Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-720x450.jpg பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பிரிவினைவாத அமைப்பான காஷ்மீர் காலிஸ…

  2. முக்கிய ஆயுதக் கொள்வனவு: பெரும் பலம்பெறும் இந்தியக் கடற்படை! போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோமீற்றர் வரை சென்று இலக்கைத் தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ஆயுதக் கொள்வனவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஆயுதமாகக் கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பல, ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்க் கப்பல்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், கடற்படைக்காக விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுவரும் போர்க் கப்பல்களில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 கள…

  3. ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/1607923973130864-720x430.jpg அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 728 ரூபாய் கொடுக்க வேண்டும். அதேநேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே ஆகும். அரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற…

  4. புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர். "நான் விவசாயியின் மகன். அது குறித்துப் பெருமைப் படுகிறேன். நான் போராடும் விவசாயிகளோடு நிற்கவேண்டும்" சொன்னவர் அரசியல் தலைவரில்லை, செயற்பாட்டாளர் இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருக்கும் ஒரு டி.ஐ.ஜி. அவரது பெயர் லக்மிந்தர் சிங் ஜக்கர். பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருப்பவர். சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. தாம் வயது முதிர்வடையும் முன்பே ஓய்வு பெற்றதாக அறிவித்து தம்மை பணியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு அவர் மாநில உள்துறை செயலாளருக்கு விண்ணப்பித்…

  5. லவ் ஜிகாத்: மதம் கடந்த காதலை அச்சுறுத்தும் இந்திய சட்டம் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி இந்தியா பட மூலாதாரம், EPA ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,000 மதம் கடந்த காதல் ஜோடிகள் டெல்லியில் உள்ள ஏதாவது ஓர் ஆதரவு அமைப்பின் உதவியை நாடுகின்றன. இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஜோடியினர் தங்கள் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கும்போது வழக்கமாக தானக் அமைப்பைத் தேடி வருகின்றனர். 20 - 30 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுமாறு அல்லது சட்ட உதவி பெற உதவுமாறு கோருகின்றனர். தானக் அமைப்பிற்கு வரும் ஜோடிகளில் 52 சதவீதம் பேர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ய …

  6. இந்தியர்கள் பணம் சேமிக்க வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்ஷ்மி விலாஸ் வாங்கி 15 மாதங்களில் மூடப்பட்ட மூன்றாவது வங்கியாகும் கடந்த 15 மாதங்களில், இந்தியாவின் 3 பெரிய வங்கிகள், மோசமான கடன்களால் (Bad debts) தத்தளித்தன. இதனால், இந்திய நிதி நிறுவனங்கள் வலுவாக இருக்கின்றனவா? என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கொரோனாவால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு, எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. சமீபத்தில், எங்களின் சேமிப்புப் பணத்தைக் கூட வங்கிக் கணக்கில் இருந்து பெற முடியவில்லை. க…

  7. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர் டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 971 கோடி ரூபா செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. 4 தளங்களுடன் அமையவுள்ள புதிய கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பே…

  8. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் பகுதிக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்க்கியா தனது காரில் சென்றுள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவரது கார் டையமண்ட் ஹார்பர் பகுதிக்கு வந்தபொழுது, அவரது வா…

  9. மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் – மம்தா பானர்ஜி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/12/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த மாநிலத்தின் முதலமைச்சராக கூறுகிறேன். நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். அதை யாரும் மாற்ற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை ப…

  10. அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியீடு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81--720x450.jpg அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், அவருடைய ஆட்சிக் காலப்பகுதியில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவுனம் வெளியிட்டுள…

  11. ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் திடீரென மயங்கி விழுந்ததுடன், ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதன்காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மர்ம நோய் தொடர்பில் அறிய பாதிக்கப்பட்வர்களிடம் இருந்து இரத்த …

  12. இந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல் இந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின தீவிரவாதத் தலைவர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவுமே இவ்வாறு சீனாவுக்கு கடந்த ஒக்டோபரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், குன்மிங் பகுதிக்கு குறித்த நான்கு தீவிரவாதத் தலைவர்களும் சென்றதாகவும், சீன இராணுவ அதிகாரிகளையும், இரு தரப்புக்கும் மத்தியஸ்தராகச் செயற்படும் பிரதிநிதியையும் சந்தித்ததாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மரிலுள்ள யூனைடெட் வா ஸ்டேட் ஆர்மி (United …

  13. புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு, குளிர்தாங்கும் ஆடைகள் வாங்க, பஞ்சாபி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஹரியானா எல்லையில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்தில், பஞ்சாபி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் நேற்று(டிச.,5) கலந்து கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசை வலியுறுத்திய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குளிர் தாங்கும் ஆடைகள் வாங…

  14. தெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி ஹைதராபாத் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தெலங்கானாவில் பாஜக வலுவாகக் கால் பதித்துள்ளது. கடந்த முறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அந்தக் கட்சி தற்போது பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன. பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி…

  15. மராட்டிய மேல்-சபைக்கு 5 இடங்களுக்கு நடந்த தேர்தல் ஆளும் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி - பா.ஜனதாவுக்கு பின்னடைவு மும்பை, மராட்டிய மேல்-சபைக்கு புனே, நாக்பூர், அவுரங்காபாத் பட்டதாரி தொகுதிகள் மற்றும் அமராவதி, புனே ஆசிரியர் தொகுதிகளில் உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) பதவிக்காலம் முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் காலியாக உள்ள இந்த 5 மேல்-சபை தொகுதிகளுக்கும் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்…

  16. தடுப்பூசிக்கான செலவைக் கண்டு அரசு மலைத்துப் போகக்கூடாது; மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடாகக் கருத வேண்டும்: பிரதமர் முன் டி.ஆர்.பாலு பேச்சு சென்னை தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்துப் போகக் கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்றுதான் கருத வேண்டும். ஜிஎஸ்டி வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அரசு ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு வேண்டுகோள் வைத்தார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியி…

  17. விவசாயிகள் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கருத்து கூறிய விவகாரம்: கனடா தூதருக்கு இந்தியா சம்மன் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் இன்றோடு 9-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், அண்மையில், டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார். ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்" எனக்கூறியிருந்தார்.…

  18. ரஞ்சித்சின் திசாலே: இந்திய ஆசிரியருக்கு கிடைத்த 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு - என்ன செய்தார் தெரியுமா? படக்குறிப்பு, ஆசிரியர் ரஞ்சித்சின் திசாலே இந்திய கிராமம் ஒன்றில் மாணவிகளின் கல்விக்காக பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்துள்ளது. அவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வறட்சி மிகுந்த பகுதியான பரிடேவாடியில் உள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் திசாலே. 12,000 பேரின் பெயர் இந்த போட்டியில் பரிசீலிக்கப்பட்டத்தில் திசாலே தேர்வாகியிருக்கிறார். ’கல்வி என்பது பிறப்புரிமை’ ”இந்த நெருக்கடியான கால கட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவ…

  19. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை புதுடெல்லி, இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.…

  20. விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைக் காண்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் குறித்த இதுபோன்ற கருத்துகள் தேவையற்றவை. இராஜாங்க ரீதியான பேச்சுகள் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்திரிக…

  21. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம் உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே இவ்வாறு ஆழ்துளை்க கிணற்றில் விழுந்துள்ளார். கோதுமை வயலுக்கு இன்று (புதன்கிழமை) குடும்பமாகச் சென்றிருந்த நிலையில், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆழ்துளைக் கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத…

  22. பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு எல்லா தேர்தலைக் காட்டிலும் பீகார் தேர்தல் விறுவிறுப்போடு கடந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரியில் தொடங்கிய லாலுவின் முற்போக்கு அரசியல் பயணம் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள புல்வாரியா எனும் கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குட…

    • 0 replies
    • 367 views
  23. இம்ரான் கானை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ; நூற்றுக் கணக்கானோர் கைது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத் தடை மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திங்களன்று ஒரு மத்திய நகரத்தில் (முல்தான்) திரண்டதுடன், பிரதமர் இம்ரான் கானின் மோசமான ஆட்சி மற்றும் திறமையின்மை காரணமாக இராஜினாமா செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்…

  24. இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ள சீனா, மாசுபட்ட தண்ணீரால் வுகான் வரை பரவியதாக கூறியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட…

  25. மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.