Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:37 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்ப…

  2. பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு - ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கடும் கண்டனம் Published By: Vishnu 24 Mar, 2026 | 03:17 AM (நா.தனுஜா) கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இச்செயல் கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மேமாதம் அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் …

  3. இஸ்தான்புல்லில் விபத்து : சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் பலி Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:08 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், சுவிற்சர்லாந்து நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) மற்றும் சிவாஸ்கரன் சுகந்தி (47) ஆகியோர் அடங்குகின்றனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற…

  4. சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி…

  5. அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கையளிப்பு!! 03 Mar, 2026 | 07:17 PM அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையிலேயே குறித்த சுகாதார பொருட்கள் இன்றைய தினம் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து ம…

  6. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை 28 Feb, 2026 | 10:03 AM பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள …

  7. பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை Feb 23, 2026 - 12:29 PM பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் ம…

  8. இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு 24 Feb, 2026 | 10:53 AM இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர். மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில் தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூ…

  9. வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் Dec 17, 2020 அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ். தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர். அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு ‘ச…

  10. அவுஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது 20 Feb, 2026 | 02:28 PM அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது. மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவ…

  11. "கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள மொழி சேவை‎ 14 பிப்ரவரி 2026, 02:56 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும். பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங…

  12. Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?

    • 3 replies
    • 432 views
  13. யேர்மனியில் வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன். Posted on February 12, 2026 by சமர்வீரன் 60 0 வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, நடன …

    • 0 replies
    • 561 views
  14. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது February 12, 2026 11:53 am பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர்…

  15. அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன…

      • Haha
      • Thanks
    • 12 replies
    • 763 views
  16. குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னில…

      • Like
      • Haha
    • 7 replies
    • 481 views
  17. சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran

  18. லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்! இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து நேற்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தது. இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்தும், தமிழ் தேசிய கொடியை தாங்கியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463312

  19. 📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! adminFebruary 3, 2026 கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚨 இவர்கள…

  20. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன் Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 04:06 PM பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது…

  21. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே.…

  22. பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்…

      • Like
    • 1 reply
    • 373 views
  23. கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உர…

  24. கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.