நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெயும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. * வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும். * லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. மேலும் உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. * உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் நோய் காரணிகளை போக்கி உடலை காக்கின்றன. * வெண்ணெயில் ‘வைட்டமின்-ஈ’ …
-
- 0 replies
- 577 views
-
-
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பத்மாசனம்: பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆமணக்கின் இலை, வேர், விதை ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர். ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆமணக்கு வேர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், நாட்பட்ட சீழ்பிடித்த ஆற…
-
- 0 replies
- 402 views
-
-
தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை. கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரு…
-
- 1 reply
- 538 views
-
-
வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் என்பது மங்கலப் பொருள் ஆகும். வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் தாம்பூலத்தை பயன்படுத்துவார்கள். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்" தாம்பூலத்தில் உள்ளது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம் மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. வெற்றிலைக்கு தாம்பூலம், தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, மெல்லடகு, வெள்ளிலை என்று பல பெயர்கள் உண்டு. ஆனால் வெற்றிலை என்னும் சொல்லே நடைமுறையில் உள்ளது. கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. மருத்துவ பயன்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கியமானவை கண் இமைகள். கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள். செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கண் இமைகளை வளர்க்கலாம், ஆனால் அதற்கு சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன. கண் இமைகள் வளர சில டிப்ஸ் 1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும். 2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமெ…
-
- 0 replies
- 516 views
-
-
உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளனர். கேப் டவுன் நகரிலுள்ள டைகர்பெர்க் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்திருந்தது. ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் முயற்சித்தது அது இரண்டாவது தடவை என்று கூறப்படுகிறது. தொழில்தர்மம் கருதி அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவரின் அடையாள விவரங்களைத் தாம் வெளியில் விடவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட ஆண்குறி முன் தோல் நீக்கத்துக்கு பின்னர் இவருக்கு கோளாறுகள் ஏற்பட அவரது ஆண்குறி அகற்றப்பட வேண்டி …
-
- 4 replies
- 3k views
-
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும் வெள்ளை சாதத்தை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும். வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால் 2 வகையான நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே சாதம் சாப்பிட ஆசை வந்தால் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள். மேலும், வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்போவதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.…
-
- 0 replies
- 739 views
-
-
குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். …
-
- 0 replies
- 733 views
-
-
கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. * வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். * மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம். * மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப…
-
- 0 replies
- 539 views
-
-
உணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் இதி…
-
- 0 replies
- 482 views
-
-
வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று. அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.
-
- 42 replies
- 5.5k views
-
-
மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்! 21:31:15 Sunday 2015-01-11 HAVE COMPLETED THE FULL CIRCLE OF W... வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்ப…
-
- 8 replies
- 8.4k views
-
-
வாழைப்பழங்களில் ஒரு வகையான செவ்வாழை எண்ணற்ற சத்துக்களும், சுவைப்பதற்கு சுவையாகவும் இருக்கும். வாழைப்பழங்களில் பல வகை உண்டு, சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கின்றன. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையின் மருத்துவ குணங்கள் நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் குழந்தை இல…
-
- 0 replies
- 585 views
-
-
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரை…
-
- 1 reply
- 2k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 779 views
-
-
உலக மாந்தர் நோயின்றி வாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் வகுத்த மருந்தில்லா மருத்துவம் ! பசியின்றி எதையும் உண்ணாதீர். பசித்த பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். உண்ட உணவு நன்றாக செரித்த பின்பே அடுத்த வேலை உணவு உட்கொள்ள வேண்டும் . இதை மட்டுமே கடைபிடித்தால் இந்த உடலுக்கு மருந்தென்று ஒன்று தேவை இல்லை. எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறோம் ?
-
- 0 replies
- 622 views
-
-
மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகங்கள் ஆகும். உலக சிறுநீரக தினமான இன்று அதனை பாதுகாப்பது எப்படி, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் தொடங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரும். சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மா…
-
- 0 replies
- 2.7k views
-
-
சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். ----- இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம். ------ மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். ------- நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் ------ மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! -------- இந்…
-
- 2 replies
- 933 views
-
-
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள். பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும். அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள்…
-
- 0 replies
- 438 views
-
-
சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆந்தோசயானின், லைகோபீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. லைகோபீன் ஊட்டச்சத்து புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது, ஆந்தோசயானின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே இந்த காய்கறிகளை தினமும் இந்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதுளை மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களின் பட்டியல் இதில் அடங்கும். கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும். ரத்த சோகை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம். சர…
-
- 1 reply
- 615 views
-
-
பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன. என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பருக்கள் உங்களை அசிங்கப்படுத்துகின்றது என்ற கவலையில் இருக்கும் நீங்கள் செயற்கை மருத்துகளை தவிர்த்து, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதால் பருக்கள் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பால் பொருட்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால் பருக்கள் அதிகம் வருகிறது. காபி சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக…
-
- 0 replies
- 455 views
-
-
ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும். நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு பழங்களைத்தான் நாம் முதலில் எடுத்துக்கொள்கிறோம். பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது. இத்தகைய சர்க்கரையை சரியாக கவனிக்காமல் இருந்தால், சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறிவிடும். பழங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பழங்களை சாப்பிட சொல்கின்றனர். மேலும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை தான் புருக்டோஸ். இது உடலினுள் செல்லும் போது, சுக்ரோஸ் மற்றும் கிளைகோஜெனாக மாற்றப்படும். சுக்ரோஸ் என்பது பதப்படுத்த…
-
- 0 replies
- 427 views
-