Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செந்தியின் ‘தனித்தலையும் செம் போத்து’ தொகுப்பு நகரமய மாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்து விட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக, செங்குளத்தை இரண்டாகப் பிரித்து/வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை/குட்டைகள் அரிதான வெளியில்/கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப்/பெரும் களிப்பூட்டியிருக்கலாம் என்ற ‘கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள்’ கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற காமம் குறித்த கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட உணர்வை இளவயதில் எல்லோரும் அனுபவித்தவர்கள்தான் என்ற முறையில் சரியான வார்த்தைகளால் அவை சொல்லப்பட்டிருக்கின…

    • 0 replies
    • 812 views
  2. சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னுரை சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னுரை சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - முன்னுரை சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞர் அணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் - 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈழத்தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும், தேசிய இனப் பிரச்சினை பற்றிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கோட்பாடுகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கியதாகும். இலங்கையில் தமிழீழத்திற்கான அரசியல் போராட்ட வரலாறு இலங்கை சிங்கள…

    • 0 replies
    • 807 views
  3. தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது. இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் …

  4. இந்த உலகம் எப்பொழுதுமே அப்படியே இருப்பதில்லை, அது காலம் காலமாக மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டேஇருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு மூலப்பொருளாக உழைப்பும் உழைப்பு சுரண்டலும் இருந்துகொண்டே இருக்கின்றது. அது சுற்றுப்புறச்சூழலில் மட்டும் அல்ல சமூகம் மற்றும் தனிமனித உறவுகளுக்குள்ளும் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. தந்தை என்ற உறவே தனி சொத்துடமை என்னும் உழைப்பு சுரண்டலின் வித்தாக அமைந்தது. அப்படி சீனாவின் கிராமம் ஒன்றி காலம் முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்து போன அந்தப் பெண்ணை குத்தகைபணம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டிக் களவாடி சென்றான் அந்தக் கிழட்டு பண்ணையார். மற்றவர்களிடம்இருந்து தான் சுரண்டிய சொத்தை யாருக்க கொடுப்பது எனத் தெரியாமல் இரந்த அவனுக்கு இந்த இளம் பெண் பிள்…

  5. சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது. சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி. சிதிலமாக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்டது மாயக்குதிரை சிறுகதை மூலம் கவனிக்க வைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ்நதி. போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலிமையான தனது எழுத்தின் மூலம் மனிதம் பேசியிருக்கிறார் தமிழ்நதி. ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்…

  6. Started by Athavan CH,

    Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது" Pen….. People….. Performances எனும் Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது. அரங்கு நாடகம் ஆற்றுகைகள் குறித்த பல்வேறு தகவல்கள், குறிப்பாக இந்தியாவின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரங்க நிகழ்வுகளின் பதிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் பதிவுகளோடு பங்குபற்றுனர்களது பகிர்வுகளும் காத்திரமான மதீப்பீடுகள் சிலவுமாக அமைந்துள்ள இந்நூல்இ வழமையான ஆவணப்படுத்தல் அல்லது பதிவு முறைமைகளிலிருந்து விலகி நிகழ்விற்கேற்ப எளிமையாகவும் இயல்பாகவும் சுவாரஷியமாகவும் தகவல்களை பரிமாறி நிற்கின்றது. இந்நூல்இ ஒருபுறம் சமகால உ…

    • 0 replies
    • 804 views
  7. காடு நாவல்: ஒரு வாசிப்பு. - சுயாந்தன் நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் …

  8. உலகம் - நூல் அறிமுகம் தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வெளியீடு: பன்மைவெளி, | தஞ்சை | | பக்கங்கள்: 112 | விலை: ரூ.60 | கிடைக்குமிடம்: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 44-1, பசனை கோயில் தெரு,முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. http://www.arunabharathi.blogspot.com/

  9. எப்போது விடுதலை? July 26, 2020 / த.ராஜன் ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ …

  10. வன்னி வரலாறும் பண்பாடும் என்ற நூலின் அறிமுக விழா பாரிசில் எதிர்வரும் 18.01.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10. மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரை 5 RUE PIERRE L'ERMITE 75018 PARIS (லா சப்பல் மெத்ரோ நிலையத்திற்கு அருகில் ) என்றமுகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள வர்கள் தொர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இல. 0652176260

  11. திசையறிந்து பயணித்த தூரிகை – அன்பாதவன் 113 Views நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன்வரலாறு நூல் குறித்து. தோழர்! தொடக்கத்திலே உங்கள் கரங்குலுக்கி தோளணைத்து வாழ்த்துகிறேன். வாழ்வின் கறுப்பு பிரதேசங்களையும் ஒளிர்ந்த காலங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள் புகழேந்தி! ஒரு சாமான்யனின் தன் வரலாறு எவ்விதத்தில் வாசகனுக்கு உதவும்…? சுயசரிதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்ற பல கேள்விகளோடு தான் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூலை வாசிக்கத்தொடங்கினேன். வாசித்து முடிக்கையில் தெளிந்தேன். இது கதையல்ல வரலாறு; சாதாரணன் ஒருவன் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் வாழ்வின் ஏற்ற …

  12. நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன் காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி. வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்…

  13. [size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size] வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுத…

    • 4 replies
    • 793 views
  14. ஒரு உளவாளியின் கதை உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல. தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க…

  15. கவிதைத் நூலைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை! ---------------------------------- உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை கருணாகரன் [size=4]நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றி…

    • 2 replies
    • 791 views
  16. ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு! தொகுப்பாசிரியர்- தோழர் ரகுமான் ஜான் காலம்- 17 ஆகஸ்ட் 19 . சனி -மாலை 3 மணி இடம்- Trinity Centre Eastham -London ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டம் அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாகத் தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொடர்ச்சியாக அர்சியல் உ…

  17. பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை' -எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவேபிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும்எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும்எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக்காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும். -சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில்புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர். கருணாவின் பிளவு உருவாகிய2004 வரை, 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின்முதலமைச்சரும் ஆகியிருக்கின்றார். -சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்துகைவிலங்கிடப்பட்டு திருக…

  18. சில வருடங்களிற்கு முன் எனது ஆசரியர் ஒருவர் இந்த புத்தகத்தை படித்து பார் பின்னர் உலகில் நடக்கும் பல சம்பவங்களை நீ வேறொரு கண்ணால் பார்ப்பாய் என்றார். இதையே இந்த புத்தகத்தை படிக்காதவர்களிற்கும் நான் கூற விரும்புகின்றேன். இந்த புத்தகம் தமிழில் வெளிவரவில்லை. யாராவது இதை மொழிபெயர்க்க வேண்டும். பூமியில் நடைபெறுகின்ற இயற்கையான/செயற்கையான அழிவுகள் அனைத்துமே யதார்த்தமாக நடந்துவிடுவதில்லை. இயற்கை அழிவுகளை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கின்றது. அதனை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு. இந்த பணத்தாசை பல மக்களின் உயிரை பலி கொடுக்கவும் தயங்காது. இந்த கூட்டம் உலகத்தின் அதிகார நாற்காலியில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. ஈராக் போரின் காலத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு ஆயு…

  19. இருள் தின்ற ஈழம் தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து... 1. கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும…

  20. நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ யதீந்திரா - –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலர…

  21. ‘வீணையடி நீ எனக்கு’ : கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்தெழுந்த முதல் நாவல் March 26, 2021 — பேராசிரியர். செ.யோகராசா — ‘பல்கலைக்கழகத் தமிழ் நாவல்கள்” என்ற நாவல் வகைப்பாட்டினைச் செய்யுமளவிற்கு ஈழத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களைக் களமாகக் கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட நாவல்கள் வெளிவந்திருப்பதனை தீவிர வாசிப்புள்ள ஆய்வாளர்கள் அறிந்திருப்பர். இவ்விதத்தில் இவ்வேளை, பேராதனைப் பல்கலைக்கழகம் (கங்கைக்கரையோரம் – செங்கை ஆழியான், நிர்ப்பந்தங்கள் – கோகிலா மகேந்திரன், மிட்டாய் மலை இழுத்துச் செலலும் எறும்பு – ராஹில், உனக்காகவே வாழ்கிறேன் – கமலா தம்பிராஜா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (சந்தனச் சிதறல்கள் – கோகிலா மகேந்திரன்), கொழும்பு பல்கலைக்கழகம் சார்ந்தும் ஒரு நாவல் வெ…

  22. தமிழகத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டுவந்த புத்தகமான ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்” புத்தகம் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள 338 London Road, Mitcham, London CR4 3UD எனும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க பல புலம்பெயர் முக்கியஸ்தர்கள், ஊடகவியளாலர்கள்,ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு இப்புத்தகத்தைப் பற்றி உரையாற்ற உள்ளார்கள். புலம்பெயர் ஊடகவியலாளர்கள் புத்தகத்தை வெளியிட புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட இருந்த அப்பாவி தமிழர்களை தன்னுடைய அசுரத்தனமான துணிச்சலால் பல முறை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற காரணமாக இருந்த…

  23. அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது. 'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்ப…

    • 0 replies
    • 775 views
  24. சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள். கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.