நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கனடாவில் தமிழ் கடைகள் அனைத்திலும் Maggi Noodles மற்றும் இன்ன பிற instant noodles கள் விற்கப்படுவதையும் அவற்றை அநேகமான தாய்மார்கள் வாங்கிப் போவதையும் காண்கின்றேன். ஈயம் போன்றன அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் கூடாது என்று இந்தியாவில் சில மானிலங்கள் இதனை அண்மையில் தடை செய்தும் இன்னும் சில தடை செய்வதைப் பற்றி சிந்தித்தும் வருவதாக செய்திகள் சொல்கின்றன. முந்தி சாப்பிட்ட ஆசையில் வருடத்தில் ஓரிருமுறை வாங்கி சுவைத்தாலே ஒழிய நானோ அல்லது என் மனைவியோஒரு போதும் இவற்றை வாங்குவதில்லை. பிள்ளைகளுக்கு கொடுப்பதே இல்லை. அதில் உள்ள nutritious facts இனை பார்த்தாலே தலை சுற்றும். சோடியம் 50% இற்கு மேல் இருக்கும் அதுவும் சீனத் தயாரிப்பு என்றால் மிக மோசமாக சோடியம், இரசாயனப் …
-
- 18 replies
- 5.9k views
-
-
எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை 02 Jun2015 l நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள். நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார…
-
- 0 replies
- 620 views
-
-
புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும், உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்ய…
-
- 0 replies
- 764 views
-
-
அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும்.... அக்குபங்சர் அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும். வலைதளத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன் அக்குபங்சர் என்றால் என்ன? சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர். சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள்வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர். மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத்தரும் அற்புத அறிவியல் மருத்துவம். அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி? இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 08:35.30 மு.ப GMT ] உளுந்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன. உளுந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம். நோயின் பாதிப்பு நீங்கும் கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன. சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார். சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் க…
-
- 0 replies
- 846 views
-
-
புற்று நோயாளியான 92 வயது மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் சாதனை June 1, 2015 செய்திகள்0 35 அமெரிக்காவின், சான் டீகோவில் 92 வயது மூதாட்டியும், புற்று நோயிலிருந்து மீண்டவருமான ஹாரியட் தாம்சன் என்ற 92 வயது மூதாட்டி அதிக வயதில் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக 2010 ஹோனாலூலு மாரத்தானில் கிளேடிஸ் புரில் என்ற மூதாட்டி தனது 92 வயது 19 நாட்களில் சாதனை நிகழ்த்தினார். ஆனால் தற்போது ஹாரியட் தாம்சன் 92 வயது 65 நாட்களில் மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார். இது இவரது 16-வது ராக் அன் ரோல் மாரத்தான் ஓட்டமாகும். ஆனால் இது “கடினமானது” என்கிறார் ஹாரியட் தாம்சன். “இந்த ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் கணவர் இறந்து போனார்.…
-
- 0 replies
- 454 views
-
-
மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா? ஆபத்து [ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 07:16.09 மு.ப GMT ] சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய தோல் மீனின் செதில் போல் இருப்பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்பார்கள். சொரியாசிஸின் வகைகள் சொரியாசிஸ் வல்கெரிஸ்(Psoriasis vulgaris): இது பொதுவாக அதிகளவில் காணப்படும் வகையாகும் . சிவந்த தட்டை வடிவமாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நேர்மாறான தடிப்புத் தோல் அழற்சி(inverse psoriasis): இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளின் கீழே , மார்புகளின் கீழ் இ…
-
- 2 replies
- 6.2k views
-
-
சிகாகோ: புற்றுநோய்க்கு ஒரு புதிய முறை வைத்தியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கீ்மோ தெரப்பி செய்யாமலேயே புற்றுநோயை சரி செய்ய முடியுமாம். இந்த புதிய முறைக்குப் பெயர் இம்யூனோதெரப்பி என்பதாகும். இது உடலில் உள்ள புற்று நோய் செல்களையும், கட்டிகளையும் தாக்கி அழித்து விடுமாம். இன்னும் ஐந்து ஆண்டுகளில் கீமோ தெரப்பிக்குப் பதில் இந்த இம்யூனோதெரப்பியை அறிமுகம் செய்ய உள்ளனராம். இந்த புதிய வகை சிகிச்சை முறையானது, தோல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு மிகச் சிறந்த உபாயமாக கருதப்படுகிறது. இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல முறையில் குணம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இம்யூனோதெரப்பியால் உலகம் முழுவதும் பல லட்சம் புற்றுநோயாள…
-
- 1 reply
- 804 views
-
-
கனடா-Vaughanனை சேர்ந்த குடும்பம் தங்களது எட்டு மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உதவுமாறு பொது வேண்டுகோளை விடுத்துள்ளனர். டெல்வினா பட்சியாக் என்ற இக்குழந்தைக்கு பிறவி கல்லீரல் நோய் கண்டுள்ளது. பித்த குழாய் அழற்சி —- கல்லீரல் தொற்று —– யினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவளிற்கு ஒரு புதிய கல்லீரல் கிடைக்கும் வரை அவள் வீட்டிற்கு திரும்ப முடியாது என தந்தை பீற்றர் தெரிவித்தார். அவளின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். டெல்வினா இரண்டுமாத குழந்தையாக இருந்த போது Biliary Atresia நோய் கண்டறியப்பட்டுள்ளது. அன்று முதல் அவள் பலவிதமான கல்லீரல் தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றாள். ஒட்டாவா செனட்டர்…
-
- 0 replies
- 493 views
-
-
இன்றைய சூழலில் இயற்கையின் ஐம்புலன்களும் விற்பனை பொருளாகிவிட்டது. அதில் நிலமும், நீரும் தான் மக்களை பிரித்து வைத்து சண்டைகளை உண்டாக்கும் பொருளாக உருமாறி நிற்கிறது. உணவு இன்றி கூட மனிதன் வாழ்ந்து விட முடியும் ஆனால், நீர் இன்றி மூன்று நாள் தாக்குப்பிடிப்பதே சிரமம். இன்று, நீரில் மாசுப்பாடு அதிகரித்து வருவதனால், நிறைய சுத்தீகரிப்பு நீர் விற்பனையும், கருவிகளும் சந்தையில் விற்கப்படுகிறது. இதில் மிக முக்கியமாகவும், பிரபலமாகவும் விற்கப்படுவது ஆர்.ஓ குடிநீர். இம்முறையில், நீர் நல்ல முறையில் சுத்தீகரிக்கப்படுவதாய் மக்கள் நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!! ஆனால், இப்போது இந்த ஆர்.ஓ சுத்தீகரிப்பு முறையில் நீரை பருகுவது பொது …
-
- 2 replies
- 2.5k views
-
-
Dr. பி. விஸ்வநாதன் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபடிக் ரெட்டினோபதி). இது, நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்து கிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் ‘லைப்போ புரோட்டீன்’ வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித் திரையின் முக்கிய பகுதியான …
-
- 0 replies
- 1.1k views
-
-
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்? உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்? அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஹாம்பர்கர் மூலமாக அதிகபட்சச் சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில…
-
- 2 replies
- 1k views
-
-
உலக ரத்தக் கொதிப்பு நாள் மே 17 | ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த உடல் மூப்பு கட்டுப்பாட்டு (Anti Aging) நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் விளக்குகிறார்: எங்கே இருக்கிறது? அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் …
-
- 0 replies
- 555 views
-
-
உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா? மே 17 சர்வதேச உயர்ரத்த அழுத்த விழிப்புணர்வு தினம் டாக்டர்கு. கணேசன், பொதுநலமருத்துவர் ராஜபாளையம். email: gganesan95@gmail.com உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகைபிடிப்பவரா? மதுப் பழக்கம் உண்டா? உடல் பருமன் உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? சர்க்கரை நோய் இருக்கிறதா?மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு 'ஆம்' என்று பதில் சொன்னாலும் இன்றைக்கே டாக்டரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான ரத்த அழுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
இருமல் பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு [ வியாழக்கிழமை, 14 மே 2015, 08:45.26 மு.ப GMT ] வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இதில் உள்ள நார்ப்…
-
- 0 replies
- 3k views
-
-
உடலுழைப்பு இல்லாத வேலையும் காரணம்!டேக் கேர் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனுநீதி மாறன்: நெஞ்செரிச்சல் பாதிப்பு, தற்போது அதிகரித்து வரும் நோயாக மாறி வருகிறது. முன்பு, 35 - 40 வயதுக்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது, 20 - 25 வயதிலேயே, இந்தப் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இதற்கு, மாறிவரும் உணவுக் கலாசாரம் தான் முக்கிய காரணம். இதனால், உணவுக்குழாயும், இரைப்பையும் இணைகிற இடத்தில், ஒரு வால்வு பாதிப்படைகிறது.நெஞ்சுக்குள் கீழே உள்ள பகுதி தான் இரைப்பை; நடுவில் இருப்பது வால்வு. உணவுப்பையில் உண்டாகிற ஹைட்ரோ குளோரிக், செரிமானத்துக்கான ஒரு அமிலம். அதைத் தாங்கும் சக்தி, இரைப்பைக்கு உண்டு; ஆனால், உணவுக்குழலுக்கு இல்லை.அதனால், அங்…
-
- 2 replies
- 1.2k views
-
-
டொக்டர்.P.சங்கர், M.D.,D.M., சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் நம் உடலிலுள்ள கழிவுகளில் அகற்றுவதில் முக்கிய ப்ங்கு வகிப்பது சிறுநீரகம் தான். அத்துடன் நம்முடைய இரத்த அழுத்தம் சீராக வைத்திருப்பதும் இதன் கடமைகளில் ஒன்று எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான இரத்த சிவப்ப ணுக்களின் உற்பத்தியை தூண்டுவதிலும், உட லிலுள்ள நீர் மற்றும் அமிலப் பொருள்களின் அளவை சமமாக வைத்திருப்பதிலும் இதன் பணிகளே. அத்துடன் நாம் சாப்பிடும் உண வுப் பொருளின் கழிவுகள் இரத்தத்துடன் சீறுநீர கத்திற்கு வரும் அதனை வடிகட்டி, யூரியா, கிரியாட்டின் போன்ற கழிவுகளை துல்லியமாக இனம் கண்டறிந்து அதனை சிறுநீராகப் பிரித்து…
-
- 0 replies
- 2k views
-
-
இரத்த சோதனையிலேயே கருவகப் புற்றுநோயை கண்டறியலாம் 5 மே 2015 பகிர்க கருவகப் புற்றுநோய் செல்களின் தோற்றம்கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ovarian cancer என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருவகப் புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நாற்பத்தி ஆறாயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, கருவகப் புற்றுநோயை கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட, ரத்தப்பரிசோதனை மூலம் இரண்டுமடங்கு துல்லியமாக கருவகப் புற்றுநோயை கண்டறியமுடியும் என்று தெரியவந்திருக்கிறது. அதேசமயம் கருவகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்…
-
- 0 replies
- 384 views
-
-
நாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் உள்ளன. பழங்களுக்குள் உள்ள மருத்துவ குணங்கள் இதோ, ஆப்பிள் இரத்த சோகை, இரத்த ஓட்டச் சுழற்சி, குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது. இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். நாவல் பழம் நீரிழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். மூல நோயின்…
-
- 4 replies
- 656 views
-
-
உடலில் வெண்மை படலம் படருவது ஆபத்தான ஒன்றாகும். இப்படி வெண்மை படலம் படருவதற்கு “லூகோடெர்மா” அல்லது “விடிலிகோ” என்று பெயர். பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது. வெண் படலம் முதலில் கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது, சிலருக்கு மூக்கு, வாய், கண்கள், தொப்புள் போன்ற இடங்களில் வெண் படலம் தோன்றும். பிறகு பரவாமல் அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும், சிலருக்கு உடல் முழுவதும் பரவும். உடலுக்கு மெலனின்(Melanin) என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான். எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். வ…
-
- 1 reply
- 1.9k views
-
-
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான். அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது. மருத்துவ பயன்கள் பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது. இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உ…
-
- 0 replies
- 1k views
-
-
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது. இவ்வாறு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக விளங்கும் தண்ணீர், உடலிலிருந்து அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதற்கு Dehydration என்று பெயர். நாம் குடிக்கும் தண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் போன்றவற்றின் மூலம் வெளியேறுகிறது. ஆனால், தண்ணீர் அதிகமாக வெளியேறும்போது உடல் வறட்சி அடைந்து மரணம் ஏற்பட…
-
- 0 replies
- 575 views
-
-
எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ள சோளம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்…
-
- 0 replies
- 576 views
-
-
மூச்சு விடுவது எப்படி ? மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.? நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம். படிக்கலாம் அல்லது ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா? அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.? போதும் . மேலோட்டமாகவே பார்ப்போம். நாம் உட்கார்ந்து செய்யக்கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான் மூச…
-
- 1 reply
- 2.1k views
-