வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு சிவதாசன் நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி. ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் …
-
- 1 reply
- 395 views
-
-
-
கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம் கனடா (Canada) - டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் டொரோண்டோவின் - ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில் நேற்று (மார்ச் 7) இரவு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை இந்நிலையில், அங்கு விரைந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும், சுமார் 12 பேருக்கு லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத ந…
-
- 2 replies
- 623 views
-
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்! March 7, 20250 Share0 Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார். 26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையின…
-
-
- 10 replies
- 991 views
-
-
இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
-
-
- 9 replies
- 764 views
- 1 follower
-
-
கனடா கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி! சிவதாசன் 45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்க…
-
-
- 6 replies
- 784 views
-
-
-
- 1 reply
- 726 views
-
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு 21 FEB, 2025 | இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈ…
-
-
- 18 replies
- 1.3k views
-
-
தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவ பீடத்தில் இரண்டாவது வருடம் கல்வி கற்கும் தங்கையின் காணொளி. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். 29/03/2025 பழைய ஐ.பி.சி இயங்கிய கட்டிடத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது. Contract 075 3539 4739.
-
-
- 2 replies
- 684 views
- 1 follower
-
-
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக்…
-
- 0 replies
- 401 views
-
-
கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்! இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அத்துடன் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு …
-
- 0 replies
- 464 views
-
-
-
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை ! சர்வதேசம் ;- அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவ…
-
- 0 replies
- 487 views
-
-
கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன். Posted on February 5, 2025 by சமர்வீரன் 361 0 தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராம…
-
- 0 replies
- 272 views
-
-
பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் …
-
-
- 26 replies
- 1.9k views
-
-
கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பக…
-
- 0 replies
- 464 views
-
-
Published By: RAJEEBAN 04 FEB, 2025 | 03:35 PM அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீ…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங…
-
- 2 replies
- 337 views
-
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான…
-
-
- 8 replies
- 908 views
-
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்ச…
-
-
- 5 replies
- 685 views
- 1 follower
-
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி January 22, 20250 Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர். …
-
-
- 14 replies
- 1.4k views
-
-
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள். Posted on January 20, 2025 by சமர்வீரன் 52 0 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத…
-
-
- 2 replies
- 498 views
-
-
-
- 1 reply
- 962 views
-
-
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு 28 Dec, 2024 (நமது நிருபர்) கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு …
-
- 0 replies
- 598 views
-
-
நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244
-
- 0 replies
- 477 views
-