்க வேண்டும் என மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சா எண்ணெயை பிரித்தெடுப்பதில் கம்போடியா அரசுக்கும் அப்ஸரா என்ற எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகின்றது. இந்நிலையில், எம்டி என்ற ஸ்ட்ரோவோலஸ் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஊழியர்கள் கச்சா எண்ணெயை திருடியுள்ளதாக சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்…

  25. 13 நாடுகளில் சிக்கியுள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் வாரத்தில் பஹ்ரைன், பங்களாதேஷ், குவைத், மலேசியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து 64 விமானங்களில் மொத்தம் 14,800 இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பத்து விமானங்களும் இந்திய கடற்படையின் மூன்று கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.