நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை. தேடி வரும் உலகம் உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் காலைச் சிற்றுண்டியான இட்லி மாறிவருவது, நம் உணவை உலகம் ஏற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது. சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட…
-
- 0 replies
- 493 views
-
-
செம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி ஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களின் நோக்கம். தான் சார்ந்த பிரதேச மக்களின் நலன் கருதி "செம்புலம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்" ஊடாக பயன்தரு மூலிகை, காய்கறி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் செம்புலம் மூர்த்தி. (ஞானமூர்த்தி விக்னேஸ்வரமூர்த்தி -ரகு).செம்மண் கிராமமான யாழ்ப்பாணம் - குப்பிளானை சேர்ந்த இவர் இயற்கை வழி இயக்கத்திலும் செயற்பாட்டாளராக விளங்கி வருகிறார். எமது பிரதேசத்தில் சுண…
-
- 0 replies
- 547 views
-
-
இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும் என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர, தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்' என்றார். 'தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இதன் மூலம், அவர்களால் இலகுவாக சாதனை படைக்க முடியும். கல்விக்கு இணையம் தேவை என்…
-
- 0 replies
- 386 views
-
-
இதயத்தை பாதுகாக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள் மனித உடலில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமானதொரு உறுப்பு என்றால் அது இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாக்க தவறியதன் விளைவாக உலகம் முழுவதும் இதய நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதயத்தை காக்க மக்கள் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதயத்துக்கு உகந்தது ஆப்பிள் என இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்க்கு முக்கிய காரணமான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்புச்சத்தை அழிக்கும் திறன் ஆப்பிள் பழத்துக்கு உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதய குழாய்களில் (தமனிகளில்) ஏற்படும் அடைப்பை தடுக்கும் திறனும், மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலு…
-
- 0 replies
- 608 views
-
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? உடனடியாக கழிவறை அல்லது தரை என்று கூறுவீர்கள். ஆனால், இந்த விடை சரியல்ல. பாத்திரம் துலக்கும் பஞ்சு அல்லது துணிதான் உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான பொருளாகும் என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. பாத்திரங்களை சுத்தப்படுத்தும் துணிகள் பொதுவாக பல பாக்டீரியாக்களின் தாயகமாகி விடுகின்றன. இந்த துணிகள் வெதுவெதுப்பாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், கிருமிகள் வளர்வதற்கு சிறந்த சூழ்நிலை அவற்றில் உள்ளதே இதற்கு காரணமாகும். கழிவறை இருக்கையில் ஒரு சதுர அங்குல (6.5 சதுர சென்டிமீட்ட…
-
- 0 replies
- 975 views
-
-
சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது. சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது. ஆண் விந்துவில் போதி…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 10:58 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும். உங்கள் உடல் முழுவதும் ஒரு செழிப்பான நு…
-
- 0 replies
- 775 views
- 1 follower
-
-
முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம். அது என்னனு கேக்குறீங்களா எல்லோர் வீட்டிலேயும் உபயோகபடுத்துறது தான். வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்த…
-
- 0 replies
- 651 views
-
-
நீண்ட நேரம் பாலுறவு கொள்வதற்கும், பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கும் பலவிதமான மாத்திரைகளையும், மருந்துகளையும் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மருந்துகளும் இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் பாலுணர்வைத் தூண்டுவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் மருந்துகள் தேவையா, அத்தகைய ஏற்படும் பலன்கள், பக்க விளைவுகள் என்னென்ன? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். பாலுணர்வைத் தூண்டுவதற்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன? நீண்ட நேரம் உ…
-
- 0 replies
- 502 views
-
-
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை…
-
- 0 replies
- 601 views
-
-
சர்க்கரை நோய்க்கு சர்க்கரையே மருந்து - கேரள மருத்துவர் வினோத சிகிச்சை.
-
- 0 replies
- 265 views
-
-
பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதய நோய், அல்சைமர் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கண்டால் அவர்கள் சுத்தமாக பல் தேய்க்கவில்லை என்று சொல்ல மாட்டோம் இல்லையா? ஏனெனில், நாம் பல் சுத்தம் பேணவில்லை என்றால், அதனால் பற்சிதைவு, சொத்தைப்பல், சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்டவைகளை தான் சொல்வோம். ஆனால், வாய் சுத்தமாக இல்லாமல் இருந்தால், அது தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகள் உடலிலும் ஏற்படும் என்கிறது ஆய்வு. வாயில் உருவாகும் பாக்டீரியா உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் மூளைக்கு…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி, நோன்பு என இந்துக்களின் பண்டிகைகளின் போது இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஆனதுதான். அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான் இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம். அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து …
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 18 செப்டெம்பர் 2023, 07:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் உண்ணும் உணவு நம் உடலின் தசைகள் மற்றும் தோலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மூளை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மூளையின் செயல்பாட்டுடன் அதற்கு என்ன தொடர்பு? இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க சமீபகாலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறதோ அதன் நேரடி தொடர்பு நம் மூளையில் நடப்பதுடன் இருக்கிறது. நம் வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்துகொள்வோம். உண்மையில் வயிறு என்றால் என்ன? ஹூஸ்டனில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியின் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி ப…
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
மனமும் தியானமும் -கிருஷ்ணன், சிங்கப்பூர். அலைந்து அலைந்து களைத்துக் கிடக்கிறது மனித மனம். எதற்காக என்றே தெரியாத, காட்டு நாய்த்தனம்...! வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம், மகிழ்ச்சி என்றெல்லாம் மாறி மாறி மோதிய அலையில், மனதின் ஓரங்களில் கப்பிக் கிடக்கிறது உப்புப்பாளங்கள். அடித்தவனை கடிக்கப் பார்க்கும் ஆவேசம்- அறியாமல், காலை மிதித்தவனை நசுக்கி வைக்கும் மிருகரோஷம் மண்டிக் கிடக்கிறது. இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறான் மனிதன் ? விடுபடுவதையோ, விரயப்படுவதையோ உணராத உன்மத்த மனம்... 'சுய அறிதல்' இன்றி, மனம் இன்றி கரைந்து கொண்டிருத்தலைத் தடுத்துக் கரை சேர வழி காணவே இருப்பது பிறவிப்பயன்.....! இந்த உலகின் தூய்மை அழிந்து கொண்டே போகிறது. பொய்மையும்,…
-
- 0 replies
- 1.4k views
-
-
வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். ருசிக்காக சாப்பிடாதீங்க ருசி என்பது நாவின் சுவை நரம்புகளுக்கு மட்டும்தான் தெரியும். ருசிக்கிறது என்பதற்காக கண்டதையும் அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடைசியில் அதுவே ஜீரணகோளறுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையான…
-
- 0 replies
- 391 views
-
-
Global Health Media Project https://www.youtube.com/user/globalhealthmediaorg/videos The Story of Ebola The Story of Cholera
-
- 0 replies
- 656 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் கிங் பதவி, தி கான்வர்சேஷன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்று, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் மிகவும் எளிதாக உங்கள் வீட்டிலேயே கர்ப்பம் கண்டறியும் கருவியை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் கழித்து சோதனை செய்து க…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது எச்சரித்துள்ளது. எது உடல் பருமன்? ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என…
-
- 0 replies
- 708 views
-
-
பட மூலாதாரம்,KOURTNEY SIMMANG படக்குறிப்பு, கோர்ட்னி PCOS உள்ள பெண்களுக்கு அங்கீகரிக்கப்படாத சோதனைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்கிறார் கடந்த 12 வருட காலமாக சோஃபிக்கு வலிமிக்க மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. அவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 10 பெண்களில் ஒருவருக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை பெற சோஃபி போராடினார். தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதே, இதற்கான சிகிச்சை பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்தான், கோர்ட்னி ச…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சிமுடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன். திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்த…
-
- 0 replies
- 553 views
-
-
அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. என்றும் இளமையாக கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் ம…
-
- 0 replies
- 499 views
-
-
கடந்த அரை நூற்றாண்டிற்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு தகவல் வெளியிட்டுள்ளது. த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கையில் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறப்பு விகிதம் இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே …
-
- 0 replies
- 224 views
- 1 follower
-