வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. ஜெனீவா- ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில், சிங்கள …
-
- 0 replies
- 485 views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு. கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சிபெற்று வந்த ஏககாலத்தில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு பங்களிப்புகளும் இடம் பெற்ற வந்தன. இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக இடம் பெறவேண்டுமெ…
-
- 4 replies
- 711 views
-
-
நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ) சாத்திரி (ஒரு பேப்பர்) புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்…
-
- 21 replies
- 1.5k views
-
-
Dear xxxx, I hope that you have read the memorandum that was sent to Tamil National Alliance by some members of Tamil civil society. We think it is a significant development that the civil society has come out and openly expressed their views in the matters concerning Tamils. We would like to publish your opinion along with the memorandum. Could you please send your comments in few lines, please? Many thanks Gopi Ratnam Editor in Chief Oru Paper தமிழ் குடிசார் சமூகத்தினரினரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட பகிரங்க விண்ணப்பம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்தறிவதற்காக உலகத்தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், …
-
- 3 replies
- 625 views
-
-
-
-
- 0 replies
- 854 views
-
-
கனடாவிலும் புலி ஆதரவு முத்திரை வெளியிட்ட சர்ச்சை பிரான்ஸின் தபால் சேவைத் துறையினரால் வெளியிடப்பட்ட புலிகள் சார்பு முத்திரைகள் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் கனடாவின் ஒட்டாவாவைத் தளமாகக் கொண்ட இலங்கையர் அமைப்பொன்றானது கனடிய அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பியுள்ளது. புலிகளின் சின்னங்களைத் தாங்கிய முத்திரைகளை கனடாவில் சுற்றோட்டத்திற்கு விட்டிருப்பது தொடர்பான விவகாரமானது கனடிய அரசு கவனம்செலுத்தும் நிலைமையைத் தோற்றுவித்தி ருக்கிறது. கனடாவின் இலங்கை ஐக்கிய தேசிய சங்கமானது புலிகளின் முன்னணி அமைப்பான தமிழ் இளைஞர் அமைப்பின் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கனடாவின் தபால் சேவையை இந்த அமைப்பானது துஷ்பிரயோகம் செய்திருப்பதாகக் குற்றச்சா டுத் தெரிவிக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கனடா: முதலாவது தமிழ் காவல்துறை அதிகாரி கனடாவில் டொராண்டோவுக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள மோல்ட்டன் பகுதியின் காவல்துறை அதிகாரியாக (இன்ஸ்பெக்டர்) நிசாந்தன் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். 37 வயதுடைய இவர் தனது ஆறு வயதில் கனடாவுக்கு வந்தவர். இன்று வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். ( கனடாவில் காவல்துறை நிர்வாகம் மாநகரசபை அளவில் இயங்கும் அமைப்பு. இதற்கான பணம் வீட்டு வரியில் இருந்து பெறப்படும்) Nishan Duraiappah was recently promoted to inspector for One District (Milton and Halton Hills) of the Halton Regional Police Service. Metroland West Media Group File Photo ) http://www.insidehal...lead-by-example பின் குறிப்…
-
- 44 replies
- 4.2k views
-
-
Sri Lanka’s government declared victory in May, 2009, in one of the world’s most intractable wars after a series of battles in which it killed the leader of the Tamil Tigers, who had been fighting to create a separate homeland for the country’s ethnic Tamil minority. The United Nations said the conflict had killed between 80,000 and 100,000 people in Sri Lanka since full-scale civil war broke out in 1983. A US State Department report offered a grisly catalogue of alleged abuses, including the killing of captives or combatants seeking surrender, the abduction and in some cases murder of Tamil civilians, and dismal humanitarian conditions in camps for displaced persons. Hum…
-
- 0 replies
- 1k views
-
-
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே முன்னாள் கனேடிய அழகி நசாநினை மணந்தார்.ஈரானை பிறப்பிடமாக கொண்ட இவர் ரெக்கோடிங் ஆட்டிஸ்ட் ,விமானியும் ஆவார்
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகின் தொழில்வளம் மிக்க நாடாக கனடா முதலிடத்தை அடையமுடியும். ரீட்ஸெ உலகின் தொழில்வளம் மிக்க ஏழு நாடுகளுள்(G7) கனடா தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டாலும், ஜேர்மனியே முதலிடத்தைப் பெற்றிருப்பதாக மொன்றியல் வங்கியின்(BMO) தகுதிக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஜேர்மனி ஏற்றுமதியில் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றது. மேலும் தகுதியைக் கணிக்க உதவும் ஐந்து பிரிவுகளில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொது நிதிக்குறைபாடு, தற்போதைய கடனிருப்பு ஆகிய நான்கிலும் ஜேர்மனி கனடாவை விட குறைவாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணில் கனடாவில் பற்றாக்குறை 5 சதவீதமாக இருக்கிறது. மேலும் ஜேர்மனியின் தொழில்வளம் கனடாவை மிஞ்சியுள்ளது. G7 நாடுகளில் அமெரிக்காவின் நிலை ஆற…
-
- 0 replies
- 812 views
-
-
சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். இலங்கைய மையப்படுத்திய சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. ஏற்பட்டுள்ளது. கலாச்சார், பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை பெருந்துயரங்…
-
- 0 replies
- 757 views
-
-
கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம் ச. வி. கிருபாகரன் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். அவர் வணக்கம் கூறியதும், வழமைபோல் நன்றாக சிரித்துவிட்டு கூறினார், ‘‘நீPர் ஓர் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர் என்பது பற்றி உமக்கு தெரியுமோ என்றார்’’. என்ன விடயமென வினவியபொழுது, ‘தமிழீழ மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திந்த பொழுதும், போர்குற்றம் பற்றியோ, சிறிலங்காவின் ஜனதிபதி இராணுவம் பற்றியோ இரண்டு மணி நேரம் உலகில் எந்த ஊடகமும் எந்த மொழியிலும் எந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால் உம்மை பற்றி, அதாவது ஒரு தனி மனிதனை பற்றி சேறு பூசுவதற்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
சமீபத்தில் அமெரிக்காவில் மகிந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது எனலாம். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இந்த வழக்கை எடுத்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாரிய பொருட்செலவில் இவ்வமைப்பு தனது சக்திக்கும் மீறி இவ்வழக்கை எடுத்து நடத்துவது பாரட்டுதலுக்குரிய விடையமாகும். குறிப்பாக மகிந்தர் தனது பக்கம் வாதாட ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பதே தற்போது ஒரு முக்கியமான விடையம் ஆகும். தனக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என அவர் அதனை தட்டிக் கழித்திருக்கலாம். அப்படி அவர் சொல்லியிருந்தால் அமெரிக்க நீதிமன்றால் எதனையும் செய்யமுடியாது போயிருக்கும். காரணம் அமெரிக்க நீதிமன்றில் எவராவது ஒருவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் போட்டால் குறிப்பிட்ட நபரு…
-
- 1 reply
- 752 views
-
-
ரொறன்ரோவில் இந்த வாரம் இரு இளம் தமிழர் வீதி விபத்தில் இறந்துள்ளனர். விபரங்கள் பின்னர் இணைக்கின்றேன் அல்லது அகூதா இணைத்துவிடுவார் என நம்புகின்றேன் . விடுமுறைக்காலம் அவதானம் நண்பர்களே .
-
- 4 replies
- 1.6k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள். இவ் அமர்…
-
- 0 replies
- 569 views
-
-
திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..! ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்…
-
- 0 replies
- 939 views
-
-
லண்டனில் மாவீரர் தினத்தை 21 வருடங்களாக நடத்திவரும் கட்டமைப்பு காசுக் கணக்கை சரியாகக் காட்டவில்லை எனத் தெரிவித்து திடீரென உள் நுளைந்த தலைமைச் செயலகத்தினர் தாமே இனி மாவீர் தினத்தை நடத்துவோம் என மார்தட்டி நின்றனர். அவர்களுக்கு முதலில் நேசக்கரங்களை நீட்டியது நாடுகடந்த அரசாங்கமே ஆகும். நாடு கடந்த அரசில் தம்மைத் தாமே அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்வோர் பகிரங்கமாகவே தலைமைச் செயலகத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தச் சிக்கல் போதாது என்று GTV வேறு இவர்களுடன் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். ஆடான ஆடெல்லாம் இப்படி அலைய தான் மட்டும் சும்மா இருப்பதா என்று வெறும் 100 பேர் மட்டுமே கேட்க்கு ஐ.பி.சி என்ற வானொலியும் இவர்கள் வாலைப் பிடித்து ஆடியது. மழைக்குக் கூட பள…
-
- 5 replies
- 1.6k views
-
-
சாத்திரி (ஒரு பேப்பர்) அண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன். கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையான…
-
- 43 replies
- 6k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எமது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களுக்கான அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்…
-
- 0 replies
- 723 views
-
-
அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம். சாத்திரி ஒரு பேப்பரிற்காக இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
வண்ணங்களில் பேசும் சூர்யா ! பா.பற்குணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன் ''என் மகளுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது... என்பதெல்லாம், அவள் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. துயரங்களே வாழ்வாகிப்போன இலங்கையின் வன்னிக்காட்டுப் பிரதேசத்திலிருந்து, இடம்பெயர்ந்து இந்தியா வந்துவிட்டாலும்... இங்கேயும் எங்களுக்கு வலி மிகுந்த வாழ்க்கையே காத்திருந்தது. இருந்தாலும், என் மகளின் தன்னம்பிக்கை எங்களுக் கும் நம்பிக்கை கொடுத்துத் தேற்றியது. இன்று என் மகள் தன் ஓவியங்கள் மூலமாக இவ்வுலகத்திடம் பேசுகிறாள். அவளைப் பற்றி எல்லோரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். பெற்ற பேற்றை அடைந்து விட்டோம்!'' - இளம் ஓவியரான…
-
- 16 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அறிந்து கொள்வதற்கு ... http://naathamnews.com/2011/12/24/michael-grimm/ சுபா சுந்தரலிங்கம் நா.க.த.அ. அமெரிக்கப் பிரதிநிதி
-
- 0 replies
- 765 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள் தனது சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களும் தனது சங்கலியைக் கழற்றி அன்பளிப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த உர…
-
- 54 replies
- 5.3k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் : திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி திரு. வடிவேலு சுரேந்திரன் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி : திரு. மோகன் தியாகராஜா இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் : திரு. குணசீலன் வன்னியசிங்கம் வேல்ஸ் தேர்தல் தொகுதி : திரு. பொபி வி…
-
- 0 replies
- 619 views
-