Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 75% விலை உயர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், விநியோகத்திலும் சிக்கல்... எங்கே சறுக்கியது இந்தியா? Guest Contributor A COVID-19 patient wearing oxygen mask ( AP Photo/Ajit Solanki ) படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவமனை படுக்கைகளும்தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதான தேவையாக இருக்கின்றன. சமீபமாக, மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டியும், படுக்கைகள் வேண்டியும் சமூகவலைதளங்களில் அதிகளவில் பதிவிட்ட…

    • 7 replies
    • 747 views
  2. கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…

  3. கோரோனோ :: உதவ முன்வந்த ஐ.நா - இந்தியா நிராகரிப்பு.! டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு கொத்து கொத்தாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டிய ஐ.நா.வின் யோசனையை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. முதலிடம் .. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கின்றனர். உதவ முன்வரும் உலகம் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் பல மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பின்னர் குவியல் குவியலாக எரியூட்டப்பட்டு வருகின்றன…

  4. தமிழகம் டாப், கேரளா பூஜ்யம்... கோவிட் தடுப்பூசிகள் வீணாவதை கேரளா எப்படி தடுக்கிறது? Guest Contributor கொரோனா தடுப்பூசி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயன்களை தெரியப்படுத்துவதன் மூலமும், தடுப்பூசி மேலாண்மை குறித்த…

  5. ஐதராபாத்: இரவு பகலாக எரியும் சடலங்கள்; தகனம் செய்ய மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு! சே. பாலாஜி சுடுகாடு ( Representational Image ) ஒரு சடலத்தை முழுமையாக எரியூட்டுவதற்கு 400-லிருந்து 600 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படும். சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக மரக்கட்டைகளுக்கு ஐதரபாத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸின் முதலாம் அலையைக் காட்டிலும் இந்தியா தற்போது அதிகளவிலான உயிர்ச்சேதங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மாநகரின் பெரும்பாலான தனியார் ம…

  6. வீட்டிலும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் எய்ம்ஸ் வைத்தியசாலை நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது மிகவும் நல்லது. அதாவது வீட்டில் மற்…

  7. `நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா சிந்து ஆர் Oxygen cylinder ( AP Photo / Rajesh Kumar Singh ) `தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இ…

    • 2 replies
    • 476 views
  8. இந்தியாவுக்கு உதவும் கூகுள் கொரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன. இந்நிலையில், கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அதேபோல், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து தெர…

  9. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள் 27 Views இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரை…

  10. இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் குறைபாடுகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் மருத்துவ குறைபாடுகளுடன் சேர்த்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வியாழக்கிழமை மாலையில் நடந்த இரண்டாம் நாள் விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், அந்த உத்தரவு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவு காலியானது. டெல்லியில், திரத் ராம் ஷா மருத்துவமனை, யுகே நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாந்தோம் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஆக்சிஜன் க…

  11. ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்- டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் கோபம் ஆக்சிஜன் சப்ளையே தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம்” என டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பதிவு: ஏப்ரல் 24, 2021 13:49 PM புதுடெல்லி தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரி செய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நேற்றுமுன்தினம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கங்காராம் மருத்துவமனையில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர், நேற்று இரவ…

  12. கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO 24 Views கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் உலகில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,624 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள…

  13. பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவின் 2வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயி…

  14. இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பயோடெக்னோலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி…

  15. புறா விடு தூது - புறாவினால் வந்த அக்கப்போர் பாகிஸ்தான் பக்கம் இருந்து இந்தியா பக்கம் பறந்து வந்த ஒரு புறா, ஒரு இராணுவ வீரர் தோலில் அமர்ந்தது. பழக்க தோசம் போலும். அதன் காலில் ஒரு துண்டு சீட்டு. அதில் ஒரு தொலைபேசி இலக்கம். அவ்வளவு தான். துப்பறிய வந்தது என்று அதனை பிடித்துக் கொண்டு போய் உள்ளூர் போலீசாரிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்ய ராணுவம் கோரி உள்ளது. கூண்டு ஒன்றினை வாங்கி வந்து, புறாவை, அடைத்து விட்டு, எண்ணத்தை செய்வது என்று போலீசார் முழுச, புறாவும் கூண்டுக்குள் இருந்து முழிசிக்கொண்டு இருக்குது.

  16. ``உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!'' - மருத்துவரின் கண்ணீர் கோரிக்கை ஆ.சாந்தி கணேஷ் மருத்துவர் திருப்தி ``இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்". ``இதற்கு முன்னால் இப்படி ஒரு நிலைமையை நான் பார்த்ததே இல்லை" என்று மும்பை பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களைப் பதற வைத்துக்கொண்டிருக்கிறது. corona தொற்றுநோய் மருத்துவரான அவர் பெ…

  17. பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி ஐகோர்ட் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது. …

  18. “இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி! 44 Views “இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம்“ என கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முக நுாலில் பதிவிட்ட இந்திய பெண் மருத்துவர் மறுநாள் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும். மேலும் இ…

  19. ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 3,14,835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஆரம்பமானதிலிருந்து இந்தியா ஒரே நாளில் பதிவு செய்த மிக உயர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். மேலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில் 568 பேரும், டெல்லியில் 249 பேருமாக ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழ…

  20. பாகிஸ்தானில் தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்? பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் உள்ள சொகுசு விடுதியில், தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் அதிஷ்டவசமாக தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்ததாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 11பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த பிறகு, இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வர…

  21. கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்வு – சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும் 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

  22. ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி! மின்னம்பலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த 22 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக நாட்டில் பல இடங்களில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, வெளி மாநிலங்க…

  23. எதுவுமே என் கையில் இல்லை; மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்: பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் கிண்டல் பிரதமர் மோடி | கோப்புப் படம். புதுடெல்லி எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. …

  24. பிரதமர் நரேந்திர மோதி உரை: “கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை” பட மூலாதாரம், NARENDRA MODI இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்து பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் இன்று உரையாற்றினார். இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, மக்கள் நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதன் தேவை போன்ற அம்சங்கள் குறித்து உரையாற்றினார் மோதி. பிரதமர் மோதியின் உரையிலிருந்து: "கொரோனாவுக்கு எதிராக நாடு பெரிதாக போராடிவருகிறது. சில வாரங்களுக்கு முன் நிலைமை சரியாகிக் கொண்டிருந்த நிலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.