Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. Started by syamanthaga,

    தனிமை சிலருக்கு முடிவில்லா வெற்று மனப்பயணங்களுக்கு இட்டுச்செல்லும் அற்பதருணம்.. ஆனால் உண்மையில் தனிமை ஓர் நிகரற்ற பொற்தருணம்! ஆம்! தனிமை நம் ஆழ்மனதின் திறவுக்கோல்! நம்மை நாமே உரசிப்பார்க்கும் உரைக்கல்! மனத்தை பேச வைக்கும் நரம்பில்லா நாக்கு! கருவறையின் நிம்மதியை உணரச்செய்யும் தாய்!! தெளிவென்னும் திசைக்காட்டும் கலங்கரை! பேசா ஆசிரியன்!! தனிமையை ரசியுங்கள்!! தனிமையால் நல்வழிப்படுங்கள்!!

    • 1 reply
    • 766 views
  2. தேரடியில் காலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா உன் காலடியில் நானிருந்து கண் சொரிந்த போதினிலே கண்டு மனம் இரங்கவில்லை முருகா கண் திறந்து பார்க்கவில்லை முருகா என்னை கண்டு மனம் இரங்கவில்லை முருகா நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு தொல்லையற்று போகும் என்பார் முருகா நான் வெள்ளை மணல் மீது உருண்டு வேலவனே என்று அழுதேன் துள்ளி வந்து சேரலையே முருகா வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே வேறிடத்தில் நீ ஒழித்தாய் முருகா நீ ஏறி வந்த தேர் இருக்கு இழுத்து வந்த வடம் இருக்கு எங்கையடா போய் ஒழித்தாய் முருகா செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில் உந்தன் அருள் வேண்டுமடா முருகா நீ வந்திருந்து பூச் சொரிந்தால் வாசலிலே கை அசைத்தால் வல்ல பக்தர்கள் வெல்லு…

    • 12 replies
    • 1k views
  3. வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடந்த கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. அடியார்களின் அரோஹரா கோசத்தின் மத்தியில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் கொடியை ஏற்றி வைத்தார். காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தனியார் மினி பஸ்கள் மற்றும் இலங்கை போக்ககுவரத்து சபையின் பஸ்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுபட்டன. http://www.malarum.com/article/tam/2015/08/17/11404/தெல்லிப்பழை-துர்க்கையம்மனுக்கு-கொடியேற்றம்-.html#sthash.9DNNsZ1Q.dpuf

  4. வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பகபூர்வமாக இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலய திருவிழா தேர்தல் காலத்தில் இடம் பெற்றமையால் அரசியல்வாதிகளான மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் வட மாகாண ஆளுநர் பளிகக்காரா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ.நடராஜாவும் கலந்துகொண்டார்கள். t: http://www.malarum.com/article/tam/2015/08/13/11375/மாவிட்டபுரம்-கலந்துசுவாமி…

    • 5 replies
    • 1.9k views
  5. இமயமலையில் மறைந்து இருக்கும் மகா யோகிகளின் புனித பூமி[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 11:01.54 PM GMT +05:30 ] இமயமலையின் பனி குவியலுக்குள் பல கோடி ரகசியங்கள் புதைந்துள்ளன. அவைகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையல்ல. மனிதனின் விஞ்ஞான சக்தியையும் மீறியவையாக அவைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கயான்கன்ஜ் . கயான்கன்ஜ் என்பது இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றின் படி மிகவும் பழமையான நகரமாகும். இந்நகரம் இமயமலையில் மறைந்துள்ளதாகவும் இந்நகரத்தில் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. இந்த நகருக்கு சம்பலா, சங்கிரிலா, சித்தாஸ்ரம் என பலவிதமான பெயர்கள் உள்ளன. எனினும் இந்த நகரம் எங்குள்ளது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நகரத்தை பற்றிய செய்திகள் பல பு…

    • 3 replies
    • 6.2k views
  6. இந்து மதத்தில் பற்றுள்ள வெள்ளையர்கள்…. August 05, 20153:08 pm ” தீட்சை பெறாவிட்டாலும் பிறக்கும் குழந்தை இந்து ஆகவே பிறக்கும் ” அதனாலே கிறிஸ்துவன் ஞானஸ்தானம் செய்து கிறிஸ்தவ பிள்ளை ஆகின்றான். இஸ்லாம் சுன்னத் செய்து இஸ்லாமிய பிள்ளை ஆகின்றான் இந்துக்களுக்கு இவை அவசியம் இல்லை காரணம் பிறவிலேயே நாம் இந்து இந்து மதத்தின் பண்பாடு மறக்காமல் இந்து மதத்தை பாதுகாத்து வரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்…! http://www.jvpnews.com/srilanka/119578.html (பொட்டு வைக்க இந்து பாரம் பரியத்தை மறக்க முற்படும் உலக வாழ் ஒரு சில இந்துக்குடும்பங்களின் முன்......)

    • 0 replies
    • 473 views
  7. மதம் என்றூ சொன்னாலும் மதம் இல்லா மதம் அன்பே மதம் என்று சொன்னாலும், நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. 8. இயற்கையாய் தோன்றியவற்றில் …

    • 0 replies
    • 925 views
  8. தாலியும் குலக்குறிச் சின்னமும் ஞா. ஸ்டீபன் தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது. தற்கால வழக்க…

  9. மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று …

  10. உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்…

    • 0 replies
    • 2.7k views
  11. நான் ஏன் இந்துவாகினேன்? -மஹாதேவா தாஸ் (ஒரு ஜெர்மனியரின் உண்மைக்கதை ) [Thursday 2015-06-11 22:00] என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன். சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமா…

    • 7 replies
    • 1.3k views
  12. மறுபேச்சின்றி கீழ்ப்படிதல் - விவேகானந்தர் யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது…

    • 15 replies
    • 4.4k views
  13. வேதங்கள் செம்பரிதி இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம். அப்படியானால் ‘வேதங…

    • 4 replies
    • 14.5k views
  14. உண்மையை உணர்வதற்கு மனமற்ற பரிசுத்த நிலை கோரப்படுகிறது. மனத்தின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் உண்மையை உணர்வது இயலாது என்பது நம் ஞானச் சான்றோர்களின் கூற்றாகும். நடைப் பயிற்சியைப் போல யோகச் செயல்முறைகளும் உடம்பை ஓம்புவதற்கே. ஆனால் உண்மையை உணர்வதற்கு ‘மனமிறத்தல்’ அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின்தியானம்” என்பார் தாயுமானவர். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர். “மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்பார் அருணகிரியார். இவ்வாறு இவர்கள் கூறுவதற்குக் காரணம் மனமானது நினைவுகள், அனுபவம், அறிவு இவற்றின் மொத்த உருவான நான், எனது என்னும் செருக்குகளுக்கு இடமாக இருப்பதே. மனம் ஆடி ஓய்…

  15. குரு பெயர்ச்சி பலன்கள் வணக்கம்! 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான்,கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை. சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறி…

  16. மெளனிப்பு ஏன்..? பாசமான தந்தை, தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கே மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும், ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவத…

  17. பெரியாரும் பிராமணர்களும் ஆர். அபிலாஷ் தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்…

  18. காதல் Vs திருமணம் ஒரு ஞானியை அணுகிய சீடன், 'காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன'வெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது..!" என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.... சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜா…

  19. Started by karu,

    நான் சிறு வயதில் எழுதிய கவிதையொன்றை பகுத்தறிவுப் பகுதியில் உங்களோடு பகிர்கிறேன் பரமனைத் தேடி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்பி விட்டான்-நாம் பாலைக் கறந்ததைக் கல்லினில் வார்த்துப் பரமனைத் தேடுகிறோம் வேலைக் குறித்தெறி தோழ இம் மூட விழல்களைச் சாய்பதற்கே-உன் வாலைப் பருவம் எதற்கு விழித்தெழு வாய்மையுரைத் திடுவோம் எல்லையிலாப் பிரபஞ்ச இலக்கணம் இன்றவன் கண்டுவிட்டான்-நாம் கல்லதன் மீதினிற் காசையெறிந்து கடவுளைத் தேடுகிறோம் தொல்லையிலாது சுகமுற வாழத் துறை பல கண்டு விட்டான்-நாம் செல்லக் கதிர்காம யாத்திரை ஏறிச் செடில்தனில் தொங்குகிறோம். தத்வமஸி எனச் சாற்றிய மாமறை தன்னை மறந்து விட்டோம்-பல வித்தைகள் செய்திடுவோர்தனை நம்பிடு வீணர…

    • 0 replies
    • 575 views
  20. காட்சிக்கேது எல்லை என்னிலும் மேலொரு சக்தி இருப்ப துறுதி யென்றாகிடில் - அஃதை பின்னமிலாதுடன் பற்றி - அது பேயதென்றாலும் பிரமமென்றாலும் பொன்னடி போற்றிடுவேன் யான் - எந்தப் போழ்திலும் அஃதின் நினைவகலாதே சின்னத்தனங்கள் விடுத்தே - என்றும் சிந்தையினை அஃதின் மீதினில் வைத்தே வாழுவன் யான் என நெஞ்சில் - ஒரு வன்மம் எனக்கு இருந்தது கண்டீர் நாழும் பொழுதும் இதுவே - நான் நாடிய தேடிய உண்மை அதுவே பாழும் மனதினில் என்றும் பணம், புகழ், நாரியர் ஆசையை வென்றும் ஆழும் பிரமத்தியல்பை - நன்கு ஆழவுணர்ந்து அதில் மனம் போக்கின் முத்தியெனப் பல பேர்கள் முழக்கமிட்டே பல சொல்லுவார்கள் கற்றிடலாமதை இன்றே - உடன் கண்டிடலாமக் கடவுளை நன்றே என்று இருந்திடுங்காலை இவன் ஒருவன் வந்து …

    • 0 replies
    • 574 views
  21. வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழாவின் இறுதிநாளான தீர்த்ததிருவிழா அன்று 'கண்டறியா விழா' என்று அறியப்படுகின்ற இந்திரவிழா, திங்கட்கிழமை (04) கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஊறணி தொடக்கம் ஊரிக்காடு வரையிலான 03 கிலோமீட்டர் தூரத்துக்கு வீதியின் இரு மருங்கிலும் வாழைகள், மூங்கில்கள் கட்டப்பட்டு பிரமாண்டமான மின்னலங்காரங்களுடன் மக்கள் வெள்ளம் திரள 08 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன. ஊறணி தீர்த்தக் கடற்கரையில் கடலுக்குள் மேடை அமைக்கப்பட்டும் குச்சம் ஒழுங்கைக்கு முன்னால் தொங்குபாலம் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், நெடியகாட்டில் பிரமாண்ட பிள்ளையார் உருவமும் வேம்படியில் சிவனும் வல்வெடித்துறை சந்தியில் பிரமாண்ட சி…

    • 0 replies
    • 1.3k views
  22. பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 ஜோதிலிங்கங்கள் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தார். சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்), மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீ சைலம் (ஆந்திரா), மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்), ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்), வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்), பீமாநாதேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்), இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு), நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்), விசு…

    • 1 reply
    • 812 views
  23. இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும் மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில் கிடைப்பத…

    • 0 replies
    • 741 views
  24. வர்ணமும் ஆஸ்ரமமும் செம்பரிதி அறிமுகம் பண்டைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நான்கு அடுக்குகளைக் கொண்ட இரு வகைச் சமூகப் பகுப்பமைப்பு என்று வர்ணாசிரம தர்மத்தைக் கூறலாம் இங்கு வர்ணம் என்பது வர்க்கத்தையும், ஆஸ்ரமம் என்பது தனிமனித வாழ்வுநிலையையும் குறிக்கின்றன. இந்த இரட்டைக் கோட்பாடு நடைமுறை இந்து சமயத்தின் தூண்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. நான்கு வர்ணங்கள் இவை- 1.பிராமண 2.க்ஷத்திரிய 3.வைஸ்ய 4.சூத்திர நான்கு ஆஸ்ரமங்கள் இவை 1.பிரம்மச்சரியம் 2.கிருஹஸ்தம் 3.வனபிரஸ்தம் 4.சந்நியாசம் ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்ற…

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.