Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…

  2. முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார் .. டிஸ்கி : 2009 மே மாதம் நினைவுக்கு வருது ..

  3. கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது NurPhoto / getty இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 681 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,257 பேர் குணமடைந்துள்ளனர். 16,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். …

  4. எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்! இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்ட…

  5. லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேர் அணிவகுத்துள்ளதாக தகவல்! லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் படைகளைத் திரும்பப்பெற மறுத்து வருகிறது. சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன. சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது. …

  6. விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று! வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்தியா முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் குறித்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பையில் விளம்பரத்துக்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்…

  7. சிறுபான்மையினர் உரிமை தினம்: இந்தியாவில் சிறுபான்மை மதங்களாக அறிவிக்கப்பட்ட 6 மதங்கள் எவை? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் மகிழ்ச்சியாக ஓடும் ஜிப்சி குழந்தைகள் இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு…

  8. ஐ.நா.அமைதிப்படையில்... இந்திய இராணுவம், பங்களிப்பு! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காகவும் செயற்படும் ஐ.நா.அமைதிப்படைகளில் இந்திய இராணுவக் குழுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கோ, லெபன…

  9. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை! ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES/@SATYAPALMALIK6 15 ஏப்ரல் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2019இல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனம் மீதான தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'கவனக்குறைவு' ஆகியவற்றின் விளைவாகும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, அவை உறுதியானவை என்றும் இதைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்…

  11. 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார். பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த மாதிரியான அழுத்தங்கள் 1950 முதலே இருந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சஞ்சய் கிஷன் கவுல், அப்போது நீதித்துறை மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார். பேச்சு சுதந்திரம் குறித்துப் பேசிய நீதிபதி சஞ்சய், அது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறினார். பிபிசியுடனான இந்…

  12. தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு .. ஜம்மு: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு வீசித் தகர்த்தது இந்தியா. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய, பாகிஸ்தானிய விமானப்படை போர் விமானங்கள் வானில் சண்டையில் குதித்தன. சிறைபிடிப்ப…

  13. இனிமேல் நாங்கள் மெலோடி டீம்.. இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடியின் செல்பி..! ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐம்பதாவது ஜி 7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்வி புகைப்படம் அவருடைய சமூக பல தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து மெலோடி டீமிடம் இருந்து ஹலோ என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோ…

    • 0 replies
    • 280 views
  14. ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு! ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதியளவான ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. http://athavannews.com/ராஜஸ்தான…

  15. கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது. மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் …

  16. ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 16:52 PM புதுடெல்லி, கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 59 மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவதோடு, 12 எஸ்.யு-30 எம்.கே.ஐ ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 ரக விமானங்கள் உட்பட ரஷ்யாவிலிருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்குவ…

  17. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் பிடிஐ குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிசிச்ைச பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது பிரணாப் முகர்ஜியின் மூளையில் இரு…

    • 6 replies
    • 1.2k views
  18. பங்களாதேஷில் பொதுமுடக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மூவர் மீது துப்பாக்கி சூடு! பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகுதியில் ஃபரித்பூர் மாவட்டத்தின் மத்திய நகரமான சால்தாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த போராட்டம், சிறிது நேரத்தின் பின்னர் வன்முறையாக மாறியது. இதன்போது குறைந்தது மூவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தை போராட்டக்காரர்க…

  19. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை.. இந்தியாவுக்கும் வரலாம்.. ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார …

    • 0 replies
    • 162 views
  20. உலகின் மிகப்பெரிய.. 12 கிலோ, தங்க நாணயத்தை... தேடும் பணியில் மத்திய அரசு 12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் சுவிஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர் சல்மா கூறியுள்ளார். https://athavannews.com/2022/1288806

  21. லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் இன்னொரு கொடூரம் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CASPAR BENSON / GETTY IMAGES 'லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. டெல்லி ஒட்டிய நஜஃப்கர், மித்ரோன் கிராமம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வழ…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தின் மீது நீண்டகாலமாக உரிமைக்கோரி வரும் சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பை தற்போது இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி இன்று கூறுகையில், ”அருணாச்சல பிரதேச மாநிலம் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மற்றும் இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இமயமலையை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும், சீனாவ…

  23. வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்: பிரதமர் மோதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி: 'வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என…

  24. 20 JUN, 2023 | 10:00 AM இந்தியாவின் உளவு அமைப்பான ரோவின் அடுத்த தலைவராக சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரோவின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில் ரோவின் அடுத்த தலைவராக 1 சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரவி சின்ஹா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்ரோ அமைப்பின் அடுத்த தலைவராக அவர் 2 ஆண்டுகள் பணியாற்ற மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளத…

  25. அணுக்கழிவுகளை சேமிப்பதால் பாதிப்பில்லை – மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக இந்த பதிலை தெரிவித்துள்ளார். மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த கழிவுகள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த பகுதியில் கதிர்வீச்சி எந்தளவிற்கு காணப்படுகின்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.