சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
யோகாவும் ஏமாற்று வித்தையும் : இராமியா 06/23/2015 இனியொரு 35 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மூர்மார்க்கெட் கலகலவென்று இருந்த சமயம். ஒரு நாள்அந்த வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். ஒருவர் அறுந்த பிளாஸ்டிக் செருப்பை ஒட்ட வைக்கும் இரசாயனப் பொடி என்று கூவி விற்றுக் கொண்டிருநதார். அப்பொழுது நான் அணிந்திருந்த பிளாஸ்டிக் செருப்பு அறுந்து இருந்தது. அவா¢டம் அதைக் கொடுத்துச் சரி செய்யச் சொன்னேன். அவரும் தன்கையில் இருந்த இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அந்த இரசாயனப் பெடியில் (!) தோய்த்துச் செருப்பின் அறுந்த பாகத்தை இணைத்துப் பழுக்கக் காய்ச்சிய அதன்மேல் வைத்த உடன் அறுந்த பாகங்கள் ஒட்டிக் கொண்டன. செருப்பு நேரான மகிழ்ச்சியில் அந்த அதிசயப் பொடியை இரண்டு பொட்டலங்கள் வாங்கிக் கொ…
-
- 2 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
முன்குறிப்பு: இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது. ============================================= உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு. எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா? இதற்காகப் பலரிடம் சண்டை போட்டதுண்டு. பலர் சொன்ன சமாதானங்கள் எதிலும் நான் உடன்பட்டதில்லை. பெயர் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளம்.; அவனது அந…
-
- 0 replies
- 3.5k views
-
-
மனைவி ஸ்டெபானி, கைக்குழந்தை வயாத்தை அந்த மருத்துவமனையில் நடுநிசியில் விட்டுவிட்டு மனமில்லாமல் பிரிந்தார் ஆஸ்டின் பிளாகர். இத்தம்பதிக்கு வயாத் மூன்றாவது குழந்தை. குழந்தையின் இதயத்தில் இடது பகுதி இல்லை என்பது வயிற்றிலிருந்து கருவை ஸ்கேன் செய்த ஆறாவது மாதத்தில் தெரிந்தது. பொதுவாக, இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு வலி மறப்பு மருந்துகளைக் கொடுத்து, இயற்கை அதைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்வரை பராமரிப்பார்கள். குழந்தை அப்படியே பிறக்கட்டுமா அல்லது கருவைக் கலைத்துவிடலாமா சொல்லுங்கள் என்று மருத்துவமனையில் கேட்டார்கள். ஒரு நாள் முழுக்க முடிவுக்கு வர முடியாமல் தவித்த ஸ்டெபானி, “கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த ஜீவனை எனக்குள் அனுப்பியிருக்கிறார். அது பிறக்கட்டும், பார்த்துக்கொள்ளல…
-
- 0 replies
- 583 views
-
-
வாசிப்பு முக்கியம் எழுதியது: சிறி சரவணா நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும். வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா? (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2015, 11:09.06 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. சுவிஸின் பெர்ன் (Bern) மண்டலத்தில் சைவநெறி கூடம் என்ற மிகப் பிரமாண்டமான சிவன் கோவில் அமைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்த மத கோவில்களில் ஒரு சில கோவில்களில் மட்டும் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு, பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெர்ன் மண்டலத்தில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று என்பது மிகச்சிறப்பாகும். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்கள் பூசாரிகளாக தேர்ந்த…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிகினி வா. மணிகண்டன் சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்டின் நகரத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐடிக்காரன் அமெரிக்கா சென்று வந்தால்தான் மரியாதை என்று நம்பிக் கொண்டிருந்ததால் அதிபயங்கரமான சந்தோஷத்தில் இருந்த காலம் அது. டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பகல் முழுவதும் உள்ளூர் ஆட்களோடு சுற்ற வேண்டும் என்பதும் இரவில் எங்கே செல்கிறேன், எப்பொழுது அறைக்குத் திரும்புகிறேன் என்பதெல்லாம் யாருக்குமே தெரியக் கூடாது என்பதும் என்னுடைய சதுரங்க வேட்டை விதிகளில் முக்கியமானவை. பக்கத்தில் இருப்பவனுக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களைச் செய்வதில்தான் அலாதி இன்பம் இருக்கி…
-
- 0 replies
- 875 views
-
-
DR. சிவயோகன்:- யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்றனவென் பிரபல வைத்திய நிபுணர் சிவயோகன் தெரிவித்துள்ளார். யாழ்.மறைக்கல்வி நிலையத்தினில் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டினில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர் சமூகப் பிறழ்வு நடத்தைகள் யுத்தத்திற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன. யுத்தமும் யுத்தத்தின் பின்னரும் உள்ள சமூக சூழலும் எவ்வாறு இத்தகைய பிறழ்வுகளை கூர்முப்படுத்தியுள்ளன என்பது தொடர்பில் முறையான ஆய்வு தேவை. யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்ற…
-
- 0 replies
- 382 views
-
-
-
.அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு …
-
- 1 reply
- 1.4k views
-
-
இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்…
-
- 23 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 909 views
-
-
மிக அருமையான கலந்துரையாடல்: வாழ்க்கையில் வெற்றிபெறுவது = ? மென் திறன்கள் (soft skills) = ? உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல் (motivation) = ? உளப்பகுப்பாய்வினை திறன்கள் (interpersonal skill) = ? விருந்தினர் பக்கம் | எழுத்தாளர் மற்றும் மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர், சோம வள்ளியப்பன் | வைகாசி 07, 2015 | SunTv www.youtube.com/watch?v=fneAQFn2YLs&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=14 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
-
- 5 replies
- 1k views
-
-
மாற்றம் ஒன்றே மாறாதது.. http://youtu.be/y2Dp-zEGIZE பெரும்பாலான வீடுகளில் நடப்பவற்றை நகைச்சுவையாக, அழகாக சொல்லியுள்ளார், திருமதி.பாரதி பாஸ்கர்.. தந்தையின் அருமையை உணர்கிறேன்!
-
- 5 replies
- 2.2k views
-
-
ஓதுவோரும் ஊதுவோரும் ------------------------------------------- அன்று . . . . தகவல் பரிமாற்றமானது சமூகங்களை இலகுவாகத் தொடர்புபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திராத காலங்களில் ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகம் சார்ந்த விடயங்களை (சரி, தவறு என்ற பாகுபாடின்றி) முழுமையாக ஏற்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விடயங்கள் அந்தந்த சமூகத்திற்கு சமூக முன்னோடிகளாக கருதப்பட்டவர்களால் நேருக்கு நேராக கதைகள், மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், வில்லுபாட்டுக்கள், போன்ற மூலங்களின் ஊடாக தொடர்ச்சியான முறையில் சொல்லபட்டு (ஓதப்பட்டு) வந்தன. இந்த ஓதுவோர்கள் அறிந்தோ அறியாமலோ தமது சமூக, பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாம் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை ‘குண்டுச் சட்டிக்குள் குத்திர…
-
- 0 replies
- 495 views
-
-
உடன்பாடும் முரண்பாடும் -------------------------------------- மனம் போல் தான் வாழ்க்கை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மனத்தின் தன்மை அதன் செயற்பாடுகளை எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை தரும் வகையில் செயற்படுத்துவது எப்படி? மனத்தின் இரண்டு நிலைகள் உடன்பாடும் முரண்பாடும் தான். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் உடன்படுவோம் அல்லது முரண்படுவோம். உடன்பாடும் முரண்பாடும் வாழ்வியல் நகர்வின் சக்கரங்கள். உடன்பாடு மட்டுமே எமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. அப்படியானால் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது? ஒரேஒரு வழி இது தான். ஒரு விடயம் உடன்படக்கூடியதாக இருப்பின் உடன்படுங்கள். முரண்பாடாக இருப்பின் முரண்படுங்கள். முரண்பாட்டுக்கு எதிரான முரண்பாடும் மறைமுகம…
-
- 0 replies
- 219 views
-
-
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி! நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய - ஏன் அவமானகரமான - உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. தெருவில் போகிற ஆளைப் பார்த்து, ‘‘ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக் கிறாய், மகிழ்ச்சியாக இரு’’ என்று ஆலோசனை கூறும் ஆளும் அல்ல. காரணம், அப்படி எப்போதுமே நடக்காது. அதே வேளையில், நான் மகிழ்ச்சியற்ற மனி…
-
- 0 replies
- 687 views
-
-
நம் சமூகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சதவீதமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. கருவறையில் தொடங்கும் பாதுகாப்பின்மை பெண்களுக்குக் கல்லறைவரை தொடரவே செய்கிறது. பிணமான பிறகும் வல்லுறவுக் குள்ளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் இந்தச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடல்களாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள் என்பதற்கு சாட்சி. இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு அமைச்சரவை சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளியீட்டுத் தகவல் நம்மை திடுக்கிட வைக்கிறது. ‘இந்தியாவில் ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். 34 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். மேலும் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்க…
-
- 0 replies
- 732 views
-
-
ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் அதை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? செல்பேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது நிச்சயம். செல்பேசி இல்லையென்றால் தேவைக்கதிகமாக பயப்படுவது ''நோ மொபைல் போன் போபியா'' என்று அமெரிக்காவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2019-ல் 651 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்துவிடும் என்று 'சிஸ்கோ' என்னும் தொழில்நுட்ப நிறுவனம் கணித்திருக்கிறது. டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்ப வசதிகளோடு பிறக்கும் குழந்தைகள் மற…
-
- 0 replies
- 521 views
-
-
தனிவரிசை ஜெயமோகன் சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான் சீர…
-
- 2 replies
- 830 views
-
-
அதிகாரம் என்பது நல்ல சொல் ஆர். அபிலாஷ் வேதியலில் சில வாயு அல்லது அமிலங்களை நிறமும் குணமும் அற்றது என்பார்களே அப்படி ஒரு வஸ்து தான் அதிகாரம். இதை புரிந்து கொள்ள எனக்கு வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி தேவைப்பட்டது. இதை சரியாக அறிந்து கொள்ளாததனாலே எனக்கு அதிகாரத்தில் எனக்கு மேலேயும் கீழேயும் உள்ளவர்களோடு உறவை தக்க வைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இது என்னை நிம்மதியற்றவனாக, உலகத்தை, மனிதர்களை வெறுப்பவனாக என்னை மாற்றியது. என்னுடைய நிலைக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் அப்பா. அவர் எப்போதும் அதீதமான இரட்டை நிலைகளில் இருப்பார். ஒன்று அதிகாரத்தை பொழிவார். அல்லது அன்பை பொழிவார். இரண்டிலும் திக்குமுக்காட செய்வார். பன்னிரெண்டு வயதில் இருந்தே அப்பாவுடனான உறவு எனக்கு சிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதி…
-
- 0 replies
- 572 views
-
-
பிரான்பற்று வேள்வியில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை புலம்புகின்றது கேட்பீராக….? செய்திகள் | இலங்கைச் செய்திகள் Saturday, May 9, 2015 by admin இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன. இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய் தலைவேறு முண்டம் வேறாய் துடிதுடித்து கிடந்த ஒரு கடா ஆடு தன் வாழ்க்கையையும் துன்பத்தினையும் அந்த ஆலய சந்நிதானத்தில் அதாவது அந்தக்கடாவின் பலிபீடத்தில் கிடந்தவாறு தன் ஆற்றாமையை சொல்லி புலம்புகின்றது. அவ்வளவு சனக்கூட்டத்திற்கு மத்தியிலும் அதன் புலம்பல்கள் மட்டும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன. எனதருமை அன்புத்த தமிழா! உன் நம்பிக்கைகள் கண்டு எமது இனம் இன்று வெட்கித்தலைகுணிகின்றது. மன்னித்துக்கொள்ளுங…
-
- 4 replies
- 781 views
-
-
சும்மா இருப்பவள் ~ லறீனா ஏ. ஹக் ~ சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று. என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு ‘நிறுவனம்’ என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப்பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. நம்முடைய சமூக அமைப்பில் கணவன் – மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்ட…
-
- 0 replies
- 886 views
-
-
-
- 1 reply
- 983 views
-