நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
-
- 0 replies
- 772 views
-
-
உலக மாந்தர் நோயின்றி வாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் வகுத்த மருந்தில்லா மருத்துவம் ! பசியின்றி எதையும் உண்ணாதீர். பசித்த பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். உண்ட உணவு நன்றாக செரித்த பின்பே அடுத்த வேலை உணவு உட்கொள்ள வேண்டும் . இதை மட்டுமே கடைபிடித்தால் இந்த உடலுக்கு மருந்தென்று ஒன்று தேவை இல்லை. எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறோம் ?
-
- 0 replies
- 618 views
-
-
மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகங்கள் ஆகும். உலக சிறுநீரக தினமான இன்று அதனை பாதுகாப்பது எப்படி, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் தொடங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரும். சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? 1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மா…
-
- 0 replies
- 2.6k views
-
-
சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். ----- இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம். ------ மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். ------- நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் ------ மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! -------- இந்…
-
- 2 replies
- 923 views
-
-
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள். பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும். அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள்…
-
- 0 replies
- 433 views
-
-
சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆந்தோசயானின், லைகோபீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. லைகோபீன் ஊட்டச்சத்து புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது, ஆந்தோசயானின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே இந்த காய்கறிகளை தினமும் இந்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதுளை மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களின் பட்டியல் இதில் அடங்கும். கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும். ரத்த சோகை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம். சர…
-
- 1 reply
- 605 views
-
-
பெரும்பாலான பருவப் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக வாட்டத்தை அதிகரிக்க செய்கின்றன. என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும், முகப்பருக்கள் உங்களை அசிங்கப்படுத்துகின்றது என்ற கவலையில் இருக்கும் நீங்கள் செயற்கை மருத்துகளை தவிர்த்து, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதால் பருக்கள் வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பால் பொருட்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செனை பசுக்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால் பருக்கள் அதிகம் வருகிறது. காபி சிறுநீரகச் சுரப்பியிலிருந்து மன அழுத்த ஹார்மோன்களை விடுவிக…
-
- 0 replies
- 450 views
-
-
ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும். நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு பழங்களைத்தான் நாம் முதலில் எடுத்துக்கொள்கிறோம். பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது. இத்தகைய சர்க்கரையை சரியாக கவனிக்காமல் இருந்தால், சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறிவிடும். பழங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பழங்களை சாப்பிட சொல்கின்றனர். மேலும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை தான் புருக்டோஸ். இது உடலினுள் செல்லும் போது, சுக்ரோஸ் மற்றும் கிளைகோஜெனாக மாற்றப்படும். சுக்ரோஸ் என்பது பதப்படுத்த…
-
- 0 replies
- 422 views
-
-
கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். இறால் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று அடுக்கி கொண்டே போகலாம். நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமானது. நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். நண்டில் உள்ள புரோட்டீன் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
உங்கள் நவீன கைத்தொலைபேசிகளை காற்சட்டை பொக்கட்டுக்குள் பதுக்கி வைக்கிறீர்களா.. பெரும்பாலன ஆண்கள் செய்வது இதையே.. என்பதால்.. இதனை தொடர்ந்து படியுங்கள். மொபைல் போன்களில் இருந்தான கதிர்ப்புக்களின் தாக்கம் காரணமாக விந்தணுக்களின் இயங்கும் ஆற்றல் குறைவடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும்.. இந்த ஆய்வுகள் இன்னும் கூடிய திருத்தமாக செய்யப்பட்ட வேண்டும் என்று பிற விஞ்ஞானிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மறுதலித்துள்ளனர். It analysed 10 separate studies on sperm quality involving 1,492 men. These included laboratory tests on sperm exposed to mobile phone radiation and questionnaires of men at fertility clinics. Lead res…
-
- 0 replies
- 519 views
-
-
கொள்ளும்,பப்பாளியும் கொழுத்தவனுக்கு கொள்ளு....................! கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு . ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும். குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளை…
-
- 3 replies
- 1.2k views
-
-
அறிவுத்திறன் வீழ்ச்சி டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி. வயதாக வயதாக ஞாபக சக்தி குறைந்துகொண்டே போகுமோ? கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ? என்று ஒரு பயம்நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும். ஒருவேளை அதுதான் அறிவுத் திறன் வீழ்ச்சியோ? முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர் அறிவுத் திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மற…
-
- 0 replies
- 477 views
-
-
பரம்பரை அமைவுகளையும் சூழ்நிலைகளையும் காரணிகளாகக் கொண்டு, வழக்கத்திற்கு அதிகமான அளவில் மிகவும் இலகுவாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை, தமிழ் சமூகத்தின் மத்தியில் பொதுவானதாகவுள்ளது. மரபு வழித் தோற்றங்கள் இருப்பினும், கலாச்சார வழிமுறைகளின் தரமும் நம் மத்தியில் பெருகிவரும் இந்த ஆபத்தான நிலைக்குப் பகுதிக் காரணமெனக் குறை கூற வேண்டியுள்ளதென, சில ஆரோக்கியம் சம்பந்தமான நிபுணர் கருதுகின்றனர். தெற்கு ஆசிய மக்களை நீரழிவு நோயானது UK இன் மிகுதிப் பிரஜைகளிலும் பார்க்க ஆறு மடங்கு அதிகமாகப் பாதிப்பதும், இருதய நோய் நான்கு மடங்கு அதிகமாகத் தாக்குவதோடு, பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் முன்பாகவே ஏற்படுவதாகவும் உதாரணம் காட்டப்படுகிறது. கேடயச் சுரப்பி நோய், மார்பகப் புற்றுநோய், வைட்டமின்…
-
- 0 replies
- 704 views
-
-
ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ப்ரக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ரக்கோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. ப்ராக்கோல…
-
- 0 replies
- 533 views
-
-
அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. என்றும் இளமையாக கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் ம…
-
- 0 replies
- 499 views
-
-
நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள். சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான். உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!! அதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்கள் ச…
-
- 0 replies
- 826 views
-
-
-
- 1 reply
- 652 views
-
-
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மரு…
-
- 0 replies
- 676 views
-
-
ஆபத்துக்களை விளைவிக்கும் அஜினமோட்டோ ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காவும் உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் மனிதர்கள். அவ்வாறு, ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும். அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டு…
-
- 1 reply
- 747 views
-
-
பொதுவாக காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்து கொள்வது உடல்ரீதியாக மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும். குறிப்பாக பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய். அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயின் மகத்துவங்கள் அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.…
-
- 0 replies
- 2k views
-
-
பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்…
-
- 1 reply
- 650 views
-
-
தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உற்சாகம் தரும் பானங்களில் ஒன்றான காபி மற்றும் டீ குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுரங்குவதால் அடைப்பு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள வேத…
-
- 1 reply
- 667 views
-
-
சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. கோடைக்காலத்தின் அதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்க…
-
- 0 replies
- 421 views
-