நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும். இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்ப…
-
- 0 replies
- 608 views
-
-
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி 47 Views கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல், கதையல்ல காவியம். ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாள…
-
- 0 replies
- 737 views
-
-
'மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை' நூல் அறிமுகம் ரவி (21.10.06 அன்று பேர்ண் (சுவிஸ்) இல் நடந்த “திரைப்பட இலக்கிய விழா” நிகழ்ச்சியில் இந் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்டது இது.) “கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன். இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
கலாதீபம் லொட்ஜ் சக இனமொன்றின் மீது தேவையற்ற காழ்ப்புணர்வுடன் முதல் நாவலை எழுதிய ஒருவர், தனது அடுத்த நாவலில் மீண்டு வருவது என்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அந்த வகையில் வாசு முருகவேலுக்கு 'கலாதீபம் லொட்ஜ்' மூலம் சாத்தியமாகியிருப்பது சற்று வியப்பாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிலிருந்து, போர் நிமித்தம் கொழும்புக்கு வந்து தங்கி கனடாவுக்கு வந்து சேரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையை, சிறுவன் சந்திரனின் பார்வையிலிருந்து இந்தப் பனுவல் பேசுகிறது. சாதாரண பாதைகளினால் வரமுடியாது, கப்பலினால் திருகோணமலைக்கு சென்று, அங்கிருந்து கொழும்புக்கு வந்து லொட்ஜியில் தங்கிநிற்கும்போது சந்திரனின் அனுபவங்களினூடாக 90களின் பிற்பகுதியிலான ஒரு காலம் இங்கே பேசப்படுகின்றத…
-
- 0 replies
- 505 views
-
-
உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம். உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூல…
-
- 0 replies
- 580 views
-
-
எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…
-
- 0 replies
- 699 views
-
-
அவுஸ்திரேலியா வாழ் ஈழத்தமிழரான மு. சின்னத்துரை எழுதிய 'ஈழத்தமிழர் அடையாள அழிப்பும் பின்னணியும்' என்ற நூல் வெளியீடு எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு டேவிற் வீதியில் அமைந்துள்ள கலைக்கோட்டம் அரங்கில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய பணிப்பாளர் தே. தேவானந் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிறப்பு விருந்தினராக வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொள்வர். நூல் முதல் பிரதியை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி. கானமயில்நாதன் வெளியிட்டுவைக்க தேசமாணி லயன் எஸ்.ஜெ. செல்வராஜா பெற்றுக்கொள்வார். நூலின் ஆய்வுரையை கொழும்பு இதழியல் கல்லூரி விரிவுரையாளர் சி…
-
- 0 replies
- 561 views
-
-
லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை. எஸ்.வாசன் - நூல் அறிமுகம் நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிட்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாக கொண்டு அம்மண்ணின் மைய அரசியல…
-
- 0 replies
- 768 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடுத்தபடியாக கல்கி எழுதிய நாவல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சிவகாமியின் சபதம் நாவல்தான். அந்த நாவலின் கதையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாமா? 1940களில் கல்கி இதழில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்த இந்த நாவல், பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிட்சுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டது. இந்த நாவலின் முக்கியமான பாத்திரங்கள்: பரஞ்சோதி, ஆடலரசி சிவகாமி, அவளுடைய தந்தையும் பல்லவ நாட்டின் தலைமைச் சிற்பியுமான ஆயனர்,…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் கைவண்ணத்தில் உருவான கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா 05.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இல. 62, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை, கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு தே.க.இ.பே. யாழ் பேரவை செயலாளர் மு.இராசநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான கௌரவ எம். திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையையும், வரவேற்பு மற்றும் அறிமுக உரையை சோ.தேவராஜா (தே…
-
- 0 replies
- 642 views
-
-
2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம் இமையம் “எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த …
-
- 0 replies
- 5k views
-
-
நீதித் துறையில் பயணித்த ஒரு போராளியின் வாழ்க்கை! பீட்டர் துரைராஜ் 22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார். மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவ…
-
- 0 replies
- 606 views
-
-
பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கு நன்றி நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவ…
-
- 0 replies
- 477 views
-
-
ரிச்சர்ட் டாக்கின்ஸ் - கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி | கனலி அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய் திண்ணப் பேச்சாகி சுருங்கி விடும். சரியாக சமைக்கப்பட்ட சமயத்தின் சேவைகள் மனிதனை அறிவுசார் ஆதிக்கத்தின் பலி பீடத்திலிருந்து மீட்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புகழ் பெற்ற “சுயநலம் பிடித்த ஜீன்” புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து, முழுமையாக நாத்திக வாதத்தை முன்வைக்கும் “கடவுள் என்னும் மயக்கம்” 2006-இல் வெளிவந்தது பின்புலம் பத்தொன்பதாம் நூற்றாண்ட…
-
- 0 replies
- 387 views
-
-
ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள London Tamil Book Center இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். Mobile / WhatsApp : +44 7817262980
-
- 0 replies
- 510 views
-
-
நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல…
-
- 0 replies
- 565 views
-
-
மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று வெளியிடப்பட்டது. வவுனியா கோயில்குளம் அருளகத்தில் நிகழ்வு நடைபெற்றது. நாவல் வெளியீட்டின் பின்னர், கோயில்குளம் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களிற்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சு.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிரேஸ்ட சட்டத்தரணி தயாபரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/16/மூங்கிலாகும்-முட்புதர்-நாவல்-வெளியீடு.html
-
- 0 replies
- 559 views
-
-
தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்.! மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் அதன் முதிர்நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலைத் தொல்காப்பியர் ஓர் இலக்கியவியல் கல்வியாகவே முன்வைக்கின்றார். கவிதைகளின் உள்ளடக்கம், வடிவம், உத்திகள், மெய்ப்பாடு முதலான இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகப் பேசுகிறது. பொருளதிகாரச் செய்யுளியலில் இடம்பெறும் நோக்கு என்ற உறுப்பு இன்றைய இலக்கியத் திறனாய்வின் அடிப்படையில் இயங்குவதே. ஆக இலக்கிய இலக்கணப் பழமை மட்டுமல்லாமல் இலக்கிய …
-
- 0 replies
- 1.8k views
-
-
`க்ரியா’ தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்! சு. அருண் பிரசாத் ‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான் இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருக்கிறது! சமூக மாற்றங்கள் அனைத்தும் மொழியிலிருந்தே தொடங்குகின்றன. எந்த ஒன்றின் சமூக அடையாளமும் அது என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் சமூக இயக்கத்தின் அடிப்படை மொழி! ஒரு சமூகம் எத்தனை தான் மொழி, பண்பாட்டு ரீதியில் மேம்பட்டிருந்தாலும், அது போதாமைகளைக் கொண்டிருப்பது இயல்பு. ஆனால், அது காலப் போக்கில் களை…
-
- 0 replies
- 505 views
-
-
பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய 'வடஇலங்கையில் சுற்றுலாவும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும்' என்ற ஆங்கில மொழிமூல நூல் வெளியீட்டு விழா நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் கிருஷ்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ளது . உலகில் மிகமுக்கிய துறையாக வளர்ச்சிபெற்றுவரும் சுற்றுலாத்துறையின் ஊடாக வடஇலங்கையும் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் சுற்றுலாப் பயணிகள் இன்று பார்க்க வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றின் வரலாற்றுப் பின்னணிகள் படங்களுடன் விளக்கி எழுதப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி வெளிவரும் இந்நூலின் வெளியீட்ட…
-
- 0 replies
- 605 views
-
-
எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும். தன்னோடு மட்டும் பேசப்படுகின்ற விடயங்களை, தன்னால் மட்டும் பேசப்படுகின்ற சந்தர்ப்ப விடயங்களை, எதோ ஒரு காலத்தின் வலிகளை, கனவுகளை, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வசீகரங்களை,இழப்புக்களை, நாளை மீதான எதிர்மறைகளை இப்படியாக ஒவ்வொன்றையும் காவிச்செல்லாமல் அந்தந்தக்கணங்களில் இறக்கிவைத்த பின் …
-
- 0 replies
- 554 views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நாவலின் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்லீடர் இணையத்தில் தொடராக வெளியிட்டுவைக்கப்பட்ட நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் தமிழருவி மணியன் தலைமையிலும் தமிழகத்தில் வைகோ தலைமையிலும் நடைபெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 19 – 06 -2016 அன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இது நாவலின் முதற் பாகம் எனவும்இ இரண்டாம் பாகம் கிளிநொச்சியிலிருந்து இரணைப்பாலை வரையுமான போரை மையமாகவும், மூன்றாம் பாகம் இரணைப்பாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுமான போரை சித்திரிப்பதாக அமையும் எனவும் இந்த நாவ…
-
- 0 replies
- 791 views
-
-
நேர்காணல் - என்.சரவணன் 1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்ஞை என்பவற்றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளியிலும் பலர் ஆதரவாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல. ஏப்ரல் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்களுக்கு அற…
-
- 0 replies
- 675 views
-
-
-
- 0 replies
- 498 views
-