தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அ…
-
- 0 replies
- 439 views
-
-
கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…
-
- 1 reply
- 923 views
-
-
WHO - Tiktok தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக…
-
- 2 replies
- 918 views
-
-
நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் க…
-
- 0 replies
- 450 views
-
-
Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம் Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்... 1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா? ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) …
-
- 0 replies
- 510 views
-
-
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…
-
- 0 replies
- 474 views
-
-
கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍
-
- 1 reply
- 545 views
-
-
கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் தனக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும், அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் உலகநாடுகளுக்கு பயணிக்கும் பொழுது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார். Happy 15th Birthday @GoogleMaps! Reflecting today on some of the ways it’s been helpful to me, from getting around more easily to finding a good veggie burrito wherever I am:) Thanks to the support of our users, Maps keeps getting more he…
-
- 0 replies
- 441 views
-
-
மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…
-
- 0 replies
- 458 views
-
-
நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதி குறித்தும், எப்படி இதை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தற்போது காணலாம். புதிய வசதியின் அம்சங்கள்: பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேர பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்ப…
-
- 0 replies
- 655 views
-
-
550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள் டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் …
-
- 0 replies
- 710 views
-
-
மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 660 views
-
-
தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம். Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம். மனிதன் டு மெஷின்: சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது. ரோபோக்கள் இல்லை: Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் ம…
-
- 0 replies
- 349 views
-
-
பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளின் அடையாளங்களைச் சோதனை செய்யும் செக்கிங் பாய்ன்ட்களில் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 'Digi Yatra' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை 'டிஜிட்டல் இந்தியா' முழக்கத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம். பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், செக் பாய்ன்ட்களை விரைவாகக் கடக்கவும், அதே நேரம் பாதுகாப்பு அம்சங்களில் எந்தத் தவறும் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், முதலில் ஆன்லைனில் Digi Yat…
-
- 0 replies
- 445 views
-
-
ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…
-
- 1 reply
- 673 views
-
-
அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் அலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன. இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது. எனினு…
-
- 1 reply
- 485 views
-
-
இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 …
-
- 18 replies
- 2k views
-
-
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…
-
- 1 reply
- 784 views
-
-
5G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 1 Tam Sivathasan B.Eng. (Hons) இன்ரெர்நெட், செல் ஃபோன், கணனி, செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்று வரும்போது கடந்த சில வருடங்களில் 5G என்ற சொற்பதம் அதிகம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இங்கு G எனப்படுவது தலைமுறை (generation). 1990களில் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபோது இது 1G எனப் பெயரிடப்படாவிட்டாலும் அதில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களின் படிகளின்படி நாம் இப்போது 5G க்குள் செல்லவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியான கம்பிகள் இல்லாமல் காற்றில் செய்திகளை அனுப்பும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்ப விளக்கம் இங்கே தரப்படுகிறது. ‘கூப்பிடு தூரம்’ ஒருவர் பேசும்போத…
-
- 3 replies
- 1k views
-
-
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் பணியின் தலைமை பொறுப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான மார்க் லுகாவ்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் Windows NT இயங்குதளத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். இந்த இயங்குதளம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது ஃபேஸ்புக்கின் ஆகுளஸ் மற்றும் போர்டல் சாதனங்கள் ஆண்ட்ராய்டின் உதவியுடன்தான் இயங்குகின்றன. இதுகுறித்து ஃபேஸ்புக்கின் AR மற்றும் VR துறையின் தலைவர்களுள் ஒருவரான ஃபிகஸ் கிர்க்பாட்ரிக் கூறுகை…
-
- 0 replies
- 371 views
-
-
பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்…
-
- 0 replies
- 304 views
-
-
5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு) ப…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
உலகின் 98 சதவிகித மக்கள் வாழும் நிலப் பகுதியை `ஸ்ட்ரீட் வியூ' மூலம் படம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள். நாம் நேரில் காண முடியாத சில பகுதிகளைக்கூட கூகுள் மேப்ஸின் `ஸ்ட்ரீட் வியூ' மூலம் பார்க்க முடியும். கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி 10 மில்லியன் மைல்கள் `ஸ்ட்ரீட் வியூ' படங்களையும், 36 மில்லியன் சாட்டிலைட் புகைப்படங்களையும் கூகுள் மேப் மூலம் தற்போது காணமுடியும். இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட `ஸ்ட்ரீட் வியூ கார்கள்', உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் ஸ்ட்ரீட் வியூ ட்ரெக்கர் என பல உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளது. ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் வியூ கார்களின் மூலம் ஒவ்வோர் இடத்தையும் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, அவை அனைத்த…
-
- 0 replies
- 477 views
-
-
கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கிய…
-
- 1 reply
- 373 views
-
-
இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முற…
-
- 0 replies
- 449 views
-