வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
கனடாவில் நேற்று நடைபெற்ற 1175 பேர் கொண்ட, பரதநாட்டிய அரங்கு நிகழ்வு! கனடாவின் 150 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு இது நடைபெற்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனை பயணத்தின் இதுவும் ஒரு வரலாற்று பதிவு!இதில் பங்கு பற்றியது தமிழ் பெண்கள் அனைவரும்! இங்கே பிறந்த பெண்கள்
-
- 10 replies
- 1.8k views
-
-
கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமத…
-
- 0 replies
- 607 views
-
-
நாம் சில குறிபிட்ட பொருட்களின் தீவிர வாடிக்கையாளர்களாக (நுகர்வோர்களாக) இருப்போம், அப்பொருட்களின் பயண் எம்மை மிகவும் கவர்ந்து இருக்கும், அவை உணவுப் பொருட்களாகவோ , நொறுக்குத்தீனிகளாகவோ, வீட்டுப் பாவனைப் பொருட்களாகவோ .... எவையாகவும் இருக்கலாம் அவற்றினை பகிர்வதன் மூலம் நாமும் சில நல்ல பொருட்களை மற்றவர்கள் மூலம் அறிந்து அதன் பலனை நாமும் அனுபவிக்கலாம், நாம் பெற்ற பயனை மற்றவர்களும் பெறச் செய்யலாம்.
-
- 134 replies
- 14.5k views
- 1 follower
-
-
-
- 19 replies
- 3.7k views
-
-
வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: [Friday 2017-06-16 21:00] இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 நேரம்: மாலை 5 மணி வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப்…
-
- 0 replies
- 491 views
-
-
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம் லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப…
-
- 0 replies
- 674 views
-
-
திரு.குமார் யோகரட்ணம் “ஒரு நல்ல தலைவன் தனக்கான பாதை எது என்பதை அறிந்து கொண்டு அந்த பாதை வழியே பயணிப்பான் அத்துடன் மற்றவர்களுக்கும் சரியான பாதையை காண்பிப்பான்” யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனான திரு.குமார் யோகரட்ணம். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்து பின்னர் கனடாவில் குடியேறியவர். கல்வி கற்கும் காலத்தில் பகுதி நேரத் தொழில் புரிவதற்காக Swiss Chalet உணவு விடுதியை தேர்வு செய்தார். செய்யும் எந்த தொழிலையும் மிக நேர்த்தியாகவும் நேசிப்புடனும் செய்தால் பல உயரங்களை தொட முடியும் என்பதை தனது அனுபவம் மூலம் உணர்த்தி நிற்கின்றார். பாத்திரங்கள் களுவும் பணியில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை; ஈட்டும் பெரு வணிகமாக வளர்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
கொலை சந்தேகநபரை திருப்பியனுப்ப கனடா நடவடிக்கை கொலை வழக்கின் சந்தேக நபரான இலங்கையர் மீதான வழக்கு, கனடாவின் சட்டத்தின்படி உரிய காலத்துக்குள் முடிவடையாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இலங்கையரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவலோகநாதன் தனபாலசிங்கம் எனும் இலங்கையருக்கு தேவையான பயண ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, கனேடிய குடிவரவு அதிகாரி ஒருவர் கூறினார். 31 வயதான தனபாலசிங்கம், தனக்கு இலங்கையில் ஆபத்து எதுவும் இல்லையெனவும், தான் அகதியாக இருக்க விரும்பவில்லை எனவும் குடிவரவு மற்றும் அகதி சபை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 20…
-
- 0 replies
- 438 views
-
-
நடந்துமுடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் அமோக வெற்றியீட்டியுள்ளார். தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47,213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்ரிவ் கட்சி வேட்பாளரால் வெறும் 9888 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. தங்கம் டெபோனயரின் தந்தை ஓர் இலங்கைத் தமிழராவார். தாயார் பிரித்தானியப் பெண்ணென்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=70526
-
- 11 replies
- 1.5k views
-
-
"உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி “உலக தமிழ் அழகி” 2018 ஜனவரி மாதம் 5ம் திகதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா நேற்று மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட கபாலி பட வில்லன் டத்தோ ரோஸியம் நோர் பெற்று கொண்டார். இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியத…
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம்தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”. மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ளபோதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன்மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம். 1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். (antiguainvestmentcitizenship.com) குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் நேற்றைய தினம் இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 11 மணிவரை நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக…
-
- 0 replies
- 663 views
-
-
உமா நெடுமாறன் வைகாசி 18 இனவழிப்பு நாள் நிகழ்வு ரொறண்டோவில் .......
-
- 0 replies
- 597 views
-
-
தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
கனேடிய பிரதமர் Justin Trudeau தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பத்தால் ஈர்க்கப்பட்டு சிலம்பம் சுற்றிய தருணங்கள்.
-
- 1 reply
- 483 views
-
-
செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்? வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்? எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக்கொண்டே நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியாயின், நிச்சயமாக சுயநிதி முகாமைத்துவம் பற்றியும், அதன் பயன்தொடர்பிலும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.srf.ch/sendungen/rundschau/sozialgeld-fuer-millionaere-tamil-tigers-stress-im-fluechtlingsheim
-
- 0 replies
- 843 views
-
-
தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…
-
- 0 replies
- 716 views
-
-
பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…
-
- 10 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார் தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவுப் பேருரையை கொசோவோ பிரதிநிதி Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார். கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைக்கழகத்தில் (University of California in Los Angeles,) மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி …
-
- 0 replies
- 854 views
-
-
5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம். தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது. …
-
- 0 replies
- 834 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: - கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன் அவர்கள் வருகைதந்து கலந்து கொள்கின்றார். பழ நொடுமாறன் அவர்களின் மகளான இவர் பல வருடமாக ஈழத்தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடக் கூடியது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள். கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க…
-
- 0 replies
- 625 views
-
-
தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம் ( Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிலாம் கனடாவின் வன்கூவரிற்குள் பிரவேசித்திருந்தார். கனடாவில் புகலிடம் கோரியுள்ள நிலாம் சட்ட ரீத…
-
- 0 replies
- 761 views
-