Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம், ஆய்வு கூறுகிறது கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகல், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதானவர்களாக வளரும் வரை கண்காணித்த இந்த ஆய்வு இந்த இரு பழக்கங்களையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒவ்வாமை வருவது சற்று அதிகமாகக் காணப்படுவதாகவும், அந்தப் பழக்கங்களில் குறைந்தது ஒன்றையாவது வைத்திருந்தவார்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவாகவும் இருந்ததாகக் கூறியது. இரண்டு பழக்கங்களையும் வைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படா…

  2. எச்சரிக்கை... நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....! #WhereIsMyGreenWorld லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்க…

  3. நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். …

  4. நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு: [Friday 2016-07-08 07:00] நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற…

    • 0 replies
    • 386 views
  5. லிச்சிப் பழத்தின் மருத்துவம் சீனாவை பூர்விகமாகக் கொண்ட லிச்சி பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்த பகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்வல்லதோடு இப் பழம் வைன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி. நீளத்தில் இதன் வித்து இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பழத்த…

  6. ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய டிராகன் பழம் டிராகன் பழம் (dragon fruit) பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாழை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை இரவு ராணி என்று கூறப்படுகிறது. ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல சீதோஷ்ண நிலையில் வளரும் இதன் சரியான பிறப்பிடம் தெரியவில்லை, ஆனால் தெற்கு பெலிஸ் மூலமாக மெக்ஸிக்கோ, குவாதமாலா, எல் சால்வடார் மற்றும் கோஸ்டாரிகா இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெப்ப மண்டல பகுதிகளில் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. டிராகன். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிறிய அளவீடுகளில் வணிக ரீதியாக…

  7. குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம் நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள். குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி). அதேபோலத் …

  8. டைப்-2 சலரோக நோயை கட்டுப்படுத்தும் BGR-34 என்ற ஆயுர்வேத மருந்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை லக்னோவில் உள்ள தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மூலிகை தாவர ஆராய்ச்சி மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) இணைந்து உருவாக்கியுள்ளது.இந்த மருந்தை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட பழங்கால ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் அலசி ஆராய்ந்துள்ளது. குறிப்பாக, தருகரித்ரா, கிலோய், விஜய்ஸார், குத்மார், மாஜீத், மெதிகா உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு இந்த ஆன்டி-டயாபடிக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக உள்ள நவீன மருந்துகள் பக்கவிளைவு…

  9. நீங்கள் மன அழுத்தத்தில் தள்ளப்படிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே !!இன்றைய கால கட்டங்களில் அழுத்தம் என்பது சொல்ல முடியாத அளவிற்கு குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் எல்லாரும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. செய்யப்படும் வேலைகளிலும் சுற்றுபுற சூழலிலும் அழுத்தம் என்பது தேவைப்படுவதே. அப்போதுதான் நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். ஆனால் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுக் கொண்டிருந்தால், அல்லது அதிக அழுத்ததுடன் வேலை செய்து கொண்டிருந்தால், இறுதியில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தின் அறிகுறிகள் : உணர்ச்சிவயப்படுதல் : தொட்டதெற்கெல்லாம் வேகமாய் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? திடீரெனெ கோபம் அழ…

  10. உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை…. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. *மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். *கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். *ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். …

    • 0 replies
    • 437 views
  11. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  12. மரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள் நம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அளித்துள்ள சிகிச்சை இந்த நோயால் ஏற்படும் நிலைமை மோசமாவதை தடுப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நோய் பெற்றிருந்த சிறியதொரு குழுவினரின் நோய் எதிர்ப்பு அமைப்புகளை அழித்துவிடுவதற்கு கதிரியக்க சிகிச்சையை பயன்படுத்தியதை ‘லேன்செட்’ என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்டவை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்கள…

  13. கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதனை 'ஃபெங் ஃபூ' என்று அழைப்பர். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகள் நீங்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் ஃபெங்…

  14. நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை. தேடி வரும் உலகம் உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் காலைச் சிற்றுண்டியான இட்லி மாறிவருவது, நம் உணவை உலகம் ஏற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது. சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட…

    • 0 replies
    • 511 views
  15. 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். 5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். 6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. 7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. …

  16. இந்த 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால் ஒரு வேளை புகைப்பதை விட்டு விடுவீர்கள் உலக சுகா­தார ஸ்தாப­னத்­தினால் வரு­டாந்தம் மே 31ஆம் திகதி சர்­வ­தேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. புகைத்தல் பாவ­னையை கட்­டுக்­கோப்­பிற்குள் கொண்டு வரு­வ­தனை நோக்­க­மாகக் கொண்டு உலக சுகா­தார ஸ்தாப­ன­மா­னது, வரு­டாந்தம் ஒரு தொனிப் பொருளை முன் வைத்து மக்­களை விழிப்­பு­ணர்வூட்­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது. அந்த வகையில் இம்­முறை தொனிப்­பொ­ரு­ளாக உரு­வ­மற்ற சிகரட் பெட்­டி­களை அமுல்­ப­டுத்தல் அமைந்­துள்­ளது. (எந்த வித விளம்­ப­ரங்­க­ளு­மில்­லாத மங்­க­லான நிறத்தில் அமைக்­கப்­பட்ட சிகரட் பெட்டி), அவுஸ்­தி­ரே­லியா, அயர்­லாந்து போன்ற நாடுகள் ஏற்­க­னவே …

  17. ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூல…

  18. பார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி கடந்த சில பத்தாண்டுகளில் உலகின் விஞ்ஞான கேந்திரமாக சீனா வளர்ந்திருக்கிறது. இதில் அதன் மருத்துவ ஆய்வுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. கண்பார்வைக் குறைபாடு சீனாவில் மிகப்பெரும் பொதுசுகாதார பிரச்சனையாக இருக்கிறது. அங்கே எண்பது லட்சம் பேருக்கு கண்பார்வையில்லை. ஆனால் ஆண்டுக்கு ஐயாயிரம் கார்னியா மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமான புதியதொரு சிகிச்சையை உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் உடலுறுப்பு பற்றாக்குறைக்கு வித்தியாசமானதொரு தீர்வாக பன்றிக் கண்களின் ஒரு பகுதி மனிதர்களுக்கு பொருத்தப்படுகிறது…

  19. வெற்றிகரமாக நடந்த அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64 வயதாகும் தாமஸ் மானிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உலகளவில் பரிசோதனை ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை தாமஸ் மானிங் பெற்றுள்ளார். …

  20. சர்க்கரையில் உடலுக்கு நல்லது,கெட்டது என்ற வகை உண்டா? இனிப்பான பண்டங்களை சுவைப்பதற்கு பிரியப்படாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். `நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என இனிப்பை வகைப்படுத்த முடியுமா' ஆனால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையினால் ஏற்படும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இனிப்பு சுவையை கொடுக்கும் சர்க்கரையில் உடலுக்கு கேடு வளைவிக்காத சர்க்கரை வகை ஏதும் உண்டா என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. அப்படியென்றால் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என அந்த இனிப்பை வகைப்படுத்த முடியுமா என்பதே தற்போது நடைபெற்று வரும் ஆய்வின் மையப…

  21. "இருபதாம் நூற்றாண்டு துவங்கும் போது உலக சராசரி ஆயுள் 31 வயதுதான். 2010ல் உலக சராசரி ஆயுள் 67ல் நிற்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: 1. பசுமைப் புரட்சி மூலம் உணவுப் பற்றாக்குறையைப் போக்கியது. 2. நவீன மருத்துவ முறைகளில் நிறைய நோய்களை குணமாக்கவும் மற்றும் குணமாக்க முடியாத நோய்களை மேலும் மோசமாகாமல் மேனேஜ் பண்ணிக் கொள்ள முடிந்ததும்தான். இப்போது நாம் எல்லாரும் சகஜமாக 30 வயதை தாண்டுவதற்கு நாம் மேலே சொன்ன இரண்டு விஷயங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்." என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இது போன்ற பேத்தல்களை உண்மை போலப் பேசி நம்ப வைத்துவிட்டார்கள். 1.உரங்களையும் பூச்சி மருந்துகளையும் போட்டு நம் நிலத்தையும் பாரம்பரிய விதைகளையும் அழித்தத…

  22. இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும். தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் தணித்த இயற்கை தந்த கொடையான இளநீர்தான், அக்கால முதன்மைக் குளிர்பானம். வெயில் காலத்துக்கு ஏற்ற, பல நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட இளநீரையும் நுங்கையும் கோடை முழுவதும் உட்கொள்வது சிறந்தது. சத்துக் களஞ்சியம் கேளி இளநீர், அடுக்கிளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி, ஆயிரங்கச்சி, குண்டற்கச்சி எனப் பல வகையான இளநீர் பற்றிய பாடல் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான இளநீருக்கும் …

    • 0 replies
    • 776 views
  23. உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி..! [Wednesday 2016-04-13 18:00] தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்ற…

  24. வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த 2 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். பொதுவாக உடலில் உள்ள ஜி.எஸ்.கே. - 3 என்ற புரோட்டீன் மூலக்கூறுகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பழ வண்டுகள் பயன் படுத்தப்பட்டன. அவற்றின் உடலில் குறைந்த அளவில் லித்தியம் என்ற ரசாயன பொருட்களை செலுத்தினர். இதன் மூலம் அவை வழக்கத்தை விட 16 சதவீத அளவு கூடுதலாக உயிர் வாழ்ந்தன. அதே முறையில் புதிய மாத்திரை தயாரித்து மனிதர்கள் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆண்டுகள் வாழ வழிவகை செய்ய முடியும் என விஞ்ஞானிகள…

  25. கரத்தில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்க அதனை வயிற்­றுக்குள் வைத்து தைத்த மருத்­து­வர்கள் தொழிற்­சாலை விபத்­தொன்றில் கையின் ஒரு பகு­தியில் தோல் முழு­வதும் உரிக்­கப்­பட்ட நிலைக்­குள்­ளான நப­ரொ­ரு­வ­ருக்கு, அவ­ரது அந்தக் கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க அதனை அவ­ரது வயிற்றுப் பகு­திக்குள் வைத்து மருத்­து­வர்கள் தைத்த சம்­பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. தொழிற்­சா­லை­யொன்றில் இயந்­தி­ரத்தை செயற்­ப­டுத்தும் பிரிவில் கட­மை­யாற்றி வந்த கார்லொஸ் மரி­யோற்றி (42 வயது) என்ற மேற்­படி நபர், சம்­பவ தினம் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த போது இயந்­தி­ரத்தில் அவ­ரது கரம் சிக்­கி­யதால் அந்தக் கரத்தின் முன் பகு­தி­யி­லுள்ள தோல் முழு­வதும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.