யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…
-
- 6 replies
- 886 views
-
-
வியாழன் 31-08-2006 04:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேச…
-
- 2 replies
- 886 views
-
-
மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார். போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் …
-
- 0 replies
- 883 views
-
-
ஈழ உறவுகளுக்கு வணக்கம் - எல்லைகள் கடந்து விரிந்து விட்ட உங்கள் போற்களத்தில் நானும் ஒரு போராளியாய்....
-
- 9 replies
- 883 views
-
-
Naan oru mutaalungo... Siruppu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu http://www.JillJuck.com/Tamil-SMS-Jokes
-
- 5 replies
- 883 views
-
-
அக்பரின் அரண்மனையில் 50000 நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது (ஆனால் அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது) எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் இல்லத்தில் 5 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. தலை குனிந்து படி. தலை நிமிர்ந்து வாழலாம். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு) தன் மகனை/மகளை சான்றோனாக்குவதற்கு தந்தை வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்தாலே போதும். நூலகத்தின் படிக்கட்டுகளை முதன் முதலாக அவன்/அவள் தொடும்போது, நடந்து கொண்டு அல்ல, தவழ்ந்துகொண்டு செல்லவேண்டும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 0 replies
- 880 views
-
-
வனக்கம் நண்பர்களே என் தமிழ் அறிவையும் எழுத்து அறிவையும் பட்டை தீட்ட வந்துள்ளேன்
-
- 13 replies
- 878 views
-
-
வணக்கம் பாருங்க கிட்ட தட்ட எட்டு வருஷம் எண்டு நினைவு ..மீள் இங்கே இணைகிறேன் . சில யாழ்உறவுகளை ஒரு விழாவில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன் அப்போது அவர்கள் இட்ட கட்டளைக்கு இணங்க இங்கே இணைகிறேன் .. யாவரும் நலமாகா உள்ளீர்களா ..? வாங்க பேசலாம் ..? வந்த வழித்தடத்தை வழியில மறந்தவர்கள் நின்று நிலைத்ததில்லை நீடூழி வாழ்ந்ததில்லை ...
-
- 12 replies
- 877 views
-
-
அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.
-
- 8 replies
- 877 views
-
-
இன்று நான் எழுதுவது யாழ் அரிச்சுவடியில் என்னை பழக்கி கொள்ள மட்டும் அல்ல, நான்கம் கட்ட ஈழபோர் தொடங்கிய நாள் முதல் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கும் வேதனையையும் தான், தொடக்கத்தில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகள் எல்லொரையும் நினைத்து மறுகுவதும் பின் என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி என்ட்ரு சும்மா இருப்பதுமாக இருந்த நான் இன்று எதற்கு அழ எதற்கு வேதனைப்பட என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள், 1995ஆம் ஆண்டின் இடப்பெயர்வு கொடுத்த தாக்கத்தை கொஞ்சம் அனுபவித்தும் இருக்கிறேன்.ஆனால் இன்று வன்னி மக்கள் படும் வேதனைகளோடு ஒப்பிடும் போது எனது அனுபவம் நாங்கள் அனுபவித்தவை கடுகளவு கூட இல்லை என்பது முற்றிலும் உண்மை. னான் வன…
-
- 6 replies
- 876 views
-
-
வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.
-
- 17 replies
- 876 views
-
-
அனைவருக்கும் வணக்கம், பின் வரும் ஆங்கில கட்டுரையை எனது நண்பர் எழுதி உள்ளார் இதை பிரசுரித்து வேற்று மொழி தளங்களில் (digg.com, stumbleupon etc. ) link பண்ண உதவவும். எனக்கு ஏனைய பகுதிகளில் பிரசுரிக்கும் அனுமதி கிடைக்கவில்லை, அதனால் யாழ் இணையத்தினர் இதை பிரசுரித்தால் இதனை வெளி கொண்டு செல்ல முடியும். மற்றும் இதே தமிழில் மொழி பெயர்த்து உதவவும். நன்றி ராசி ------------------------------------------------------------- US Tax money funding genocide in Sri Lanka IMF bailout to fund genocide The Sri Lankan Government has applied for $1.9 billion dollars from the IMF. At present, the Sri Lankan government is carrying out a genocidal war aga…
-
- 0 replies
- 875 views
-
-
உங்களில் ஒருவனாய் என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். அன்புடன் மனிதன்.
-
- 10 replies
- 874 views
-
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா? பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்... காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்... மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
-
- 5 replies
- 873 views
-
-
-
வணக்கம் உறவுகளே நான் இவ் இணையத்தில் இணைந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன். எனது எண்ணக்கிடக்கையில் உள்ளவற்றையும் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தவும் பலரினதும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல உறவுப் பாலமாக அமையுமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவும் இருக்குமென நம்புகிறேன். நன்றி காங்கேயன் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.
-
- 9 replies
- 872 views
-
-
Youtube காணொளிகள் இணைக்கமுடியாதுள்ளது, ஏன்?
-
- 3 replies
- 871 views
-
-
-
-
உன்னைப் போல் பிறரை நேசித்துப்பார் - நீ உன்னையே நேசிக்கத் தொடங்குவாய் - அப்போ தான் உன்னை பலர் நேசிப்பது உனக்கு தெரியவரும். உன் இரக்க குணத்தால், மனிதாபிமான உள்ளத்தால் மற்றவரை நேசிக்கிறாய் உன்னை இறைவன் ஆசீர்வதிக்க இது வழி செய்யும். உன் இரு கையையும் கூப்பி வணங்குவதை விட உன் ஒரு கையால் உதவு அதுவே உன்னை நினைத்து இறைவன் மகிழ்ந்து உன்னை ஆசீவதிப்பார். உண்மை அன்பு என்றால் என்ன ? எதிர்பார்பு அல்லாது உதவுவது ஏழையை நேசிப்பது, இல்லாதோரை மதிப்பது. மற்றவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பது மக்கள் துயர் கண்டு உன் கண்ணில் கண்ணீர் வருவது, பிறருக்காக வாழ்வது, படிக்கவழியற்ற பிள்ளைக்கு உதவுவது பகிர்ந்து உண்பவது, பசிபோக்க வழி செய்வது, இதை -உன் வாழ்வில் இலட்சிய…
-
- 3 replies
- 868 views
-
-
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே.... அழிந்தவை அழிந்து ஒழிந்தவை ஒழிந்து இழந்தவை இழந்து எச்சம் மிச்சம் கொண்டு எழுந்து கொண்டது புதியதோர் வருடம் அழிவெனும் வதந்தி கடந்து புதியதோர் உலகமாய் நடந்தவை நடந்தாக முடிந்தவை முடிந்தாக இருப்பவர் எல்லாம் எழுந்தாக வேண்டும் நுட்பமாய் எம்மை நாமே செதுக்கி நாளைய உலகை நம் கையில் தாங்கிட...
-
- 6 replies
- 865 views
-
-
யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி. எம்மைபற்றிய அறிமுகம்: செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம். நன்றி.
-
- 11 replies
- 865 views
-
-
-