Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=2] [size=4]இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.[/size][/size] [size=2] [size=4]ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? [/size][/size][size=2] [size=4]நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது,…

    • 0 replies
    • 1.1k views
  2. இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…

  3. உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல. படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE 1966ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறவில்லை என்கிற உண்மையான ஏக்கத்தை காட்டும் வரைகலை படமும் அல்ல. …

  4. நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ? சிறுவர் துஷ்பிரயோகம் தொடுகையிலேயே ஆரம்பமாகின்றது எப்போதும் மழலை மொழியில் செல்லக் கதை சொல்லி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த உங்கள் சின்னஞ்சிறு மகள் செல்வி, இப்போது ஏதோவொரு அச்சத்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறாள். ஏனென்று கேட்டால் மிரண்டுபோய்ப் பார்க்கிறாள். எப்போதும் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுப் பாடத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இவ்வாறான அறிகுறிகள்தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை மணியென்று எடுத்துக் கொள்ளவேண்டும்! …

  5. ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்…

  6. சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள் [size=1] [size=4]இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.[/size] [size=4]உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.[/size] [size=4]இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அ…

    • 0 replies
    • 568 views
  7. நீ உன்னை அறிந்தால். "தன்னை அறிதல்”” என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும் “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர். “நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில்…

  8. கடவுள் பெயரால் ஒரு மோசடி மு.கு 1: இது மிக சீரியஸான பதிவு. போரடிக்கும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன் மு.கு 2: இங்கே கடவுள் என்ற பதம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளை மட்டும் குறிக்கவில்லை. கடவுள். என்ன ஒரு உன்னதமான ஒரு சொல்!! நம்புபவன், நம்பாதவன் எல்லோருடைய எண்ணங்களுமே இவரை சுற்றியே பெரும்பாலும் இருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடவுள் என்ற சொல்தான் மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு சொல். உலகிலேயே அதிகம் பாராட்டப்பட்டவர் கடவுள். அதிகம் இகழப்பட்டவர் கடவுள், அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் கடவுள்தான். இப்படி எங்கும் நிறைந்திருப்பதால்தான் அவரை கடவுள் என்கிறார்களோ என்னவோ? இப்போது நான் சொல்வது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றிய ஆராய்ச்சி அல்ல.…

  9. இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெள…

  10. Started by nunavilan,

    இறுகப்பற்று

    • 0 replies
    • 889 views
  11. சிந்தனைதான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி.எனவே மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு. ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் இலட்சியத்தைப் பிடித்துக்கொள்.ஆயிரம் தடவைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் முயற்சி பண்ணிப்பார். வலிவுடன் இரு.எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டு அப்பால் செல்.விடுதலை பெறு. எந்த வேலையும் அற்பமானதல்ல.தனது மனதுக்குப் பிடித்த காரியத்தை ஒரு முட்டாள் கூட செய்து முடிக்க முடியும்.ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்பவனே புத்திசாலி. உன் தவறுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்லாதே.உன் கால்களிலேயே நில்.முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள். நீ இன்றிருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.நீ எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ,அப்படியே ஆவதற்கான ஆற…

  12. அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-14 09:46:05| யாழ்ப்பாணம்] சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின…

    • 0 replies
    • 469 views
  13. வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல் If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்த…

  14. இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகள…

    • 0 replies
    • 938 views
  15. தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள் தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள் உண்டி சுருங்­கு­தல் பெண்டிர்க்கழகு’ எனும் பழ­மொழி எங்­கள் பெண்­க­ளைச் சுட்டியே அமைந்ததொன்று. ஆண்­க­ளுக்கு வழங்கி மீத­மாக, மிஞ்­சிப்­போ­கிற உண­வைத்­தான் வீட்­டி­லுள்ள பெண்­கள் உண்ப தென்பது தமிழ்ப் பாரம்­ப­ரிய, பண்­பா­டாக இருக்­கி­றது. இத­னால் வீட்­டுப் பெண்­க­ளுக்­குச் சரி­யான, நிறை­வான, திருப்­தி­ யான உணவு கிடைப்­ப­தில்லை. இதனை அடி­யொற்­றியே மேற்­படி பழ­மொழி வழக்­கி­ல் அமைந் ததா­கக் கர…

  16. சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்: *பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும். *பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள். *மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை. *அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலு…

  17. மக்கள் வாழ்வது நாடு! [size=3][size=4]மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்) மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே! மாக்கள் வாழ்வது நாடாகுமா..? சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்... வள்ளுவப் பெருந்தகையே! நாடு என்பது எது........? வள்ளவர்.. சுருக்கமாகச் சொன்னால், உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு (குறள்-734.) அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.[/size] [size=4]வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது, பசி – தலை விரித்தாடுகிறது. பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்…

  18. மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தான் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் எந்த மனிதனுக்கும் வாழ்க்கையின் அத்தனை கணங்களும் முற்றுமுழுதாக மகிழ்ச்சியாக இருந்தது கிடையாது. மனிதர்கள் பலரின் வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் ஒரு தராசில் இட்டால் துன்பப்பக்கம் தாளாத மனிதர்களைக் காணவே முடியாது.எனினும் எங்கள் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை துன்பங்களாகவும் இன்பங்களாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகின்றது. சிலர் துன்பமாக நோக்கும் விடயங்களைச் சிலர் இன்பமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். இன்பமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பல விடயங்களையே துன்பங்களாக நினைத்து எதிர்கொள்ளும் பல மன…

    • 0 replies
    • 1k views
  19. உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும் பெற்றோரா. இணையப் பாவனைக் குறித்தும் அதன் நன்மை தீமைகள் குறித்தும் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா ? அவற்றை உங்களது குழந்தைகளோடு பேசி விட்டீர்களா? அதே போல இன்று பெருமளவு சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவது வெகு இயல்பாகி விட்டது. அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பினை எப்படி நல்ல பெற்றோராக நீங்கள் தடுக்கப் போகின்றீர்கள். பேஸ்புக் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பேஸ்புக் மன அழுத்தம் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் க…

  20. “எக கே கேம” (Eka Ge Kaema - එකගෙයි කෑම) என்பதை தமிழில் “ஒரே வீட்டில் புசித்தல்” என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு ஒரே பெண்ணை மணம்முடித்து வைப்பது சிங்கள சமூக அமைப்பில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மத்தியில் காலாகாலமாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வாழ்க்கைமுறை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் சகோதர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் மணமுறை நெடுங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக நிலவி வந்திருக்கிறது. அந்தப் பெண் ஆண் சகோதர்களுடன் அன்பையும், பாலுறவையும் பகிர்ந்துகொள்வார். அதேவேளை ஆண்கள் “பொது மனைவி” என்று கூறுவதை தவிர்த்தார்கள். அதற்குப் பதிலாக “ஒரே வீட்டில் உண்கிறோம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். அதுபோல மனைவி …

  21. அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு, *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு. *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார். *'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி. *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள். *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து. *ரகசியங்களைக் காப்பாற்று. *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே. *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள். *உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள். *தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி *ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே. *கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்ப…

  22. தமிழ் நாட்டு மக்களை அரசியல் கட்சி தலைவர்களின் தொலைக்காட்சிகள் சிந்திக்க விடாமல் குளப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் சமூக நலன் சார்ந்து ஓரளவு வக்கிரமற்ற தரமான நிகழ்ச்சிகளை தரவல்லதாக வட இந்திய ஸ்ரார் குழுமத்தின் விஜய் ரிவி இருந்துவந்தது. விஜய் ரீவி யில் இடம்பெறும் "நீயா நானா" நிகழ்ச்சி அதிகமாக மேல்த்தட்டு சமூகம் சார்ந்து கல்வி அறிவுடைய மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் நிகழ்ச்சியை நடாத்தும் கோபிநாத் விவேகமாக யதார்த்தமாகவும் நிகழ்ச்சியை கொண்டுசெல்வது பாராட்டக்கூடியதாகவும் பிரமிக்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒருவருடமாக இடை நிறுத்தப்பட்டு இருக்கும் " கதையல்ல இது நிஜம்" நிகழ்ச்சி மூலம் விஜய் ரிவிக்கு சமூக நோக்கம் இருப்பதையும் காட்டியது விஜய் ரீவி நேரடியாக அரசியல் கட…

  23. முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன் உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான். கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே, உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான். போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே, உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான். பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே, தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும், பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும் தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான். நன்றி; தென்றல்

  24. கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு கேத்தி பியாமன்ட் முயற்சிகள் மேற்கொண்டபோது, கருத்தரிப்பதற்கு மிக சிறந்த காலம் எது என்பதை அறிய, சந்தையில் கிடைத்த பல கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்களை(செயலிகளை) நாடினார். படத்தின் காப்புரிமைKATHY BEAUMONT Image captionகேத்தி பியாமன்ட் அவருடைய கணவர் கிரிஸ் கருத்தரிப்பு காலக்கணிப்பை வழங்கும் மென்பொருளை பயன்படுத்த தீர்மானித்தனர். அவருடைய உடல் வெப்பத்தை ஒவ்வொரு நாளும் அளவிட்டு "ஃபெர்ட்டிலிட்டி ஆப்" என்ற மென்பொருளில் சேர்த்து வைத்தார். ஆனால். சீக்கிரமாகவ…

  25. பச்சிளங் குழந்தைகள் மீது தந்தையரின் அக்கறை கற்றல் திறனை அதிகரிக்கும்: ஆய்வு முடிவில் தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.